மார்கழி 13

ஒரு குளத்தின் அருகே மேய்ந்துகொண்டிருந்த ஆட்டுக்குட்டியை கண்ட ஒநாய் ஒன்று அதனை கொன்று தின்றுவிட வேண்டுமென்று அவா கொண்டது. அதற்கான ஒரு உபாயத்தை வகுத்துக்கொண்டது. ‘குளத்தை கலக்கி நான் நீர் அருந்த முடியாதபடி செய்துவிட்டாய்’ என்று ஆட்டுக்குட்டியை பார்த்து கத்தியது. ‘குளத்தின் பக்கமே செல்லவில்லை’ என்று பதறியது ஆட்டுக்குட்டி அப்போ உனது சகோதரன் தான் நான் தண்ணீர் அருந்த முடியாதபடி செய்திருக்கிறான்’ என்று ஆட்டுக்குட்டியை அதட்டியபடி நெருங்கியது ஒநாய். ‘எனக்கு சகோதரர்களே கிடையாது’ என்று உண்மையை பவ்வியமாய் சொன்னது ஆட்டுக்குட்டி. ‘‘ஓ! அப்போ நிச்சயமாய் உனது தந்தையாhர் தான் நான் தண்ணீர் அருந்த முடியாதபடி செய்திருக்கிறார் என்பது உறுதியாகிவிட்டது’’ என்று கூறி ஆட்டுக்குட்டியை கொன்று புசித்து தனது ஆசையை தீர்த்துக்கொண்டதாம் ஓநாய்.

(“மார்கழி 13” தொடர்ந்து வாசிக்க…)

மாட்டின் வீதியில் நடந்த கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் கூட்டத்தில்…..

05ம் திகதி மாட்டின் வீதியில் நடந்த கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் கூட்டத்தில் நடந்ததாக கூறப்படும் சில சுவாரசியமான சம்பாசனைகள் :
₹ முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று இரண்டு சபைகளையும் தமிழரசுக்கட்சி தவிர்ந்த எதற்கும் விட்டுக்கொடுக்க முடியாதென்றார் சிவமோகன். அதுகூட பரவாயில்லை. அதற்கு அவர் கொடுத்த விளக்கம்தான் எல்லோரையும் சிரிக்க வைத்தது. “புதுக்குடியிருப்பில் சினிமா நடிகர்களை அழைத்து ஒரு நிகழ்ச்சி நடத்தினேன். பல இலட்சம் செலவானது. நீங்கள் வெல்லவோ நான் காசு செலவழித்தேன்?“ என மற்ற கட்சிகளை பார்த்து கேட்டார். (“மாட்டின் வீதியில் நடந்த கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் கூட்டத்தில்…..” தொடர்ந்து வாசிக்க…)

கூட்டமைப்பு உருவாக்கம்- சில நேரடித் தகவல்கள்

2004ஆம் ஆண்டு கொள்பிட்டி அல்விஸ் பிளேஸில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் ஆனந்த சங்கரியுடன் முரண்பட்டு அடி தடி ஏற்பட்டது. (செய்தியாளராக இருந்ததால் அடிதடி சண்டையை என்னால் நேரில் பார்க்க முடிந்தது)
இறுதியில் பொலிஸாரே விலக்குப் பிடித்தனர். அதன் பின்னர் சின்னம் குறித்து எழுந்த பிரச்சினையில், அமரர் ரவிராஜ் யோசனையின் படி வீட்டுச் சின்னம் தெரிவானது. பின்னர் ஆனந்த சங்கரி, முகுந்தன் ஆகிய ஒரு சிலரைத் தவிர, தமிழர்விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள் பலரும் தமிழரசுக் கட்சியில் இணைந்தனர்.

(“கூட்டமைப்பு உருவாக்கம்- சில நேரடித் தகவல்கள்” தொடர்ந்து வாசிக்க…)

பாசிஸ்டை தலைவனாகவும் அவனுடைய அமைப்பை ஏக பிரதிநிதிகள் என ஏற்றுக்கொண்ட TNA ????

1990 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரை இலங்கையில் இருந்து செயல்பட்ட அனைத்து தமிழ் அரசியல் அமைப்புகளும் ஒன்றில் புலி பாசிசத்துக்கு சார்பாகவோ அல்லது அரச பாசிசத்துக்கு சார்பாகவோ இயங்கியது தான் வரலாறு. அதுதான் யதார்த்த சூழ்நிலை. எனவே TNA அன்று புலி பாசிசத்தை முற்று முழுதாக ஏற்றுக்கொண்டார்களென்றோ அல்லது PLOTE , ஈபிடிபி, EPRLF (P ) இலங்கை அரச பாசிச நடவடிக்கைகளை முற்று முழுதாக ஏற்றுக்கொண்டார்கள் என்றோ அர்த்தம் இல்லை.

(“பாசிஸ்டை தலைவனாகவும் அவனுடைய அமைப்பை ஏக பிரதிநிதிகள் என ஏற்றுக்கொண்ட TNA ????” தொடர்ந்து வாசிக்க…)

குஜராத் இறுதி சுற்று: பா.ஜ.கவுக்கு காங்கிரஸ் கொடுத்த குஜராத் கௌரவம்

(எம். காசிநாதன்)

அனல் பறக்கும் பிரசாரத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், இரு கட்டங்களாக நடைபெறும் தேர்தல், இறுதிக் கட்டத்துக்கு வந்திருக்கிறது.  பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தால், 22 ஆண்டு கால பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சிக்கு, குஜராத்தில் மிகப்பெரிய சவாலாக அமைந்து விட்டது. தேர்தல் கணிப்புகள் காங்கிரஸுக்கும் பாரதீய ஜனதாக் கட்சிக்கும் ‘குரல்வளையைப் பிடிக்கும்’ அளவுக்கு சரிக்குச்சமானமான போட்டி என்றாலும், பா.ஜ.க தரப்பில், பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று விடலாம் என்றே இன்னும் கருதப்படுகிறது.

