1982 இல் சுந்தரத்தின் கொலையுடன் ஆரம்பித்த ஏகபிரதிநிதித்துவம்… (1)

ஈபிஆர்எல்எவ் மீது தனது திட்டமிட்ட தாக்குதலை பிரபாகரன் தலைமையிலான புலிகள் இயக்கம் மேற்கொண்ட நாள்…

1986 ஏப்ரல் 29 ரெலோ இயக்கத்தின் மீது தாக்குதல் தொடுத்து நரவேட்டையாடிய புலிகள் மே 6ம் திகதி ரெலோ இயக்கத்தின் தலைவர் சிறி சபாரத்தினத்தையும் சுட்டுக்கொன்றனர். 1986 அக்டோபர் புளட் இயக்க அங்கத்தவர்களை அச்சுறுத்தி அரசியல் நடவடிக்கைகளை நிறுத்துமாறு கட்டளையிட்டனர். அரசியல் நடவடிக்கைகளை நிறுத்துவதாக பத்திரிகை அறிக்கை ஒன்றை வெளியிடச் செய்து புளொட் இயக்கத்தின் செயற்பாடுகளையும் முடக்கியிருந்தனர். 1986 மார்கழி 13 அன்று ஈபிஆர்எல்எவ் மீது தாக்குதல் தொடுத்து ஈபிஆர்எல்எவ் இன் அரசியல் நடவடிக்கைகளுக்கு புலிகள் தடை ஏற்படுத்திய பின்னர் தமிழ் மக்களின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராடிய, தமிழ் மக்கள் மத்தியில் பரவலாக ஆதரவை பெற்றிருந்த, 5 இயக்கங்களில் ஈரோஸ் மட்டுமே எஞ்சியிருந்தது.

(“1982 இல் சுந்தரத்தின் கொலையுடன் ஆரம்பித்த ஏகபிரதிநிதித்துவம்… (1)” தொடர்ந்து வாசிக்க…)

அலெப்போ பற்றி சில குறிப்புகள்.

சிரியாவின் மிகப்பெரிய நகரமான அலெப்போ கிளர்ச்சிக் குழுக்களின் கட்டுப்பாட்டில் இருந்து அரச படைகளால் விடுவிக்கப் பட்டுள்ளது. சிரிய அரசைப் பொறுத்தவரையில், ஐந்தாண்டு கால உள்நாட்டுப் போரில் இது ஒரு பெரிய திருப்புமுனை. சிரியாவில், குறைந்தது ஒரு டசின் இயக்கங்கள் சிரிய அரசுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடுகின்றன. அவற்றிற்கு அமெரிக்கா, சவூதி அரேபியா, மற்றும் மேற்குலக நாடுகளின் உதவிகள் துருக்கி ஊடாக கிடைத்து வந்தன.

(“அலெப்போ பற்றி சில குறிப்புகள்.” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் A.F.C (பகுதி 86 )

1986 மே மாதம் ரெலோ மீதான புலிகளின் தாக்குதலின் பின்பு ஏனைய அமைப்புகளும் படிப்படியாக தடை செய்யப்பட்டன.அதன் பின்பு புலிகள் தனி அதிகாரம் செலுத்தினர் .ஆனால் இவர்களுடைய நட்பு அமைப்பான ஈரோஸ் செயற்பட்டு வந்தது.பாலகுமார் பற்குணத்திடம் பல்கலைக் கழகத்தில் படித்த காரணத்தால் ஈரோஸ் அமைப்புடன் சுமுகமான உறவு இருந்தது. ஈரோஸ் பரராச்சிங்கம் மிக நெருக்கமாக பழகினார்.

(“பற்குணம் A.F.C (பகுதி 86 )” தொடர்ந்து வாசிக்க…)

தீண்டாமையும் யாழ்மையவாத மனித உரிமையும்.

இந்த இருண்ட நாட்களில் தான் ஈபிஆர்எல்எப் பின் தோழர்கள் ஆண்களும் பெண்களுமாக கூட்டம் கூட்டமாக உடல் மீதியின்றி அழிக்கப்பட்டார்கள். பலர் வதைமுகம்களில் கொல்லப்பட்டார்கள்.பேரினவாத பாசிசத்தால் அல்ல. யாழ்மையவாத தமிழ் பாசிசத்தால். கடந்த 30 வருடங்களில் இத்தகைய படுகொலைகளில் காணமல் போக்கடிக்கபட்டவர்கள் கொல்லப்பட்டவர்கள் பல்லாயிரம் பேர் மனித உரிமை பேசும் மாய்மாலக்காரர்கள் பலர் இது பற்றி மூச்சுவிடுவதில்லை.
இதனை கள்ள மௌனத்துடன் கடந்து போகிறார்கள்.

தமிழ் சமூகத்திற்கு மனித உரிமை ஜனநாயகம் பற்றி பேசுவதற்கான யோக்கியம் பற்றிய கேள்வி எழுகிறது. இந்த அழிவுகளுக்கும் முள்ளிவாய்க்கால் பேரழிவுகளுக்கும் இயக்கவியல் தொடர்பிருக்கிறது. வரலாற்று பிரக்ஞையுடன் நியாய உணர்வுடன் நெஞ்சில் ஈரத்துடன் சிந்தித்தால் இந்த சமூகத்திற்கு என்ன நேர்ந்தது என்று புரியும். படுகொலை செய்யப்பட்டவர்கள் 1980களின் முற்பகுதியில் தமது வீடுவாசல்களை துறந்துஉற்றசுற்றத்தை துறந்து ஒரு சமூக உந்துதலில் போராடவந்தவர்கள்.

