மேலிடத்தின் உத்தரவிலேய முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டதெனவும். அதற்காக ஆதாரமுள்ளது எனவும் இடிக்கப்பட்ட தூபியை மீள கட்டுவேன் எனவும் யாழ்ப்பாண பல்கலைகழக துணைவேந்தர் தன்னிடம் தெரிவித்தாதாக, நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார்.
Category: செய்திகள்
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அவசர அழைப்பு
’இனவெறியர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்’ – திருமா
போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதாக மாணவர்கள் அறிவித்துள்ளனர். கொரோனோ அச்சுறுத்தல் காரணமாக போராட்டத்தில் கலந்துகொள்பவர்களை கலைந்து செல்லுமாறும், மீறுபவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டதையடுத்து, கொரோனோ அச்சுறுத்தல் காரணமாக போராட்டத்தை கைவிடுவதாக மாணவர்கள் அறிவித்தனர். எனினும், நான்கு மாணவர்கள் தாம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிப்பு
யாழ்ப்பாணம் பல்கலைக் கழக வளாகத்துக்குள் உள்ள நினைவுத் தூபி இன்று (08) இரவோடிரவாக இடித்தழிக்கப்பட்டுள்ளது. பல்கலைக் கழக வாயில் மூடப்பட்டு எவரும் உட்செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் மின்குமிழ்கள் அணைக்கப்பட்டு ஜே.சி.பி இயந்திரம் கொண்டு இடித்தழிக்கப்பட்டது.
ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரித்தது அமெரிக்க நாடாளுமன்றம்
‘பைடனிடம் முறையான விதத்தில் ஆட்சி கையளிக்கப்படும்’
கொழும்பில் மீண்டும் தீவிரமாகும் கொரோனா
உக்ரைன் முழுமையாக முடக்கம்
உக்ரைன் நாட்டில் நாடளாவிய ரீதியிலான முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு முகங்கொடுக்கும் வகையிலேயே இந்த முடக்கம் இன்றுமுதல் எதிர்வரும் 24ஆம் திகதி வரையிலும் அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டை கல்லூரியை கையகப்படுத்த நடவடிக்கை
யாழ். மாவட்டத்தில் கொரோனா அவசர நிலை ஏற்படும் போது, வட்டுக்கோட்டை தொழில்நுட்பக் கல்லூரியை, தொழில்நுட்பக் கல்லூரி நிர்வாகத்தினருடன் கலந்தரையாடி கையகப்படுத்தவுள்ளதாக, யாழ். மாவட்ட கொரோனா ஒருங்கிணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார தெரிவித்தார். அத்துடன், ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது, யாழ் மாவட்டத்தில் கொரோனா நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும், அவர் கூறினார். யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு தொடர்பில் ஆராயும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.