தனித்து விடப்பட்டுள்ள முன்னாள் போராளிகள்

(கனகலிங்கம் கோபிகிருஷ்ணா)

தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடிய முன்னாள் போராளிகள் பலர், தற்போது நடுத்தெருவில் விடப்பட்டுள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததுதான். இதில், மட்டக்களப்பு, செங்கலடியைச் சேர்ந்த முன்னாள் பெண் போராளியொருவர், சில நாட்களுக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்டார் என அறிவிக்கப்பட்டது. அவரது கணவரும் முன்னாள் போராளி என்று தெரிவிக்கும் செய்தி, கணவர் இறந்த பின்னர், குடும்பத்தைக் கொண்டுசெல்ல இயலாமல், மன அழுத்தத்துக்கு மத்தியிலேயே இந்த முடிவை எடுத்ததாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு, ஆறு வயதில் பிள்ளையொன்றும் உள்ளது.

(“தனித்து விடப்பட்டுள்ள முன்னாள் போராளிகள்” தொடர்ந்து வாசிக்க…)

போட்டோ ரீக்கோ: வங்குரோத்தான அமெரிக்காவின் நவகொலனி

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

நாடுகள் சுதந்திரமானவை. ஒருபுறம் இக்கூற்று உண்மையாக இருக்கிறபோதும், மறுபுறம் இக்கூற்று எல்லாச் சந்தர்ப்பங்களிலும் உண்மையல்ல என்பதை நாமறிவோம். பல நாடுகள் சுதந்திர நாடுகள் போல் தோற்றங் காட்டினாலும் அவை அதன் இயங்குநிலையில் அவ்வாறல்ல. குறிப்பாக கொலனித்துவ ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடைந்த நாடுகள் பல நீண்டகாலத்துக்கு கொலனித்துவ ஆதிக்கவாதிகளின் நலன்களுக்குப் பங்கமில்லாமல் நடந்து கொண்டன. ஆனால் அது என்றென்றைக்கும் ஆனதல்ல என்பதைப் பலநாடுகளில் உருப்பெற்ற தேசிய விடுதலைப் போராட்டங்கள் காட்டி நின்றன.

(“போட்டோ ரீக்கோ: வங்குரோத்தான அமெரிக்காவின் நவகொலனி” தொடர்ந்து வாசிக்க…)

புலம்பெயர் தரப்புகளின் தாயக வருகை; சாதித்தவை எவை?

ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரான கடந்த இரண்டு ஆண்டுகளில் தாயகப் பகுதிகளை நோக்கி வருகை தரும் புலம்பெயர் தமிழ் மக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கின்றது. அதிலும் குறிப்பாக, புலம்பெயர்அமைப்புகளின் பிரதிநிதிகள், கல்வியாளர்கள், செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட தமிழ்த் தேசிய அரசியலில் தாக்கம் செலுத்தக்கூடியவர்களின் வருகை எதிர்பார்க்கப்பட்ட அளவினைத் தாண்டியிருக்கின்றது.

(“புலம்பெயர் தரப்புகளின் தாயக வருகை; சாதித்தவை எவை?” தொடர்ந்து வாசிக்க…)

காளியம்மா…. உயிர் பலி கேட்கும் காளியம்மா….

(சாகரன்)

உயிர் பலிகள் புலிகளால்
.
ரெலோவிற்கு எதிரான ஆயுத கொலைகளை புலிகள் ஆரம்பித்தவுடன் யாழ்ப்பாணத்தில் புலிகள் கிட்டுவின்;; தலமையில் யாழ்ப்பாண வீதி எங்கும் இரவு பகலாக ரோந்தும் காவலும் செய்தனர.; எல்லாப் பொதுமக்களும் விசாரணைக்குள்பட்டனர் சோதனைக்கள்பட்டனர் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டனர் கடல் மார்க்கமாக போராளிகள் தப்பி ஓடுவதற்கான பாதைகளை அடைத்து காவலும் செய்தனர்.

(“காளியம்மா…. உயிர் பலி கேட்கும் காளியம்மா….” தொடர்ந்து வாசிக்க…)

ஈழப் போராட்டத்தில் தோழர் சிறி

(தோழர் க. பத்மநாபா)

1986 இல் எழுதியது

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஒரு பெரும் தூணாக விளங்கிவந்த தோழர் சிறி எம்மிடையே இன்று இல்லாமல் போனது மிகவும் வேதனைக்குரிய ஒன்றாகும். அதனிலும் மேலாக சிறி எப்படி இறந்தார் என்பது உலக நாகரீகத்தின் முன்னால் தமிழினமே வெட்கித் தலைகுனிய வேண்டிய ஒன்றாக அமைந்தது தான் என்னை மிகவும் ஆழ்ந்த வேதனைக்குள்ளாக்குகின்றது.

