இன்னமும் உயிர்வாழ்கின்றதா?

நாடு கடந்த தமிழீழம்

சுவிசிலும் லண்டனிலும் மக்கள் முன் உறுதி பூண்ட நாடுகடந்த தமிழீழ அரசின் மக்கள் பிரதிநிதிகள். ஈழத்தமிழ் மக்களின் அடிப்படை அரசில் பெருவிருப்பின் சனநாயகப் பேராட்ட வடிவமாக திகழும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இராண்டாம் தவணை அரசவைக்கு தேர்வாக மக்கள் பிரதிநிதிகள், மக்கள் முன்னாலான அறிமுக நிகழ்வுகள் புலம்பெயர் நாடுகளில் இடம்பெற்று வருகின்றன. அதனொரு அங்கமாக லண்டனிலும் சுவிசிலும் தேர்வாகிய மக்கள் பிரதிநிதிகள், தேர்தல் ஆணையத்தின் உத்தியோகபூர்வ பத்திரத்தினை மக்கள் முன் பெற்றுக் கொண்டதோடு, தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கான தங்களின் உறுதிப்பாட்டினை மக்கள் முன் வெளிப்படுத்தி நின்றனர். தேர்வாகியுள்ள பிரதிநிதிகளை வரவேற்று அவர்களுக்கு உறுதுணையாக நின்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை வலுப்படுத்துமாறு பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், சுவிஸ் நிகழ்வில் இணைவழிப் பரிவர்தனையூடாக இணைந்து கொண்டு மக்களிடம் கோரியிருந்தார். இதேவேளை இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு நிகழ்ந்தது இனப்படுகொலையே என்பதனை அனைத்துல அரங்கில் நிறுவுவதுதான் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதான செயற்பாடெனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்திருந்தார்.

அமெரிக்க சி.ஐ.ஏயால் கொலை செய்யப்பட்ட இடதுசாரித் தலைவர்

42 வருடங்களுக்கு முன்னர், இதே நாளில் 11.09.1973ல் அமெரிக்க சி.ஐ.ஏயால் கொலை செய்யப்பட்ட இடதுசாரித் தலைவர் தோழர் சல்வடார் அலெண்டேயும், படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களும் அமெரிக்காவின், கோர முகத்தை எப்போதும் நமக்கு ஞாபகப்படுத்திக்கொண்டே இருப்பார்கள்.
42 ஆண்டுகளுக்கு முன், நடந்த அமெரிக்காவின் இந்த ஜனநாயகப் படுகொலைகள், இராணுவ அத்துமீறல்கள் ,வன்முறைக் கொலைகள், அராஜகங்கள், பொருளாதராத் தடைகள் எத்தனை எத்தனை.
அவை இன்றும் அமெரிக்காவை எதிர்க்கும் பல்வேறு நாடுகளுக்கும் இன்றும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. நாம் இன்னும் படிப்பினை பெற்றவர்களாக இல்லை. அமெரிக்க ஏகாதிபத்தியத்தை நம்பிக் கொண்டு துணைக்கு அழைத்துக் கொண்டு ஒடுக்கப்பட்ட எம் மக்களின் விடுதலையை அவர்களுக்கூடாக வேண்டி நிற்கிறோம். இப் புத்தகத்தில் ரெகிஸ் டெப்ரேயின் அலெண்டேயின் பதவிக்காலத்தில் எடுத்த பேட்டியும், பகுதி இரண்டில் நெருக்கடியான காலகட்டத்தில் சிலிக்கு பயணம் செய்து அங்கு நடந்துவந்த அரசியல் பொருளாதார மாற்றங்களை கவனித்து வந்த பிரிட்டீஸ் பொருளாதார நிபுணர் அலெக்நோவேயின் கட்டுரையும் இடம்பெற்றள்ளது. இவைகள், சமூக மாற்றத்திற்காக போரடுகின்ற சக்திகள் எதிர் நோக்க வேண்டிய பிரச்சனைகள் -தடைக்கற்கள் ஆகியவற்றை நமக்கு உணர்த்துகின்றது.  இன்றைய காலத்தில், நமது வாசிப்பிற்கும் – புரிதல்களுக்கும் இப் புத்தகம் முக்கியமானதாக இருக்கின்றது. இதனை சென்னை சவுத் ஏசியன் புக்ஸ் வெளியிட்டுள்ளது.(அசோக்)

