உள்ளக விசாரணைகள் ஜனவரியில் ஆரம்பம்

உள்ளக விசாரணைகள் எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சர்வதேச ஒத்துழைப்புடன் விசாரணைகள் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விசாரணை ஒன்றரை ஆண்டு காலப்பகுதிக்குள் விசாரணைகள் பூர்த்தியாகும் என அவர் தெரிவித்துள்ளார். விசாரணைகள் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ்ஸுக்கு எதிரான அமெரிக்காவின் நான்கைந்து கிளர்ச்சியாளர்களே மிச்சம்

இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழுவுக்கு எதிராக போராட அமெரிக்கா பயி ற்சி அளித்த கிளர்ச்சியாளர்களில் நான்கு அல்லது ஐந்து பேரே களத்தில் போராடி வருவதாகவும் அந்த திட்டம் முழுமையாக தோல்வியடைந்து விட்டது என்றும் அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது. ஐ.எஸ்ஸுக்கு எதிராக அமெரிக்காவின் யுத்த மூலோபாயத்தின் கீழ் சுமார் 5,000 கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் மற் றும் பயிற்சி வழங்குவதற்கு 500 மில்லியன் டொலர்களை வழங்க கொங்கிரஸ் அவையில் அங்கீகாரம் கிடைத்தது. ஆனால் இந்த திட்டதின் கீழ் பயிற்சிபெற்ற 54 பேர் கொண்ட குழுவின் பெரு ம்பாலான கிளர்ச்சியாளர்கள் அல் கொய்தா கிளையான அல் நுஸ்ரா குழுவி டம் சிக்கி இருப்பதாக அமெரிக்க இராணுவ ஜெனரல் லொயிட் ஒஸ்டின் அமெ ரிக்க செனட் அவையில் விளக்கமளித்துள்ளார். இந்த நிலையில் அமெரிக்கா பயிற்சியளித்த வீரர்களில் எஞ்சியிருக்கும் எண் ணிக்கை நகைச்சுவையானது என்று குடியரசு கட்சி செனட் உறுப்பினர் கெல்லி அயோட்டே குறிப்பிட்டுள்ளார். “இந்த திட்டம் முழுமையாக தோல்வியடைந்து விட்டதை நாம் கண்டறிந்திருக்கிறோம். அது அப்படி இருக்கக் கூடாது என்று நான் எதிர்பார்க்கிறேன். ஆனால் அதுதான் உண்மை” என்று மற்றொரு குடி யரசு கட்சி செனட்டர் ஜெப் செசன் குறிப்பிட்டார்.

எமது நாட்டில் யாரும் வரி கட்டுவதில்லை – வட கொரிய தூதுவர்

“எமது நாட்டில் யாரும் வரி கட்டுவதில்லை. தான் வசித்து வந்த வீட்டுக்கு வாடகை கட்டாத காரணத்திற்காக, யாரையும் வீட்டை விட்டு வெளியேற்றி தெருவில் விடுவதில்லை.” இவ்வாறு ஸ்பெயின் நாட்டுக்கான வட கொரிய தூதுவர் Kim Hyok-Chol, தன்னை சந்திக்க வந்த ஸ்பானிஷ் ஊடகவியலாளரிடம் தெரிவித்தார்.
தூதுவரின் பேட்டியில் இருந்து சில குறிப்புகள்:

– என்ன மாதிரியான அரசமைப்பு சிறந்தது என்று தெரிவு செய்வது அந்தந்த நாடுகளின் உரிமை. உங்களுடைய நாட்டில் உள்ள அமைப்பிற்கும், எமது நாட்டுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அதற்காக ஊடகவியலாளர்கள் ஒரு பக்கச் சார்பான தகவல்களை வழங்கி எம்மை வில்லத்தனமாக சித்தரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

– ஸ்பெயின் நாட்டில் வாடகை கட்டாத காரணத்திற்காக, பல வருடங்களாக வசித்த வீட்டில் இருந்து வெளியேற்றுவதை புரிந்து கொள்ள முடியவில்லை. எமது நாட்டில் யாரும் வரி கட்டுவதில்லை. தனி மனிதன் வசிப்பதற்கான வீடு ஒன்றை அமைத்துக் கொடுப்பது அரசின் கடமை. எமது நாட்டில் வரி கட்டாத அல்லது வாடகை கட்டாத காரணத்திற்காக ஒருவரை வீட்டை விட்டு வெளியேற்றுவதை நினைத்துக் கூட பார்க்க முடியாது.

