யார் இந்த கௌரி லங்கேஷ்?

லங்கேஷ் என்ற கன்னட வார இதழ் கர்நாடக அரசியல் சமூக வட்டாரங்களில் மிகப் பிரபலமானது. கௌரியின் தந்தையான லங்கேஷ்தான் இந்த இதழைத் தொடங்கினார். அவர் 2000 ஆண்டு மறைந்த பின் கௌரி இந்த இதழுக்கு ஆசிரியர் பொறுப்பேற்று நடத்தி வருகிறார். இப்போது அவருக்கு வயது 55. கர்நாடகத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, மதம், ஜாதி என்று எந்த பாகுபாடும் இல்லாமல் அநியாயம் செய்பவர்கள் பலரைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறது லங்கேஷ் பத்திரிகை. இப்போதைய காங்கிரஸ் அரசின் அமைச்சர்கள் பற்றி நிறைய எழுதியிருக்கிறார் கௌரி. லங்கேஷ் பத்திரிகைக்கு என்றே தனிப்பட்ட வாசகர் கூட்டம் உண்டு. ஒவ்வொரு செய்தியும் தீப்பிடிக்கும். யாரோடும் சமரசம் செய்துகொண்டால் மக்கள் நன்மைக்காக எழுத முடியாது என்பதால், இதுவரை எவ்வித வணிக விளம்பரமும் இல்லாமலேயே பத்திரிகையை நடத்தி வந்தார் கௌரி லங்கேஷ்.

(“யார் இந்த கௌரி லங்கேஷ்?” தொடர்ந்து வாசிக்க…)

வட மாகாண சபை மக்களின் பிரச்சினைகளை தீர்த்துவிட்டதா?

(எம்.எஸ்.எம். ஐயூப் )
வட மாகாண சபையின் ஆளும் கட்சியின், உட்கட்சிப் பூசல் ஓய்ந்தபாடில்லை. நீண்ட காலப் போரினால் அழிந்த வட பகுதியில், தமிழ் மக்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும் அவற்றைத் தீர்க்கத் தமது போட்டியாளர்கள் எதையும் செய்யவில்லை என்றும் ஒருவருக்கொருவர் விமர்சித்துக் கொள்ளும் மாகாணத் தலைவர்களும் தமிழ் மக்களின் பிரதான அரசியல் கூட்டணியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும் இவ்வாறு நடந்து கொள்வது, அவர்களது நேர்மையைப் பெருமளவில் கேள்விக்குள்ளாக்கும் என்று அவர்கள் சிந்திப்பதாகத் தெரியவில்லை.

(“வட மாகாண சபை மக்களின் பிரச்சினைகளை தீர்த்துவிட்டதா?” தொடர்ந்து வாசிக்க…)

நீதி வழங்கத் தவறி விட்டதா நிலைமாறு கால நீதி?

(காரை துர்க்கா)

ஒரு நாடு முன்னேற்றம் அல்லது அபிவிருத்தி அடைந்த தேசம் என்பதை அளவிடப் பொதுவாக பலவிதமான சமூகப் பொருளாதார பண்புக் குறிகாட்டிகள் பயன்படுகின்றன. ஆனாலும், அவற்றில் அந்த நாட்டு மக்கள் அனுபவிக்கும் அமைதி, சமாதானம், நீதியான ஆட்சி பரிபாலனம் ஆகிய அம்சங்களைத் தாங்கிய விடயங்களே மேலாண்மை பெறுகின்றன. அத்துடன், இவ்வாறான பண்புச் சுட்டிகள் இல்லாத வெறும் பொருளாதார அபிவிருத்தியை, முழுமையான முன்னேற்றம் என அர்த்தம் கொள்ள முடியாது.

