ராஜபக்ஷவுடன் மனம் கசந்து தனிவழி செல்கிறார் விமல்

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவங்ச அதிரடியான அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார். அவரது தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, அடுத்த மாகாண சபைத் தேர்தலில் தனித்து களமிறங்குவதற்கு தீர்மானத்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் முன்னணியின் அரசியல் சபைக்குள் கலந்துரையாடப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து முதலிடம்

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், பின்லாந்து முதலிடம் பெற்றுள்ளது. உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல், ஐ.நா. நிலையான அபிவிருத்தி தீர்வுகள் நெட்வொர்க் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

’மலையக மக்கள் முன்னணியின் நிலை கவலைக்கிடமாக உள்ளது’

மலையக மக்கள் முன்னணியின் இன்றைய நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவித்த சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் அனுஷா சந்திரசேகரன், முன்னணியில் உள்ளார்ந்த பழிவாங்கல்கள், பதவி பேராசைகள் தொடர்வதாகவும் இந்நிலைமை தொடருமாயின் கடைசியில் கட்சியில் எவருமே எஞ்சமாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

கொழும்பில் நிலவும் ஒட்சிசன் பிரச்சினைக்கு அடுத்த மாதம் தீர்வு

“கொழும்புக்கு மரம்” எனும் தொனிப்பொருளின் கீழ், கொழும்பு மாநகரில் ஒரு இலட்சம் மரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டம் அடுத்த மாதம் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. கொழும்பு மாநகரில் நிலவும் ஒட்சிசன் பிரச்சினைக்கு தீர்வாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

கச்சதீவை மீட்க இந்தியா முயற்சி

கச்சதீவை மீண்டும் இலங்கையிடமிருந்து மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய மத்திய கப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி கே சிங் தெரிவித்துள்ளார். இராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை: கொரனா செய்திகள்

கொழும்பு நகர் என்பது மிகவும் வேகமாக கொரோனா வைரஸ் பரவ கூடிய இடமாகும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. அத்துடன், அவசியமற்ற இடங்களுக்கு செல்வதைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் மக்கள் ஒன்று கூடுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச நீர் தினத்தை முன்னிட்டு மரநடுகை

சர்வதேச நீர் தினத்தை முன்னிட்டு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் திருக்கோவில் பிரதேச கிளையின் ஏற்பாட்டில், சாகாமம் குளக்கரையில் மருத மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளன.

‘அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தலில் தவறாக வழிநடத்த முயன்ற ரஷ்யா’

ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நட்புறவாளர்கள், அவரது நிர்வாகத்தின் மூலம் கடந்தாண்டு ஐ. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின்போது, அப்போது ஜனாதிபதி வேட்பாளராகவிருந்த ஜோ பைடனுக்கெதிராக, பிரசாரத்தின்போது தவறாக வழிநடத்தும் குற்றச்சாட்டுகளை, ரஷ்ய அரசாங்கம் விதைக்க முயன்றதாக, ஐ. அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தான்சானிய ஜனாதிபதி கொவிட் தொற்றால் பலி

ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான தான்சானியாவின் ஜனாதிபதி ஜான் மகுபலி உயிரிழந்துள்ளார். 61 வயதுடைய அவர் உடல் நலக் குறைவால் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், அவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டதாகவும் அதனால் அவர் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்து துணை ஜனாதிபதி சமியா சுலுஹ ஹாசன் அறிவித்துள்ளார்.

டக்ளஸை சந்திக்க விருப்பம் இல்லை

ஜனாதிபதியின் அறிவிப்புக்கமைவாக, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை தான் சந்திக்கவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ள நிலையில், அவரை ஒருபோதும் தாம் சந்திக்கப் போவதில்லையெனத் தெரிவித்த வடக்கு, கிழக்கு ஆகிய மாகாணங்களில் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி யோ.கனகரஞ்சினி, அவரை சந்திக்க விருப்பம் இல்லையெனவும் கூறினார்.