தமிழ் சமூகத்தில் ஆயரிம் ஆயிரம் ஆண்டுகள்
நிலவும் தீண்டாமை வக்கிரத்தின் நவீன வடிவமே இது.
இந்த தீண்டாமை வக்கிரம் இன்றளவில் நீடித்து நிலவுகிறது. இது தமிழ் மனங்களில் நிர்மூலம் செய்யப்படாதவரை எந்த விமோசனமும் கிடையாது.

ஜெயலலிதா மறைவால் தமிழக அரசியலில் வெற்றிடமா?

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும் தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதாவின் மறைவு தமிழக அரசியல் களத்தில் ‘வெற்றிடத்தை’ உருவாக்கி விடுமா என்ற அச்சம் திராவிட இயக்கங்களின் பால் அக்கறை கொண்ட தலைவர்களிடத்தில் ஏற்பட்டிருக்கிறது.

(“ஜெயலலிதா மறைவால் தமிழக அரசியலில் வெற்றிடமா?” தொடர்ந்து வாசிக்க…)

தமிழகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பவராக சசிகலா இருப்பார், எப்படி?

(ஆர்.முத்துக்குமார்)

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளர் பொறுப்பை யார் ஏற்கப்போகிறார் என்பதுதான் இன்றைய பேசுபொருள். தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி கட்சியின் மூத்த, முன்னணி நிர்வாகிகள் பலரும் சசிகலாவே பொதுச்செயலாளராக வர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். நேரடியாகப் பார்த்தால், வெறும் கட்சிப் பதவிபோலத் தோற்றம் அளித்தாலும், ஆளும்கட்சியான அதிமுகவின் பொதுச்செயலாளர் என்பவர் மறைமுகமாக தமிழகத்தின் கடைக்கோடி நிர்வாகம் வரை தீர்மானிக்கும் வல்லமை படைத்தவர். எப்படி?

(“தமிழகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பவராக சசிகலா இருப்பார், எப்படி?” தொடர்ந்து வாசிக்க…)

பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ஆதரவு அளித்ததாக முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இலங்கை அரசுக்கும் இறுதி யுத்தம் நிகழ்ந்த போது இந்தியாவின் வெளியுறவுத்துறை செயலராக இருந்தவர் சிவசங்கர் மேனன். இவர் அண்மையில் Choices: Inside the Making of India’s Foreign Policy” என்ற ஆங்கில நூலை வெளியிட்டார்.

(“பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்” தொடர்ந்து வாசிக்க…)

ஜெயலலிதா: நிரப்ப முடியாத வெற்றிடம்

(கே.சஞ்சயன்)

இந்தியாவில் அசைக்க முடியாத இரும்புப் பெண்மணியாகத் திகழ்ந்த, முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம், தமிழ்நாட்டின் அரசியலில் ஏற்படுத்தியுள்ள ஒரு வெற்றிடத்தைப் போலவே, இலங்கைத் தமிழர் அரசியலிலும் அதன் தாக்கம் வெகுவாக உணரப்படுகிறது.

(“ஜெயலலிதா: நிரப்ப முடியாத வெற்றிடம்” தொடர்ந்து வாசிக்க…)

ஏமாற்றத்தை எதிர்பார்த்தல்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

சில விடயங்கள் நடந்தேறக் கூடியவையல்ல என்று தெரியும்; நடந்தால் நல்லது என்றும் தெரியும். ஆனால், நடப்பதையும், நடவாததையும் தீர்மானிக்கும் வல்லமை பல சமயங்களில் நம்மிடமில்லை. இருந்தாலும் ஏமாற்றத்தை எதிர்பார்க்கும் மனநிலை என்றொன்று உண்டு. அது கையறுநிலையின் வெளிப்பாடா அல்லது மூட நம்பிக்கையா என்று சொல்லவியலாது. உலக அரசியல் அரங்கை நம்பிக்கையீனம் ஆட்கொண்டுள்ளது. எதையும் நம்பியிருக்க இயலாதவாறு அலுவல்கள் அரங்கேறுகின்றன. இதனால் ஏமாற்றத்தை எதிர்பார்ப்பதும் களிப்பூட்டுகிறது.

(“ஏமாற்றத்தை எதிர்பார்த்தல்” தொடர்ந்து வாசிக்க…)

மிகையில் கோர்பச்சோவ்: பேரரசை இழந்த மனிதர்

85 வயதான மிகையில் கோர்பச்சோவ் இப்போது மிகவும் அரிதாகவே பேட்டி கொடுக்கிறார். வயதான மிகையில் கோர்பச்சோவ் இப்போது மிகவும் அரிதாகவே பேட்டி கொடுக்கிறார். மேற்குலகம் ரஷ்யாவின் கோபத்தை தூண்டியிருப்பதாக குற்றஞ்சாட்டியிருக்கும் முன்னாள் சோவியத் தலைவர் மிகையில் கோர்பச்சோவ், 1991 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் “துரோகத்தால்” சின்னாபின்னமாகியது என்று தெரிவித்திருக்கிறார்.

(“மிகையில் கோர்பச்சோவ்: பேரரசை இழந்த மனிதர்” தொடர்ந்து வாசிக்க…)