(“நீதி வழங்கத் தவறி விட்டதா நிலைமாறு கால நீதி?” தொடர்ந்து வாசிக்க…)

நவதாராளவாதமும் சர்வாதிகார ஜனரஞ்சகவாதமும்

(Ahilan Kadirgamar)

இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டு ஏற்பட்ட பூளோக பொருளாதார நெருக்கடி, உலகைத் தொடர்ந்தும் சின்னாபின்னப்படுத்துகிறது. பூகோள பொருளாதார வளர்ச்சி, சர்வதேச வர்த்தகம் ஆகியவற்றின் பாரிய வீழ்ச்சியும், இந்தப் பொருளாதார வீழ்ச்சிக்குச் சான்று பகர்கின்றன. மறுபுறத்தில், இந்த நெருக்கடியின் விளைவுகள், ஜனரஞ்சக சர்வாதிகாரத்தின் தோற்றத்தையும் உறுதிப்படுத்தலையும் நெறிப்படுத்துகின்றன.

(“நவதாராளவாதமும் சர்வாதிகார ஜனரஞ்சகவாதமும்” தொடர்ந்து வாசிக்க…)

பழைய கதை பேசி பல்லக்கில் ஏறுவோர் தான் ஈழத்தின் விதியா?

மீண்டும் ஒரு பத்தியாளர் பத்தவைத்த திரியில் நானும் என் பங்கிற்கு வெடிகொளுத்தும் பதிவு இது. ஒருகாலத்தில் ‘’பழம் பழுத்தால் வௌவால் வரும்’’ என்றவரும் ‘’புலிவரும் முன்னே தமிழ் ஈழம் வரும் பின்னே’’ என்றவரும் மேடைகளில் முழங்கிய வேளையில் கூடவே கொக்கரித்தவர்களில் மாவையும் ஒருவர். பாசறைகள் தயாராகிவிட்டன பயிற்சிகள் தொடங்கிவிட்டன என உணர்ச்சி ஊட்டியவர் இவர்.

(“பழைய கதை பேசி பல்லக்கில் ஏறுவோர் தான் ஈழத்தின் விதியா?” தொடர்ந்து வாசிக்க…)

திருகோணமலையில் மக்களோடு மக்களாய்

03/09/2017 இன்று தமிழர் சமூக ஜனநாயக கட்சி திருகோணமலை காரியாலயத்தில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பத்தின் பெண்களுடன் கலந்துரையாடலும் பதிவுகளும் நடைபெற்றன. அத்துடன் வந்தவர்கள் எல்லோருக்கும் மதிய உணவும் போக்குவரத்திற்கான செலவும் கொடுக்கப்பட்டன. தோழர சுகு தோழர் ஞானசக்தி போன்றவரi;களுடன் திருகோணமலையின் பல் வேறு பகுதிகளைச் சேர்ந்தவரகள் கலந்துகொண்டனர். ஒரு மாற்றத்திற்கான அறிகுறியாக இது காணப்படுவதாக மக்கள் பேசிக் கொண்டனர். திருகோணமலை கடற்கரை வீதியில் அமைந்த தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் காரியாலயத்தில் இந் நிகழ்வு நடைபெற்றது

“கேரள டயறீஸ்“

யாழ்ப்பாணத்தில் வெளியிப்படவுள்ள “கேரள டயறீஸ்“ புத்தகத்தைப்பற்றித் தவறான தகவல்களை சிலர் பரப்பி வருகின்றனர். ஏறக்குறைய இது ஒரு வதந்தியே. மெய்யான அழைப்பிதழை பிழையாக உருமாற்றம் செய்து, தவறான விதத்தில் குழப்பமான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இதற்குப் பின்னால் ஒரு சிறிய குழு செயற்படுகிறது. அந்தக் குழுவின் அரசியல் உள் நோக்கம் மிகக் கீழ்த்தரமானது. வதந்தி எப்போதும் தீமைகளையே விளைவிப்பதுண்டு. அது ஒரு தொற்றுநோய் என்பது சமூக வரலாற்று அனுபவம்.

(““கேரள டயறீஸ்“” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கு கிழக்கு சமூக பொருளாதார வளர்ச்சியின் சிகரங்களை தொடமுடியும்.

