புரெவியால் 15 வீடுகள் முற்றாக சேதம்

புரெவி புயல் காரணமாக நாட்டில் 15 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் 12 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் நால்வர் காயமடைந்துள்ளனர் எனவும் அரத்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் 192 வீடுகள் பகுதியளவில் தேமடைந்துள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் மிகப்பெரும் போராட்டம்!

(Maniam Shanmugam)


இந்தியாவில் நரேந்திர மோடியின் இந்துத்துவ பாசிச அரசு விவசாயிகளுக்கு எதிராகக் கொண்டு வந்துள்ள மூன்று மசோதாக்களை திரும்பப் பெறக் கோரி ஒரு கோடிக்கும் அதிகமான விவசாயிகள் தலைநகர் டில்லியில் கூடி போராடி வருகிறார்கள்.
ஆனால் இந்தப் போராட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர் இந்தியத் தொழிலாளர் வர்க்கம் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்றை நடத்தி முடித்திருக்கிறது.

அமரர் வி.கே.வெள்ளையனின் நினைவுதினம்…

தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபகத் தலைவரும் தொழிற்சங்கத் துறவியுமான அமரர் வி. கே. வெள்ளையனின் 49 ஆவது சிரார்த்த தின நிகழ்வுகள், ஹட்டனில் இன்று (2) நடைபெற்றன.

’தமிழர்களுக்கு படுகொலைகள் புதிதல்ல’

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவத்தால் மக்களிடையே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதெனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், தமிழ் மக்களைப் பொறுத்தவரை சிறைச்சாலை படுகொலைகள் புதியவையல்ல என்றார். இன்று (2) எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் 350 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 350 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, திவுலுபிட்டிய – பேலியகொடை கொரோனா கொத்தணிகளின் தொற்றாளர் எண்ணிக்கை 21333 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், நாட்டில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 24882 ஆக உயர்ந்துள்ளது.

‘புரெவி புயல்’எங்கு நிற்கிறது தெரியுமா?

‘புரெவி புயல்’ இலங்கையின் கிழக்கு கரையை இன்றிரவு 7 மணிக்கும் இரவு 10 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் கடக்கும் என எதிர்பார்ப்பதாக, வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியிருந்தது. எனினும், ‘புரெவி’ புயல், தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் திருகோமலைக்கு கிழக்கு-தென்கிழகில் 140 கிலோமீற்றில் நிலைகொண்டுள்ளது என வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. ​ஆகையால், பிற்பகல் 11.30 மணியளவிலேயே அவ்விடத்தில் நிலைகொண்டிருந்தது என அந்நிலையம் அறிவித்துள்ளது.

யாழ். மாநகர சபையின் பட்ஜெட் தோல்வி

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான நிதியறிக்கை (பட்ஜெட்) தோற்கடிக்கப்பட்டுள்ளது. யாழ். மாநகர சபையின் விசேட அமர்வு, மாநகர சபை சபா மண்டபத்தில் இன்று (02) நடைபெற்றது. இதன்போது, நிதியறிக்கை்கான வாக்கெடுப்பின் போது, ஆதரவாக 19 வாக்குகளும் எதிராக 24 வாக்குகளும் அளிக்கப்பட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட மக்கள் காங்கிரஸ் மற்றும் தமிழர் விடுதலை கூட்டணி உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். அதேவேளை, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியன நிதியறிக்கைக்கு எதிராக வாக்களித்தன.

சிறைச்சாலைகளில் 1,091 பேருக்கு கொரோனா

சிறைச்சாலைகளில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,091 ஆக அதிகரித்துள்ளதென, சிறைச்சாலை தகவல்கள் தெரிவித்துள்ளன. இதில் கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினத்தில் மாத்திரம் 183 தொற்றாளர்கள் சிறைச்சாலைகளில் பதிவாகியுள்ளனரென, சிறைச்சாலைகள் நிர்வாக ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

மரடோனா காலமானார்

கால்பந்து ஜாம்பவான் மரடோனா காலமானார் என்று ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மாரடைப்பு காரணமாகவே அவர் காலமானார் என அவருடைய பேச்சாளர் தெரிவித்துள்ளார். இறக்கும் போது அவர்க்கு வயது 60 ஆகும். அவர், 1986ஆம் ஆண்டு உலக கால்பந்து கிண்ணத்தை ஆர்ஜென்டினா வெல்வதற்கு பெரும் பங்குவகித்தவர்.