கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்றுவந்த மேலும் 250 நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடுத் திரும்பியுள்ளனர். இதுவரையில் மொத்தமாக 84 ஆயிரத்து 253 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். நாட்டில் மேலும் 179 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
Category: செய்திகள்
புர்காவைத் தடைசெய்வதற்கான ஆணையில் கைச்சாத்திட்ட அமைச்சர்
இலங்கையில் புர்காவைத் தடை செய்யும் அமைச்சரவைப் பத்திரத்தில், தான் கைச்சாத்திட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சரான, ஓய்வுபெற்ற றியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
தீ விபத்து; 16 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரை
யாழ் – சென்னை விமான சேவைகள் விரைவில் மீள ஆரம்பம்
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட யாழ்ப்பாணம் மற்றம் சென்னைக்கு இடையிலான நேரடி விமான சேவைகள் விரைவில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனை கூறியுள்ளார். அத்துடன், இரத்மலானை – யாழ்ப்பாணம் – மட்டக்களப்பு இடையிலான உள்ளக விமான சேவையை விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கை: கொரனா செய்திகள்
பிணையில் விடுதலை செய்யப்பட்டமைக்கு தொழிலாளர்களின் ஒற்றுமையே காரணம்’
மஸ்கெலியா, சாமிமலை – ஓல்டன் தோட்டத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர்கள், நேற்று (10) பிணையில் விடுதலை செய்யப்பட்டமைக்கு, தொழிலாளர்களின் ஒற்றுமையே காரணம் என, தொழிலாளர்கள் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி நேரு கருணாகரன் தெரிவித்தார்.
200க்கும் குறைவான பாடசாலைகள் மூடப்படும்
200க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் மூடப்படும் நிலை காணப்படுவதாக, தேசிய காணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. அந்த பாடசாலைகளில் ஆசிரியர், மாணவர்களின் செயல்திறத்தைப் போன்று பௌதிக மற்றும் மனித வளம் தொடர்பில் நிலவும் முறன்பாடுகள் இதற்கு காரணமாகும் என்று அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
‘தோல்நிற கரிசனைகளால் மகனை இளவரசாக்க மறுத்த அரச குடும்பத்தினர்’
ஸ்டாலின் – திருமா கையெழுத்து; திமுக-விசிக தொகுதி உடன்பாடு
திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்தது. விசிக தனிச்சின்னத்தில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.திமுக கூட்டணியின் பேச்சுவார்த்தை சுமுகமாக ஆரம்பித்து திடீரென இழுபறியானது. திமுக தரப்பில் பிடிவாதமாக தொகுதிகளைக் குறைத்துக் கொள்ள கூறியதும், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளை உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட கேட்டுக்கொண்டதும் இழுபறிக்கு காரணமானது.