பிரபாகரனுக்கே ஆப்பு

கிளிநொச்சியில் நடக்கும் தகிடுதத்தங்கள்!
(காந்தரூபன் அறிவுச் சோலைக்கு நேர்ந்த கதி)

–     கருணாகரன்

விடுதலைப் புலிகள் இயக்கத்தை மகிந்த ராஜபக்ஸதான் தோற்கடித்தார் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கக்கூடும். இல்லையில்லை, இலங்கைப் படைகளே புலிகளைத் தோற்கடித்தன என்று சிலர் சொல்லலாம். சர்வதேச சமூகமே புலிகளைத் தோற்கடித்தது என்று சொல்வோரும் உள்ளனர். இதெல்லாம் உண்மையாக இருக்கலாம்.

(“பிரபாகரனுக்கே ஆப்பு” தொடர்ந்து வாசிக்க…)

மாவீரர் நினைவேந்தலும் “போராளிகளின்” இன்றைய நிலையும் 

தமிழ்தேசத்தின் மீதான ஒடுக்குமுறைக்கெதிராக தமிழ் தேசத்தின் காவலர்களாக மக்களின் உரிமைக்காகப் போராடி மடிந்த அனைத்துப் போராளிகளும் தமிழ் மக்களின் வணக்கத்திற்குரிய தமிழ் தேசிய வீரர்கள். அந்தவகையில் தமிழ் தேசத்தின் தேசிய உரிமைக்கான போராட்டத்தில் பெரும் பங்காற்றிய தமிழீழ விடுதலை புலிகளின் படையணி வீரர்களின் நினைவு தினத்தில் அவர்களுக்கு எமது வீரவணக்கத்தை செலுத்துகின்றோம். புலிகள் வழிவந்த போராளிகள் நினைவேந்தல் நிகழ்வாக மாவீரர் தினம் கொண்டாடப் படுகிறது. விடுதலைப் புலிகளில் இருந்து உயிர் நீத்த போராளிகள் உள்ளடங்கலாக தமிழ் தேசத்திற்காக உயிர் கொடுத்த அனைத்து அமைப்புகளையும் சேர்ந்த போராளிகளின் நினைவேந்தலையும் பொது நாள் ஒன்றில் கொண்டாட தமிழ் சமூகம் இன்னும் தன்னை புடம்போட வேண்டிய நிலையிலேயே உள்ளது. (“மாவீரர் நினைவேந்தலும் “போராளிகளின்” இன்றைய நிலையும் ” தொடர்ந்து வாசிக்க…)

பிரித்தானிய அரச குடும்பத்தினரின் காதலுக்கு மரியாதை

(இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)

மிகப் பிரமாண்டமான வளத்தையும் வசதியையும் கொண்ட பிரித்தானிய இளவரசர் ஹரி,இதுவரை பிரித்தானிய அரச பரம்பரை நினைத்தும் பார்க்காத விதத்தில் தனது திருமணத்தை மேகன் மெர்கில் என்ற அமெரிக்க கலப்பு இனப்பெண்ணுடன் நடத்தப் போகிறார். அவரின் மனைவியாக வரவிருக்கும் மெகனின்; தாய்; ஒருகாலத்தில் பிரித்தானியரால் அடிமைகளாக அமெரிக்காவுக்கு இழுத்துச் செல்லப் பட்ட ஆபிரிக்க கறுப்பு இனப் பரம்பரையைச் சேர்ந்தவர்.தகப்பன் ஒரு வெள்ளையர்- ஐரிஸ்,டச் கலப்புடையவர்.

(“பிரித்தானிய அரச குடும்பத்தினரின் காதலுக்கு மரியாதை” தொடர்ந்து வாசிக்க…)

மறக்கமுடியுமா?

எத்தனை வருடம்? எத்தனை மரணங்கள்? ஒரு அழகான தேசத்தின் அமைதியைக் கெடுத்த கொடியவர்கள். மறக்கமுடியுமா? திருநெல்வேலி சந்தியில் தொடங்கிய வெறியாட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவுற்றது. முடிக்கப்பட்டது. முப்பது வருடங்களாக எவராலும் எங்கேயும் நிம்மதியாக உறங்கவிடாமல் கெடுத்தவர்களை எப்படி மறப்பது? நாங்கள் மரணிக்கும்வரை அவர்களின் பயங்கர வெறியாட்டங்கள் மறக்கமுடியாது.