சிறு பொறி பெரும் காட்டு தீயை மூட்டும். இலங்கை இந்தியாவின் வளர்ச்சியடைந்த தென் இந்திய மாநிலங்களுக்கு அருகாமையில் இருக்கிறது. இந்த வளர்ச்சியும் இலங்கையின் சமூக பொருளாதார வளர்ச்சியும் நெருங்கிய தொடர்பு பட்டவை என்பதே புவி பொருளாதார அரசியல் யதார்தமாகும். 1.5 மில்லியன் புலம் பெயர் மக்களுடனான சமூக பொருளாதார தொடர்புகள் அதிகமாகும். இங்கு உற்பத்தி சந்தை நடவடிக்கைகள் வேலைவாய்ப்புக்கள். கல்வியில் மறுமலர்ச்சி வாய்ப்புக்கள் கொட்டிக் கிடக்கின்றன. (“வடக்கு கிழக்கு சமூக பொருளாதார வளர்ச்சியின் சிகரங்களை தொடமுடியும்.” தொடர்ந்து வாசிக்க…)

வன்னியிலும் வாகரையிலும் வாடும் மக்களுக்கு ஆதரவளிப்பது யார்?

(எஸ்.கருணாகரன்)

மாவை சேனாதிராஜா தலைமையில், தமிழரசுக்கட்சியின் அணியொன்று கனடாவுக்குப் பயணமாகியுள்ளது. இந்த அணியில், நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா, வட மாகாணசபை உறுப்பினர் ஆனோல்ட், தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான துரைராஜசிங்கம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கனடாவில் உள்ள தமிழரசுக் கட்சி அனுதாபிகள், அபிமானிகள், ஆதரவாளர்கள் போன்றவர்களை, இந்த அணியினர் சந்திக்கச் செல்வதாகவே, அதன் நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(“வன்னியிலும் வாகரையிலும் வாடும் மக்களுக்கு ஆதரவளிப்பது யார்?” தொடர்ந்து வாசிக்க…)

மண்டை தீவு கடல் இழப்பு!  சோகங்களுடன் நானும் இணைந்து கொள்கின்றேன்.

(சாகரன்)

மண்டை தீவுக்கடலில் மூழ்கி மரணித்த அந்த இளைஞர்கள் அனைவருக்கும் எனது அஞ்சலிகள். மிகுந்த வருத்தம் நிறைந்த நிகழ்வு சிறப்பாக அவர்தம் பெற்றோரின் கவலையை நீக்க எம்மிடம் வார்த்தைகள் இல்லை. தவிர்த்திருக்கக் கூடிய இழப்புக்கள். நீரில் மூழ்காதிருக்கும் பாதுகாப்பு கவசங்களை இவர்கள் அணித்திருக்கவில்லை என்பதுவும் எவ்வாறு இந்த களியாட்ட விபத்து நிகழ்ந்திருக்கின்றது என்பதுவும் இங்கு கேள்விகளாகவும் கண்டனங்களாகவும் எம் முன் இருக்கின்றன. உல்லாசப் பயணத்திற்கு அழைத்துச் சென்றவர்களிடம் நீச்சல் ‘நன்கு’ தெரிந்தவர் இல்லையா என்ற கேள்விகளும் பிரதான இடத்தைப் பிடிக்கின்றது. நடக்க தெரிந்த மனிதன் மற்றய உயிரினங்கள் போல் பழகாமலே நீந்தும் இயல்பைக் கொண்டிருப்பதில்லை என்பதினால் நீச்சல் என்பது இங்கு மனிதர்களுக்கு அடிப்படையாக தெரிந்திருக்க வேண்டியதொன்றாகின்றது.

(“மண்டை தீவு கடல் இழப்பு!  சோகங்களுடன் நானும் இணைந்து கொள்கின்றேன்.” தொடர்ந்து வாசிக்க…)