கொழும்பில் பேய் மழை; காட்டாறு வௌ்ளம் கரைபுரண்டு ஓடுகிறது

நாட்டில் தற்போது நிலவிக்கொண்டிருக்கும் சீரற்ற வானிலை இன்னும் சில நாள்களுக்கு நீடிக்குமென வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. மேற்கு, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும்   காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி – சு.க பேச்சு வெற்றிகரம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையேயான விசேட கலந்துரையாடல் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்

எதிர்நீச்சல்’, ‘இரு கோடுகள்’, ‘பாமா விஜயம்’, ‘வெள்ளி விழா’ உட்பட ஏராளமான தமிழ்படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் பழம்பெரும் நடிகை ஜெயந்தி. மறைந்த மூத்த நடிகர்களான  ‘நாகேஷ்,ஜெமினி கணேசன், எம்ஜிஆர் உட்பட பல நடிகர்களுடன் நடித்த  இவர் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தனது சிறந்த நடிப்பாற்றலால் பல முறை கர்நாடக மாநில விருதுகளை வென்றுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்துமாவால் அவதிப்பட்டு வந்த ஜெயந்தி சினிமாவை விட்டு விலகியிருந்தார்.

’புத்தகங்கள் இல்லையா’

டெல்லி வந்திருந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்திருந்தார். அப்போது, மறைந்த கலைஞர்  முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியைப் பாராட்டி பேசினாராம் ஜனாதிபதி.’

மனோரி முத்தட்டுவேகம

மறைந்த மனோரி முத்தட்டுவேகம அவர்கள் இனநல்லுறவு மனித உரிமை மனிதகண்ணியத்திற்கு முன்மாதிரியாக திகழ்ந்தவர். ஒரு முன்னேற்றகரமான மனிதர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர். பரஸ்பர மரியாதை இங்கிதம் நல்லியல்பு அவரது பின்புலத்தின் உயர் விழுமியங்களை பறை சாற்றின.
1980களின் முற்கூற்றில் 1983 இற்கு முந்திய பாராளுமன்றத்தில் இனசமூக நல்லுறவிற்கு நம்பிக்கைதரும் வார்த்தைகள் ஏதும் இருந்ததென்றல் அவரது கணவர் தோழர் சரத் முத்தட்டுவேகம இலங்கைகம்யூனிஸ்ட் கட்சிஅவர்களிடம் இருந்துதான். அவர் பாரதப்போரில் எதிரியின் முற்றுகைக்குள் அகப்பட்ட அபிமன்னுவைப்போல் இனசமூக நல்லுறவிற்காகவும் அனைத்துமக்களின் உரிமைக்காகவும் போரிட்டார். அவருடைய தகப்பனார் கொல்வின் இலங்கையின் இனசமூக உறவுகளூக்கு பாதகமான தனி சிங்கள சட்டம் பிரிவினக்கு வழிவகுக்கும் என 1950 களில் இலங்கை பாராளுமன்றத்தில் முன் எச்சரிக்கை செய்தவர். அற விழுமியங்களின் பாரம்பரியம் அவரை செதுக்கியது. அவர்களது புதல்வி ரமணி மனித உரிமை ஜனநாயகம் பெண் உரிமை செயற்பாட்டாளர்.
அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாரின்மறைவிற்கு எம் அஞ்சலிகள்!

இலங்கை: கொரனா செய்திகள்

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 937 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, அதன்படி 267,602 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 23,194 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.  இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,054 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை தமிழர்களுக்காக மு.க.ஸ்டாலினின் நடவடிக்கை

தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழர்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். வெளிநாடு வாழ் தமிழர்கள், இலங்கை தமிழ் அகதிகள் நலன் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆய்வு கூட்டம் நடத்தினார். 

மலையகச் சிறுமிக்காக யாழில் திரண்ட மக்கள்

ரிஷாத் பதியுதீனின் வீட்டில் உயிரிழந்த சிறுமிக்கு நீதிகோரி யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று  முன்னெடுக்கப்பட்டது. யாழில் உள்ள மகளிர் அமைப்புக்கள் மற்றும் பெண்கள் அமைப்புகள் மற்றும் சமூக மட்ட அமைப்புகள் இணைந்து யாழ். நகர மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

வேலைக்குச் செல்லும் சிறுவர்கள்; அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

வீட்டு வேலைக்குச் செல்லும் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களைக் கண்டுபிடிக்க சிறப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இணையத்தைக் கலக்கும் திருவள்ளுவர் ஓவியம்

தமிழக முதலமைச்சராகவுள்ள மு.க.ஸ்டாலின் ‘திருக்குறளைத் தேசிய நூலாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் ‘என்று தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடியிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் கணேஷ் என்ற ஓவியர், தமிழ் பிராமி, வட்டெழுத்துகள், தற்போதைய நவீனப்படுத்தப்பட்ட எழுத்துக்கள் என 741 எழுத்துக்களைப் பயன்படுத்தி வரைந்த திருவள்ளுவர் ஓவியத்தைத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

மேலும் அப்பதிவில் மு.க.ஸ்டாலினையும் டக் (Tag) செய்துள்ளார்.

இந்நிலையில் அவ் ஓவியத்தைப் பார்த்த மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் முகமாக தனது டுவிட்டர் பக்கத்தில் ”அன்பின் வழியது உயிர்நிலை” என்ற அய்யன் வள்ளுவரை, தமிழ் மீது கொண்ட அன்பால், தமிழ் எழுத்துகளால் ஓவியக் காவியமாக்கிய கணேஷை எவ்வளவு பாராட்டினாலும் தகும். வள்ளுவம் போல் இந்த ஓவியமும் வாழும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஓவியமானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.