இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதல் அமைசர் வரதராஜப்பெருமாள் பேட்டி வசந்தம் தொலைக் காட்சியில்
Category: கட்டுரைகள்
Articles
திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் எப்போதும் எட்டாப் பழத்துக்கு கொட்டாவி விடும் நபராகவே உள்ளார்.
அதற்கான காரணம் அவருக்கு அரசியல் நெகிழ்வுத் தன்மை அறவே இல்லாதவர் எப்போதும் தேசியம் தேசியம் தேசியம் என்று கூக்குரல் இடும் அவர் அதை எவ்வாறு பெறமுடியும் என்று கேட்டால்? அவருக்கு பதிலளிக்கமுடியாது. ஏனேனில் அவர் பேசும் தேசியம் அவர் சுயமாக கேட்கும் விடயமில்லை. அவரை வெளியில் இருந்து இயக்கும் பினாமிகளுடைய கோரிக்கை அதிலிருந்து அவர் விடுபடவும் முடியாது. (“திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் எப்போதும் எட்டாப் பழத்துக்கு கொட்டாவி விடும் நபராகவே உள்ளார்.” தொடர்ந்து வாசிக்க…)
கந்துவட்டி கனடா
கனடா பலருக்கு சொர்க்க பூமி.மேற்கு அய்ரோப்பிய நாடுகள் ஜனநாயக நாடுகள்.வளர்ச்சி அடைந்த நாடுகள்.இப்படித்தான் உலக மக்களின் கற்பனை. நான் மிக வறிய குடும்பத்தில் ஒரு கிராமத்தில் பிறந்தவன்.குடிசை வீடு.ஏதோ சாப்பாடு கிடைக்கும் .மண் தரையிலோ இல்லை மரங்களின் கீழோ நிம்மதியாக உறங்க முடியும்.எங்களைப் போன்றே பலரது வாழ்க்கை.
பெண் தலைமத்துவ குடும்பங்கள்
சுவர்களின் ஓரங்களில் உட்கார்ந்து பெண்தலைமைத்துவக் குடும்பங்களுக்கு உதவ முடியவில்லையே என்றும் அவர்களை யாரும் கவனிக்கவில்லை என்றும் ஒப்பாரி வைக்கும் எமது உறவுகளே மீனைக் கொடுப்பதற்குப் பதிலாக மீன்பிடிக்க கற்றுக்கொடுப்போம் என்ற பழமொழிக்கு ஏற்ப கைகொடுப்போம் என்ற அமைப்பு இலங்கை முழுவதிலும் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் 31ஆம் திகதிவரை சிறு கைத்தொழில் மற்றும் குடிசைத் தொழிலுக்கான பயிற்சிகளை இலவசமாக வழங்க முன்வந்துள்ளனர். இந்த காலப் பகுதியில் தங்குமிடமும் உணவும்கூட இலவசமே.
கூட்டமைப்பின் வெற்றியை உறுதி செய்த பேரவை
(புருஜோத்தமன் தங்கமயில்)
காதலோ, கல்யாணமோ நிலைத்து நீடித்து, வாழ்க்கையை வளமாக்குவதற்கு சம்பந்தப்பட்ட இருவருக்கும் இடையில் பரஸ்பர நம்பிக்கையும் விட்டுக்கொடுப்பும் அவசியம். மாறாக, தரகர்களின் தேவைகளுக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ அவசர அவசரமாக முன்னெடுக்கப்படும் திருமணங்கள், சின்னச் சின்ன பிரச்சினைகளுக்காகவே முறிந்து போயிருக்கின்றன. இது, சம்பந்தப்பட்ட இருவரின் வாழ்க்கையை மாத்திரமல்ல, அந்தக் குடும்பங்களின் நிம்மதியையும் நிர்க்கதியாக்கி விடுகின்றன. ஆனால், தரகர்களோ இன்னொரு திருமணத்தைச் செய்து வைத்து, தரகுக் கூலியைப் பெறுவதில் கவனமாக இருப்பார்கள். அவர்களிடம் சென்று, முறிந்துபோன திருமணம் பற்றிப் பேசிக்கொண்டிருக்க முடியாது. அவர்களும், அது பற்றி அலட்டிக்கொள்ள மாட்டார்கள்.
(“கூட்டமைப்பின் வெற்றியை உறுதி செய்த பேரவை” தொடர்ந்து வாசிக்க…)
கனடாவில் “ வேட்கை “ !?
