புலிகளின் சிறைச்சாலையில் தமிழ்ப்பெண்கள் (Part 1)

புலிகளின் வதைமுகாம்.
( பெண்களுக்கான பிரத்தியே முகாம்கள்)

அறிமுகம்:
புலிகளிடமுள்ள கைதிகள் பற்றிய விவரங்களின் தொகுப்பு 5-10 வரையான எமது அறிக்கைகளில் வெளிவந்தது. கொடூரமாகவும் தரக்குறைவாகவும் கைதிகள் நடத்தப்படுவதன் கருத்தியல் பின்னணி பற்றியும் இவ்வறிக்கைகளில் அலசப்பட்டது. புலிகள் மக்கள்பாலும் தமது இயக்க உறுப்பினர்கள் தொடர்பாகவும் கொண்டுள்ள மனோபாவம் புலிகளது சமூகப்பார்வை பற்றிய வினாக்களை எழுப்புகிறது.

(“புலிகளின் சிறைச்சாலையில் தமிழ்ப்பெண்கள் (Part 1)” தொடர்ந்து வாசிக்க…)

விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் பயங்கரவாத இயக்கமே: ஐரோப்பிய ஒன்றியம்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்தும் பயங்கரவாத இயக்கமேயாகும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்கிய போதிலும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் தொடர்ந்தும் புலிகள் பயங்கரவாத இயக்கமாகவே பட்டியலிடப்பட்டிருப்பர் என தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

(“விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் பயங்கரவாத இயக்கமே: ஐரோப்பிய ஒன்றியம்” தொடர்ந்து வாசிக்க…)

இளம்செழியன் மீதான துப்பாக்கி பிரயோகவும் இதன் அதிர்வலைகளும்.

(சாகரன்)
முதலில் இத் துப்பாக்கிப் பரியோகம் இளம்செழியன் மீது நடாத்தப்பட்டதா? என்பது கேள்விக்குறியாகி உள்ள நிலையில் இதனை வைத்து அரசியல் நடாத்த முற்படும் தரப்பினர் கண்டனத்திற்கு உரியவர்கள் ஆவார. இலங்கைத்; தமிழர்களில் ஒரு பழக்கம் உண்டு உண்மையான பிரச்சனைகளை விட்டுவிட்டு இல்லாத பிரச்சனைகளை முன்னிறுத்தி உண்மையான பிரச்சனைகளை பலவீனப்படுத்தும் செயற்பாடுகள். இது அளம்செழியன் விடயத்திலும் பொய்துப் போய்விடவில்லை. விக்னேஸ்வரனுக்கு மாற்றீடாக இளம்செழியன் என்ற கோஷத்தை வலுப்படுத்த இந்த கொலை முயற்சி நடவடிக்கையை பாவிப்பதை காணமுடிகின்றது. தமிழ் மக்களுக்க ஒரு மாற்றுத் தலமை தேவையே ஒழிய மாற்றுத் தலைவர் தேவை என்பது அல்ல பிரச்சனை. யாரும் இல்லை? என்று அன்று ஒரு விக்னேஸ்வரனை கொண்டு வந்து இன்றுவரை எதனையும் செயற்படுத்தாத நிலமையே சிவி இற்கு பதிலாக இளம்செழியன் என்ன அல்லது இன்னொரு நபர் மாற்றம் ஏற்படுத்தும்.

(“இளம்செழியன் மீதான துப்பாக்கி பிரயோகவும் இதன் அதிர்வலைகளும்.” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் திரு வரதராஜபெருமாள் அவர்களைப் பேட்டி கண்டபோது

திருமதி வாசுகி சிவகுமார் அவர்கள் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் திரு வரதராஜபெருமாள் அவர்களைப் பேட்டி கண்டபோது எழுப்பிய கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதில்கள்;. 23 ஜுலை 2017 தினகரன் வாரமஞ்சரியில் வெளியிடப்பட்டது.
கேள்வி 1:-
பல்வேறு அச்சுறுத்தல்கள், சவால்களுக்கு மத்தியில், குறுகிய காலம் மட்டுமே நீடித்திருந்த இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக இருந்த நீங்கள் அந்த மாகாண சபைக்கும், தற்போதைய மாகாண சபைக்கும் இடையே அரசியல் மற்றும் நிர்வாகரீதியாக காணுகின்ற வேறுபாடுகள் எவை?