(“ஈழப் போராட்டத்தில் தோழர் சிறி” தொடர்ந்து வாசிக்க…)

வரலாறு எம்மை விடுதலை செய்யும்

வரலாறு விடுதலை செய்யும் என்ற பிடல் காஸ்ரோவின் வாக்கு இற்கு அமைய இன்று ஈழவிடுதலைக்காக போராடி தம்மை அர்பணித்த ரெலோ போராளிகளை மக்கள் தம்முடன் இணைத்துள்ளனர். வரலாறு இந்தப் போராளிகளை விடுதலை செய்து விட்டது. இந்த கொடும் செயலுக்கு மூல காரணமான புலிகளை வரலாறு என்றும் விடுதலை செய்யப் போவது இல்லை அது வெள்ளைக் கொடியுடன் சரணடைந்து மண்டியிட்டபோதும். இதனை வரலாறு எழுதிவிட்டும் சென்றிருக்கின்றது.

(“வரலாறு எம்மை விடுதலை செய்யும்” தொடர்ந்து வாசிக்க…)

தோட்டத் தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தப் பிரச்சினை தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் சமரம் மூலம் தீர்க்கப்படுவது சிறந்தது

மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவிப்பு

தோட்டத் தொழிலாளர்கள் சம்பளம் பற்றிய கூட்டு ஒப்பந்தப் பிரச்சினை தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் சமரம் மூலம் தீர்க்கப்படுவது நல்லது. சமரசம் காண முடியாதவிடத்து மனுவில் பெயர் குறிக்கப்பட்டுள்ள பிரதிவாதிகள் அடுத்துவரும் அமர்வில் ஆட்சேபணைகளை பதிவு செய்ய வேண்டும் என பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக மக்கள் தொழிலாளர் சங்கம் தாக்கல் செய்திருந்த ரிட் மனு 08.05.2017ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது நீதிமன்றத்தினால் குறிப்பிடப்பட்டது. (“தோட்டத் தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தப் பிரச்சினை தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் சமரம் மூலம் தீர்க்கப்படுவது சிறந்தது” தொடர்ந்து வாசிக்க…)

பிரான்ஸ் தேர்தல் முடிவுகள்

2002 இல் அடிப்படைச் சம்பளமாக 1500 ஈரோக்களாக ஆக்குவேன் என அப்போது போட்டியிட்ட வேட்பாளர் சேகோலோன் ரோயால் முன்மொழிந்தார். அவரது கட்சிதான் நேற்றுவரை ஆட்சியில் இருந்தது. இன்றுவரை அவ்வெல்லையை அவர்கள் எட்டவில்லை .வேலையற்றோர் தொகை 36 இலட்சத்தை அண்மித்து எந்த தற்காலிக மாற்றீடுகளும் இல்லாது பயங்கரவாத ஒழிப்பு என்பதில் யார் தீவிரம் .வெளிநாட்டவர்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என விவாதத்திலேயே தம் காலத்தை கடத்தும்போது மக்ரோன் வெற்றி பெற்றதில் ஆறுதல் கொள்ளமுடியாது .ஒரு சிறிய ஆறுதலாக இடதுசாரிகளின் செல்வாக்கு மிகுந்த மாகாணம் 93 இல் 50 வீதத்தினரே வாக்களித்திருப்பதும் எமது வாக்கு கொம்யூனிஸ்ட் கட்சிக்கு மாத்திரமே என கோஷம் எழுப்பி பதாகை தூக்கி தெருவில் இறங்கியதும் ஆறுதல் .இந்த ஓர்மம் வேண்டும் இப்போது.

(“பிரான்ஸ் தேர்தல் முடிவுகள்” தொடர்ந்து வாசிக்க…)

Felicitation To A Friend & Resolute Marxist

(Dr. Rajan Hoole)
In the normal course of events my long friendship and brotherly regard for Sritharan, or Sugu, as he is called, and to several of his colleagues, particularly Subathiran, or Robert, would have been unusual. Those of us whose training had a professional bias and had successful careers with domestic felicity mapped out for us, often ceased to think about things that really matter. That would normally have been perfectly all right. But when these persons also had a vicarious urge to be heroes of Tamil nationalism, they also gave their voice and tacit approval to maligning and killing as traitors, those who thought and felt for the utterly hapless plight of ordinary people, repeatedly forced into wars they never wanted.

(“Felicitation To A Friend & Resolute Marxist” தொடர்ந்து வாசிக்க…)

அலாரம் அடிக்கிறது

(மொஹமட் பாதுஷா)

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளோடும் அளவுகடந்த கனவுகளோடும் நிறுவப்பட்ட நல்லாட்சியின் ஆட்சிப் பரப்பெங்கும் அண்மைக் காலமாக இடம்பெற்று வருகின்ற களநிலை மாற்றங்கள், கருத்தியல் அதிர்வொன்றை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. கூட்டு அரசாங்கத்துக்குள் கட்சிசார் ‘முன்னிலைப்படுத்தல்கள்’ ஏற்கெனவே இருக்கத்தக்கதாக, இனவெறுப்பு நடவடிக்கைகளும் கூட்டு எதிரணியின் செயற்பாடுகளும் தீவிரமடைந்திருக்கின்றன. ஓர் அரசாங்கம் ஆட்சியமைத்து பல வருடங்களுக்குப் பிறகு ஏற்படுகின்ற ஸ்திரமற்ற நிலைமைகள் அல்லது அதுபோன்ற ஒரு மாயத்தோற்றம் இப்போது உருவாகி வருகின்றது.

(“அலாரம் அடிக்கிறது” தொடர்ந்து வாசிக்க…)