(“குஜராத் இறுதி சுற்று: பா.ஜ.கவுக்கு காங்கிரஸ் கொடுத்த குஜராத் கௌரவம்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆசனப்பங்கீட்டு விபரங்கள்

நேற்றுக் காலை 11 மணி தொடக்கம் மாலை 3 மணிவரை சந்திப்பு நடந்தது. எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஐயா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன், புளொட் தலைவர் சித்தார்த்தன் அண்ணர், தமிழரசுக்கட்சி தலைவர் மாவை.சேனாதிராசா அண்ணர், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள், ரெலோ செயலாளர் நாயகம் நல்லதம்பி சிறீ காந்தா அண்ணர் அவர்கள், எம்.பி வியாழேந்திரன் , எம்.பி சுமந்திரன் , ஆர்.இராகவன், மாகாணசபை உறுப்பினர்களான விந்தன் கனகரட்ணம், சிவாஜிலிங்கம். வினோநோகராதலிங்கம், இந்திரகுமார் பிரசன்னா, கோவிந்தன் கருணாகரம் ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர்.

(“தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆசனப்பங்கீட்டு விபரங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

பாலகுமார்

மிகவும் நல்ல மனிதர் தனிப்பட்ட முறையில் என்றால்….? எப்படி புலிகளுடன் இணைந்து அவர்கள் செய்த ஜனநாயக மறுப்புக்களுக்கும் பாசிச செயற்பாடுகளுக்கும் துணை போய் இதற்கான நியாயங்களையும் செய்து கொண்டிருந்தார். சரி புலிகள் மட்டும் தான் களத்தில் நின்று போராடினார்கள் (மற்றவர்களைப் போராட விடாமல் புலிகள் தடுத்தார்கள் என்பதை துப்பியல் நிகழ்வாக எடுத்தாலும்) இந்நிலையில் அவரால் என்ன செய்ய முடியும் போராடுபவர்களுடன் இணந்து தனது உயிரையும் காப்பாற்றி ‘போராடினார் என்று ஒரு வாதத்திற்கு வைத்தாலும்…. ஈழவிடுதலை அமைப்புக்கள் உருவாக்கிய முதல் ஐக்கிய முன்னணி ஈழத் தேசிய விடுதலை முன்னணி(ENLF)யில் புலிகள் இணைந்த பின்பு அவர்களின் பக்கமே நின்று மாற்று இயக்கங்களை புலிகள் அழிக்க முற்பட்ட போதும், இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்பான கால கட்டங்களில் சகல அமைப்புகளும் மீண்டும் செயற்படக் கூடிய ஜனநாயக சூழலிலும் புலிகளின் உளவு அமைப்பாகவும் செயற்பட்டு புலிகளை மட்டும் வளர்த்துவிட ஏன் செயற்பட்டார்.

(“பாலகுமார்” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கில் வித்யா.. கம்பஹாவில் சேயா.. கொழும்பில் இவர்களா?..

பர்தாவுக்கு உரிமை குரல் கொடுக்கும் முஸ்லிம் சமூகம் இப்பதினெட்டு 18 இஸ்லாமிய சிறுமிகளின் துஸ்பிரயோகத்திற்கு எதிராக குரல் கொடுக்காதது ஏன்?..
(“வடக்கில் வித்யா.. கம்பஹாவில் சேயா.. கொழும்பில் இவர்களா?..” தொடர்ந்து வாசிக்க…)

தாயக தேர்தல் கள நிலமை

தமிழ் வாக்காளர்கள் பெரும்பாலானோரின் நிலை – தமிழ்த் தேசியம், பலமான அரசியல் சக்திகள் (ஏக பிரதிநித்துவம்) என்பதாக உள்ளது.
வடக்கில் தமிழ் தேசியத்திற்கு எதிர்ப்பு அல்லது வேறு காரணங்களால் தமிழ் தேசியத்திற்கு அப்பாலன ஆதரவும் இருந்தே வருகிறது(டக்ளஸ்,விஷயகலா,அங்கஜன்)
கிழக்கில் தமிழ்த் தேசியம் என்பது முஸ்லிம் எதிர்ப்பையும் கொண்டது… சில இடங்களில் இதுவே பிரதான நிலைப்பாடு.
தீவிர தமிழ் தேசியவாதம் ஏன் மக்கள் ஆதரவைப் பெறவில்லை என்பது முக்கியமான விடயம்.

(“தாயக தேர்தல் கள நிலமை” தொடர்ந்து வாசிக்க…)

சுமந்திரன் சுத்துமாத்து!

செய்தி- ஆயுதக்குழுக்கள் தமிழ்தேசியக்கூட்டமைப்பில் இருந்து தாராளமாக வெளியேறலாம்- சுமந்திரன்

சுமந்திரன் அவர்களே!

இத்தனைநாளும் கூட இருக்கும்வரையில் தெரியவில்லை. இப்போது அவர்கள் பிரிந்துபோகும்போதுதான் ஆயுதக்குழுக்களாக உங்களுக்கு தெரிகிறதா? (“சுமந்திரன் சுத்துமாத்து!” தொடர்ந்து வாசிக்க…)