(“வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் திரு வரதராஜபெருமாள் அவர்களைப் பேட்டி கண்டபோது” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கு கிழக்கு இணைப்புக்கான தமிழ் மக்கள் முன்வைக்கும் நியாயங்களும்; முஸ்லிம் மக்களின் பொறுப்பும். – அ.அஸ்மின் (வ.மா.ச. உறுப்பினர்)

வடக்குக் கிழக்கு மாகாணங்களின் இணைப்புத் தொடர்பாக வட மாகாண சபை உறுப்பினர் அ. அஸ்மினால் கடந்த ஆண்டு இதே தினத்தில் எழுதப்பட்ட கட்டுரை.

“வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்திற்கு முஸ்லிம் மக்கள் ஒத்துழைக்க வேண்டும்” என்ற அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் தொடர்தேர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற அதே சந்தர்ப்பத்தில் முஸ்லிம் மக்கள் சார்பாக இதுவரை தீர்க்கமான எவ்வித பதில்களும் முன்வைக்கப்படவில்லை. முஸ்லிம் மக்கள் வடக்குக் கிழக்கு இணைப்பு விடயத்தில் பூரண உடன்பாட்டினை இதுவரை வெளியிடவில்லை. இதனை அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான மக்கள் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளும் குழுவிற்கு முன்னதாக குறிப்பாக கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் மிகவும் தெளிவாக எடுத்துரைத்திருப்பதன் மூலம் எம்மால் அறிந்துகொள்ள முடியுமாக இருக்கின்றது.
எனினும் சமூக வலைத்தளங்கள் மற்றும் இணைய ஊடகங்களில் வடக்குக் கிழக்கு இணைவு விடயத்தில் முஸ்லிம் மக்கள் எதிர்மறையாக நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை புரிந்துகொள்ளமுடிகின்றது, அத்தோடு சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைவுக்கு உடன்பட்டு விடுவார்கள் என்ற அச்சமும் சமூகவலைத்தளங்களில் பரவலாக முன்வைக்கப்படுகின்றது. எது எவ்வாறாயினும் மேற்படி விடயத்தை மிகவும் நிதானமாகவும் அறிவுபூர்வமாகவும் சிந்திக்கவும் கருத்தாடவும் தமிழ் முஸ்லிம் சமூகத் தலைவர்கள் முன்வரவேண்டும்.

(“வடக்கு கிழக்கு இணைப்புக்கான தமிழ் மக்கள் முன்வைக்கும் நியாயங்களும்; முஸ்லிம் மக்களின் பொறுப்பும். – அ.அஸ்மின் (வ.மா.ச. உறுப்பினர்)” தொடர்ந்து வாசிக்க…)

ஜூலை 1983: மேலும் ஒரு சம்பவம்

இறந்தவர்களைப் புதைப்பது  ஒரு கலையாகவே வளர்ந்திருந்த எமது காலத்தில்
இந்த நிகழ்வு மட்டும் அழிய மறுத்து எஞ்சியிருப்பதற்குக்
காரணம் ஏதுமில்லை
சத்தியமாகச் சொல்கிறேன்:
நான் உணர்ச்சிபூர்வமானவன் அல்லன்
சித்தம் குழம்பியவனாகவும் ஒருபோதும் இருந்ததில்லை
உங்களைப் போலவே
நானும் உணர்ச்சிகளை வெளிக்காட்டத் தயங்குபவன்
மேலும் அன்றாட வாழ்க்கையிலும்
நான் ஒரு யதார்த்தவாதி
எச்சரிக்கை உணர்வுள்ளவனும்கூட
மறந்துவிடு என்று அரசு ஆணையிட்டால்
உடனடியாகவே மறந்துவிடுகிறேன்
மறப்பதில் எனக்கிருக்கும் ஆற்றல் பற்றி எவருக்குமே ஐயமிருந்ததில்லை
என்னை ஒருவரும் குறை சொன்னதும் கிடையாது.