– வட கொரியாவில் அரசியல் கைதிகள் கிடையாது. அவர்களுக்கான தனிப்பட்ட சிறைச் சாலைகளும் கிடையாது. நாட்டை விட்டோடும் அகதிகள், தமது சுயநலத்திற்காக, பலவிதமான கதைகளை புனைந்து சொல்கிறார்கள். பண வருவாயை எதிர்பார்த்து தம்மை முக்கியமான பிரமுகர்களாக காட்டிக் கொள்கிறார்கள். மேற்குலகில் அவற்றை எல்லாம் உண்மை என்று நம்புகிறார்கள்.(Kalaiyarasan Tha)

ஐ.நா. அறிக்கையை முழுமையாக ஏற்கிறோம் – தமிழ் தேசியக் கூட்டமைப்பு

இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றம் குறித்து ஐநா வெளியிட்டிருக்கும் பரிந்துரையை முழுமையாக ஏற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பிபிசி தமிழோசையிடம் பேசிய கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன், சர்வதேச நீதிபதிகள் அடங்கிய கலப்பு நீதிமன்றம் இலங்கையில் விசாரணை நடத்துவதன் மூலமே உண்மையை வெளிக்கொண்டுவர முடியுமென சுமந்திரன் கூறினார். பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்கள் இலங்கையில்தான் வசிக்கிறார்கள் என்பதால் இலங்கையில் விசாரணை நடத்துவதே சரியாக இருக்க முடியும் என சுமந்திரன் தெரிவித்தார்.

‘இலங்கை போர்க்குற்றங்களை சர்வதேச நீதிபதிகள் அடங்கிய கலப்பு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்’ – ஐநா

இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் 2002 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டுவரை போரில் ஈடுபட்ட இரு தரப்பினராலும், போர்க்குற்றமும், மனித குலத்துக்கு எதிரான குற்றமும் செய்யப்பட்டிருப்பதாக ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை கூறுகின்றது அங்கு இந்தக்காலப்பகுதியில் கொடூரமான வன்செயல்கள் திரும்பத் திரும்ப இடம்பெற்றிருப்பதாக அடையாளம் காணப்பட்டிருப்பது, இந்த குற்றங்களை உறுதிப்படுத்துவதாகவும் ஐநா இன்று வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.

(“‘இலங்கை போர்க்குற்றங்களை சர்வதேச நீதிபதிகள் அடங்கிய கலப்பு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்’ – ஐநா” தொடர்ந்து வாசிக்க…)

இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் துஷ்பிரயோகங்கள் மோசமானவை – ஐ.நா

தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்கள் மீது இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் துஷ்பிரயோகங்கள் – சில தருணங்களில் மிக மோசமானதாக – மேற்கொள்ளப்பட்டன என ஐக்கிய நாடுகள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெனீவா (16 செப்டெம்பர் 2015) இன்று வெளியிடப்பட்ட ஐ.நா அறிக்கை இலங்கையில் 2002 இல் இருந்து 2011ஆம் ஆண்டு வரை பாரதூரமான உரிமை மீறல்களின் வடிவங்களை அடையாளம் கண்டுள்ளது. இவை இலங்கையில் போர் குற்றங்கள் மற்றும் மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்கள் இருதரப்பினராலும் பெரும்பாலும் இழைக்கப்பட்டிருக்கலாம் என்று வெளிப்படுத்துகின்றன. இவ்வறிக்கை, நீதியை அடைந்துகொள்வதற்கு சர்வதேச நீதிபதிகள், வழக்குத் தொடுப்பவர்கள், சட்டத்தரணிகள் மற்றும் விசாரணையாளர்களை உள்ளடக்கிய ஒரு கலப்பு சிறப்பு நீதிமன்றத்தை ஸ்தாபிப்பது முக்கியமென்று பரிந்துரை செய்துள்ளது.