முன்னாள் தமிழ் ஈழ விடுதலை புலிகள் உறுப்பினர், பின்பு கருணாவுடன் இணைந்து தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவர், தற்காலிகமாக இணைந்திருந்த வடக்கு கிழக்கு மாகாணத்தை மகிந்த அரசு நீதிமன்ற துணை கொண்டு பிரித்தபின் நடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் வென்று முதல் அமைச்சர் ஆனவர், இன்று கொலை குற்றம் சாட்டப்பட்டவராக தடுப்பு காவலில் இருப்பவர் என பலமுகம் கொண்ட பிள்ளையான் என அறியப்படும் சந்திரகாந்தன் அவர்களால் எழுதப்பட்ட அவரது அனுபவம் தான் “ வேட்கை “ எனும் அவரின் அவரின் அனுபவ குறிப்பு.
காரைதீவு மக்களின் ஆணையை துஷ்பிரயோகம் செய்கின்றது மகா சபை! சுதந்திர கட்சி, ஈ. பி. ஆர். எல். எப் தனி வழியில் போட்டியிட திட்சங்கற்பம்
வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் மக்கள் வழங்கிய ஆணையை தமிழ் தேசிய கூட்டமைப்பு துஷ்பிரயோகம் செய்து நடப்பது போல காரைதீவு மக்கள் வழங்கி உள்ள ஆணையை காரைதீவு மகா சபை துஷ்பிரயோகம் செய்வதை கண்கூடாக காண முடிகின்றது என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளரும், காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான செல்லையா இராசையா, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் காரைதீவு பிரதேச அமைப்பாளரும், காரைதீவு பிரதி சபையின் முன்னாள் பிரதி தவிசாளருமான வீரகத்தி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூட்டாக விடுத்து உள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளார்கள்.
சைக்கிளும் உதயசூரியன் சின்னமும்,
மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்ற மறுபிறவி எடுக்க தயாராகும் உதயசூரியனின் பின்னால் இந்தியாவின்
கொள்கைவகுப்பாளர்கள் பிரசவம் பார்ப்பதாக அறியமுடிகிறது,இந்தியாவை நேரடியாக பகைத்துக்கொள்ளாது பயணிப்பது என்பது இராஜதந்திரம்,இந்தியா எமது சனநாயாக தேர்தலில் யார் எப்படி,எவ்வாறு செயற்படவேண்டும் என முடிவு எடுப்பதற்கு அனுபமதிப்பதென்பது வேறு,ஒன்று இராஜதந்திரம்,மற்றையது அடிமைத்தனம்,தமிழர்களாகிய நாம் அடிமைத்தனத்திற்கு ஒருபோதும் இசைந்துபோககூடாது,அந்தவகையில்
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் சிந்திப்பது சரியானதாகவே தெரிகிறது,அவர்கள் அவ்வாறு நினைப்பதற்கு நியாயமானதும்,வலுவானதுமான காரணிகள் இருப்பதும் நிதர்சனமாகும்,
குமரன் பத்மநாதன் வௌிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி !
KP என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் வௌிநாடு செல்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. குமரன் பத்மநாதனுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தாக்கல் செய்திருந்த மனுவை நிராகரித்து நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
(“குமரன் பத்மநாதன் வௌிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி !” தொடர்ந்து வாசிக்க…)
என்ன நடக்கின்றது….?
கருணாகரன் சிவராசா – வருசத்துக்கு முந்தி நிராகரிக்கப்பட்ட அல்லது கைவிடப்பட்ட சைக்கிள் சின்னமும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசும்
35 வருசத்துக்கு முந்தி நிராகரிக்கப்பட்ட அல்லது கைவிடப்பட்ட வீட்டுச் சின்னமும் இலங்கைத் தமிழரசுக் கட்சியும்
30 வருசத்துக்கு முந்தி முந்தி நிராகரிக்கப்பட்ட அல்லது கைவிடப்பட்ட உதய சூரியன் சின்னமும் தமிழர் விடுதலைக் கூட்டணியும்தான்
மீண்டும் தமிழரின் தலை விதியைத் தீர்மானிக்கப்போகின்றன என்றால்…?
இடையில் நடந்தது என்ன?
அதற்கான விலை என்ன?
அவற்றுக்கான மதிப்பு என்ன?