(“ஜூலை 1983: மேலும் ஒரு சம்பவம்” தொடர்ந்து வாசிக்க…)

கொங்கோ: அலைபேசியில் வழியும் குருதி

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
இயற்கை வளங்கள் வரமா, சாபமா? என்கிற கேள்வி ஒருவகையில் அபத்தமானது.  ஏனெனில், இன்று உலகளாவிய நிலையில் வளர்ந்துள்ள நாடுகளின் அடிப்படையாக, இயற்கை வளங்களே இருந்தன; இன்னமும் இருக்கின்றன. அந்த வளங்கள் சொந்த நாட்டில் இருந்த வளங்களாகட்டும் அல்லது சுரண்டிய வளங்களாகட்டும் அவையே அந்நாடுகளை வளர்ச்சியின் உச்சிக்குக் கொண்டு சென்றன. சூரியன் அஸ்தமிக்காத சாம்ராட்சியமாக, பிரித்தானியா திகழ்வதற்கு, அவற்றின் கட்டுப்பாட்டில் இருந்த நாடுகளின் இயற்கை வளங்கள் முக்கிய காரணியாகின. இவை, ஏனைய காலனியாதிக்கவாதிகளுக்கும் பொருந்தும். காலங்கள் மாறிவிட்டன. ஆனால், களங்கள் மாறவில்லை. மாறாத களத்தின் நிகழ்காலக் கதைதான் இது.

(“கொங்கோ: அலைபேசியில் வழியும் குருதி” தொடர்ந்து வாசிக்க…)

ஜி-20 மாநாடு: குழப்பத்தில் கதைபேசல்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
குழுக்கள் ஒற்றுமையாலும் பொதுமைப்பட்ட பண்புகளினாலும் கட்டியெழுப்பப்படுபவை. அவற்றின் அடிப்படையே குழு உறுப்பினர்களுக்கிடையிலான பொதுநோக்கு, இணங்கிப் போகும் தன்மை, விட்டுக்கொடுப்பு ஆகியன. அவை சாத்தியமாகாதபோது, அக்குழுக்கள் நெருக்கடியை எதிர்நோக்கும். ஒன்றுக்கொன்று வேறுபட்ட, ஒருவரை ஒருவர் விஞ்ச விளைகின்ற நிலையில் குழுவுக்குள் குழப்பம் விளைவது தவிர்க்கவியலாதது. ஆனாலும் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயல்வது போல், எதையாவது செய்யலாம் என்ற நோக்கில், குழப்பத்தில் உள்ள குழு கூடுவதுண்டு; கதைப்பதுவுமுண்டு. ஆனால், இறுதியில் விளைவதேதும் இல்லை.

(“ஜி-20 மாநாடு: குழப்பத்தில் கதைபேசல்” தொடர்ந்து வாசிக்க…)

சம்மந்தனின் அரசியல் நேர்மை…?

மலையக மக்களை இழிவு படுத்தும் விதமாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கூறியமைக்கு எதிராகத் தமது கண்டனத்தைத் நேற்று முன்தினம் (12.07.2017) வடக்கு கிழக்கு வாழ் மலையக மக்களின் ஒன்றியப் பிரதிநிதிகள் கண்ணியமான முறையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தனிடம் நேரில் தெரிவித்தனர். இதன்போது மேற்படி விடயம் குறித்த தமது கண்டன அறிக்கையையும் சம்மந்தனிடம் பிரதிநிதிகள் கொடுத்திருந்தனர்.

(“சம்மந்தனின் அரசியல் நேர்மை…?” தொடர்ந்து வாசிக்க…)

புதிய அமைச்சர்கள் பழைய எதிர்பார்க்கைகள்!?

வடக்கு மாகாண சபை நீயா நானா நிகழ்ச்சி முடிவுக்கு வந்தபின் இரண்டு அமைச்சர்கள் தமது இராஜினாமா கடிதங்களை முதல் அமைச்சர் வசம் கையளித்து அமைதி காக்கின்றனர். இடையில் யாரை புதிய அமைச்சர்களாக நியமிப்பது என்ற கலந்துரையாடல் தமிழ் அரசு கட்சி காரியாலயத்தில் இடம் பெற்றதாகவும் அதில் திரு ஆணல்ட் அவர்களை கல்வி அமைச்சராக நியமிக்க பெரும் ஆதரவும்   அதே வேளை எதிரணியில் திருமதி அனந்தி  அவர்களையும் அமைச்சராக்கும் அழுத்தமும் வந்ததாம்.

(“புதிய அமைச்சர்கள் பழைய எதிர்பார்க்கைகள்!?” தொடர்ந்து வாசிக்க…)