(“இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் துஷ்பிரயோகங்கள் மோசமானவை – ஐ.நா” தொடர்ந்து வாசிக்க…)

மத்தல விமான நிலையத்தில் விமானம்

ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்துக்கு சொந்தமான யு.எல்.504 என்ற பயணிகள் விமானம் மத்தல சர்வதேச விமான நிலையத்தில் இன்று மாலை தரையிறங்கியது. மோசமான காலநிலையை அடுத்தே இந்த விமானம் அங்கு தரையிறங்கியுள்ளது. லண்டனிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நோக்கி பயணித்துகொண்டிருந்த போதே அந்த விமானம் மத்தலயில் இறங்கியுள்ளது. மத்தல விமான நிலையத்தின் களஞ்சிய அறைகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டமையால் பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

காலநிலை மாற்றத்திற்கும், உள்நாட்டுப் போர்களுக்கும் இடையிலான தொடர்பு

காலநிலை மாற்றத்திற்கும், உள்நாட்டுப் போர்களுக்கும் இடையிலான தொடர்பை பலர் கவனிப்பதில்லை. 2006 – 2011 காலப் பகுதியில், சிரியாவில் கடுமையான வரட்சி நிலவியது. அதற்கு முன்பிருந்தே, நீர் நிலைகளில் தண்ணீரின் அளவு ஐம்பது சதவீதம் குறைந்தது. விவசாயத்தை நம்பி வாழ்ந்த பல்லாயிரக் கணக்கான மக்கள், நகரங்களை நோக்கி நகர்ந்தார்கள். சிரிய அரசு, பணப் பயிர்களாக கருதப் பட்ட, கோதுமை, பருத்தி உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தியதால், பிற உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. மேலும் தவறாக கையாளப்பட்ட நீர்ப்பாசனமும் விவசாய உற்பத்தி வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தது. கிராமங்களில் இருந்து வந்து குடியேறிய மக்களால், நகரங்களில் சனத்தொகை பெருக்கம் அதிகரித்தது. ஏற்கனவே ஈராக் போர் காரணமாக இடம்பெயர்ந்து வந்த அகதிகளும் ஏராளமாக இருந்தனர். அது நிலைமையை இன்னும் மோசமாக்கியது.
மக்கட்தொகைப் பெருக்கம், விவசாய உற்பத்தி வீழ்ச்சி, வரட்சி, தண்ணீர்ப் பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி போன்ற அனைத்துக் காரணங்களும், அரசுக்கு எதிரான கிளர்ச்சிக்கு தூண்டுகோலாக அமைந்திருந்தன. (நன்றி: Le Monde diplomatique, september 2015)

குற்றாச்சாட்டுகளுக்கு விக்னேஸ்வரன் பதில்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் தன்னுடன் கோபமுற்றுள்ளதாக கூறி மேற்கொள்ளப்படும் பிரசாரங்கள் குறித்த வட மாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் மறுப்புத் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பிலுள்ள தலைவர்களிடையே மோதலை உண்டாக்கும் நோக்கிலேயே குறிப்பிட்ட சிலரால் இவ்வாறான முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருவதாக சீ.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத் தேர்தல் பிரசாங்களின்போது தான் பங்கேற்காததால் த.தே.கூ தன்னுடன் கோபமுற்றிருப்பதாகவும் அதன் காரணமாக தன்னை பதவி விலக்க அவர்கள் முயற்சி செய்வதாகவும் கூறப்படும் செய்திகள் குறித்து பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் இவ்வாறானதொரு பிரச்சினையோ அல்லது முரண்பாடுகளோ த.தே.கூட்டமைப்பிற்குள் இல்லை எனவும் கூட்டமைப்பிலுள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தன்னுடன் சுமுகமான முறையிலேயே பழகுவதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் வரதராஜப்பெருமாள்

இன்று யாழ்.பல்கலைகழக கைலாசபதி கலையரங்கில் யாழப்பாண சர்வதேச சினிமா விழா அமைதியாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது. தென்னிலங்கை , இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிருந்து பலர் பங்குகொண்டனர். அரங்கு நிறைந்த பர்வையளர்களுடன் நீண்டகாலத் திற்குப் பிறகு பல்கலைக்கழகத்தைப் பார்க்க சந்தோசமாக இருந்தது. விழா அழகாகவும் எளிமையாகவும் நடந்தது. முதல் நாள் காட்சியாக PHOENIX எனும் ஜெர்மானிய திரைப்படம் காண்பிக்கப்பட்டது.இவ்விழாவில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக முன்னாள் விரிவுரையாளரும் ஈபிஆர்எல்எவ் முக்கியஸ்தரும் முன்னாள் வடக்கு கிழக்கு மகாண சபை முதல்வரும் கலந்துகொண்டார். 2009 இல் புலிகளின் வீழ்ச்சிக்கு பின்னர் ஏற்பட்டுள்ள ஜனநாயக இடவெளி வரதராஜப்பெருமாள் போன்றவர்களையும் யாழ் பல்கலைக்கழகம் வரை சுதந்திரமாக நடமாட வைத்திருப்பது இங்கு கவனிக்கத் தக்கது.