(“மறக்கமுடியுமா?” தொடர்ந்து வாசிக்க…)

புதுக்குடியிருப்பு மணல் குளம் (சுவாமி குளம்) காப்பாற்றப்பட வேண்டும்

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் ஏ 35 வீதியின் அருகாமையில் சுமார் பத்து ஏக்கர் பரப்பளவை கொண்டதும் வாகனம் போய்வரக்கூடியதும் சுமார் பத்து அடி உயர முமானஅணைக்கட்டை கொண்ட குளம் மணல் குளம் (சுவாமி குளம்)இன்று அக்குளம் தேய்ந்து குளத்துக்குரிய காணிகள் கபளீகரம் செய்யப்பட்டு அரச அதிகாரிகளால் கவனிக்கப்படாமல் இருப்பது ஆச்சரியத்துக்குரியதொன்று. (“புதுக்குடியிருப்பு மணல் குளம் (சுவாமி குளம்) காப்பாற்றப்பட வேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)

வரதராஜபெருமாள் 

எனக்கு இவரைப்பற்றி அதிகம் தெரியாது.தகவல்கள் மூலமாகவே அதிகம் அறிந்திருக்கிறேன்.முன்னாள் பொருளாதார விரிவுரையாளரான இவர் வடகிழக்கு மாகாண முதல்வராக பதவி ஏற்றதன்மூலம் உலகறிந்த ஒரு மனிதராக பிரபலம் ஆனவர். இவரின் கீழே எனது சகோதரன் பணியாற்றிய காலங்களில் இவரைப் பற்றி கூறியிருக்கிறார்.நல்ல நிர்வாகி.நல்ல ஆக்கபூர்வமான செயற்பாட்டாளர்.இவரது செயலாளர் தாஜ் சமுத்திராவில் தங்குவார்.இவரோ செவன் ஐலன்ட விடுதியில் இருந்து கொண்டே வடகிழக்கு மாகாண சபையை எப்படி கட்டி எழுப்புவதென்றே யோசித்தவர். (“வரதராஜபெருமாள் ” தொடர்ந்து வாசிக்க…)

ஈழ வரை படத்துடன்..! கொழும்பில் ஊர்வலம்..?

ஆண்டு 1978 . அப்போது எனது வயது 22. கொழும்பு பல்கலைக்கழக முதலாம் ஆண்டில் காலடி வைத்து மிக சிறிய காலத்துள் கிழக்கில் பெரும் சூறாவளி வீசிய செய்தி வந்தது. ஓடிச்சென்று புனர்வாழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டதை மீண்டும் பதிவதை தவிர்த்து அங்கு நான் பெற்ற அனுபவம் ஒன்றை உங்களுடன் பகிர்கிறேன்.

(“ஈழ வரை படத்துடன்..! கொழும்பில் ஊர்வலம்..?” தொடர்ந்து வாசிக்க…)

கொத்துரொட்டியும் கொள்கை வகுப்பும்

உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துங்கள்
அதைவிட்டு இனியும்……. என்று ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம்

ஆயுத போராட்டம் ஆரம்பித்த போது எதிரிகளை தாக்குவது எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு எமது ஆயுத போராட்டத்திற்கான அங்கீகாரமும் முக்கியம் என்று அனைத்து விடுதலை இயக்கங்களுக்கே உணர்ந்திருந்தன விடுதலை புலிகளை தவிர . (“கொத்துரொட்டியும் கொள்கை வகுப்பும்” தொடர்ந்து வாசிக்க…)

புலிகள் இயக்க மாவீரர்கள் பற்றி பார்வை….

1986 இலிருந்து புலிகள் மற்ற இயக்கங்களை அழித்து பாசிச ஆட்சி எடுத்தபின்னர் புலிகளில் சேர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் (75மூ) 13 க்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட வுநநயெபநச பாடசாலை மாணவர்கள். அதாவது குழந்தைப்போராளிகள். குடும்பத்தில் பாரபட்சம் காட்டப்பட்ட சிறாரும் சாதிய சமூகத்தால் பாரபட்சம் காட்டப்பட்ட தலித்தினரும் காதற் தோல்வி முதலிய பதின்மவயதுப்பிரச்சனைகளால் தற்கொலை மனநிலையோடு பாதிக்கப்பட்டோருமே இந்த பதின்ம பருவத்தில் புலிகளில் இணைந்தோரில் பெரும்பாலானவர்கள்.

(“புலிகள் இயக்க மாவீரர்கள் பற்றி பார்வை….” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ்க் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படும் வாய்ப்புகள் அதிகம்

(வாசுகி சிவகுமார்)

தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியாகப் பெயர்மாற்றம் பெற்றிருக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப் பின் பத்மநாபா அணி, தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், அதனை ஏற்றுக்கொள்ளும், இணைந்த வடக்கு−கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாள், அது குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக் கூறுகிறார். அவர் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய விசேட செவ்வி…

(“தமிழ்க் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படும் வாய்ப்புகள் அதிகம்” தொடர்ந்து வாசிக்க…)