சிரியாவில் ரஷ்ய பிரசன்னம் அதிகரிப்பு

சிரியாவில் தனது இராணுவ செயற்பாடுகளை ரஷ்யா அதிகரித்திருப்பதாக வெளியான செய்தி குறித்து அமெரிக்கா மற்றும் நேட்டோ கவலையை வெளியிட்டுள்ளன.ரஷ்யாவின் பங்கேற்பு பிரச்சினையை தீர்க்க உத வாது என்று நேட்டோ தலைவர் nஜன்ஸ் ஸ்டொ ல்ட்பேர்க் குறிப்பிட்டுள்ளார். மறுபுறம் ரஷ்ய வெளியு றவு அமைச்சர் செர்கே லவ்ரோவை தொலைபேசி யில் தொடர்புகொண்ட அமெரிக்க இராஜhங்கச் செய லாளர் ஜோன் கெர்ரி இந்த விவகாரம் குறித்து கவ லையை வெளியிட்டுள்ளார்.

(“சிரியாவில் ரஷ்ய பிரசன்னம் அதிகரிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

மெக்காவில் கிரைன் முறிந்து விழுந்து விபத்து 62பேர் பலி

சவுதி அரேபியாவில்  உள்ள புனித மெக்கா மசூதியில்  இன்று வெள்ளிக்கிழமை  கிரைன் முறிந்து  விழுந்து ஏற்பட்ட விபத்தில் 62 பேர் பலியானதாக சவுதி அரேபிய பாதுகாப்பு அதிகாரி தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்து உள்ளார்.  மேலும்  30 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். ஹஜ் புனித யாத்திரைக்காக அங்கு அதிகமான பேர் குவிந்து உள்ளனர் என்பது குறிப்பிட தக்கது.

சிரிய அகதிகளை ஏற்கும் உருகுவே

உருகுவேயின் தலைவர் ஜோஷ் முஹிகா பெற்றோரை இழந்த 100 சிரிய அகதி குழந்தைகளுடன் தன்னுடைய ஸொந்த வீட்டை பகிர்கிறார். கடந்த வாரம் 30 மணிநேர பயணத்தின் பின்னர் முதலாவது சிரிய அகதிகள் குழு உருகுவேயை சென்றடைந்தனர். போரை என்னால் நிறுத்த முடியாது அதன் விளைவுகளுக்கு நாடுகள் சிறிதேனும் ஈடு கொடுக்கவேண்டும் என்றார் முன்னாள் ஜனாதிபதி. “நல்ல மனசுக்காரனுக்கு சொல்லித்தர வேண்டியதில்லை” உலகெங்கும் உள்ள முஹிகாவின் ரஸிகர்களுக்கு சந்தோஷம். ப்ராவோ.!!

அரசியலமைப்பு பேரவை இன்று கூடும்

சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவுகின்ற அரசியலமைப்பு பேரவை, இன்று 10ஆம் திகதி வியாழக்கிழமை கூடவுள்ளது என்று நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்றம் நியமனம் பெற்றதன் பின்னர் அரசியலமைப்பு பேரவை இன்றைய தினமே முதன்முறையாக கூடவிருக்கின்றது. புதிய நாடாளுமன்றம் கூடியிருந்தாலும் அரசியலமைப்பு பேரவைக்கு புதிய உறுப்பினர்கள் இதுவரையிலும் நியமிக்கப்படவில்லை. எனினும், அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கு அமைவாக அரசியலமைப்பு பேரவைக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படாவிட்டாலும் தற்போது செயற்படுகின்ற அரசியலமைப்பு பேரவைக்கு கூடுவதற்கு அதிகாரங்கள் இருக்கின்றன. அதனடிப்படையில் சிவில் பிரதிநிகள் இன்றியே, அரசியலமைப்பு பேரவையின் இன்றைய கூட்டம் கூடவிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார். அரசியலமைப்பு பேரவையானது 10 உறுப்பினர்களை கொண்டிருக்கும். இதில், சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் அதிகார பூர்வமாக பங்கேற்பர். ஜனாதிபதி தனது பிரதிநிதியாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவை நியமித்துள்ளார். அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, பிரதமரின் பிரதிநிதியாக செயற்படுவார். அமைச்சர் டப்ளியு. டி.ஜே. செனவிரத்ன, கடந்த நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவரின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.

Nepali women raped by a Saudi official

Two veiled Nepali women, who told police they were raped by a Saudi official, sit in a vehicle outside Nepal’s embassy in New Delhi, India, September 9, 2015. Indian police are investigating accusations that a Saudi Arabian embassy official repeatedly raped the two Nepali maids at his home close to the capital, New Delhi, in a case that could reignite the debate over immunity granted to diplomats. The two women, aged 30 and 50, told police they were raped, assaulted, starved and held hostage over several months after leaving Nepal to work for the official.

எழுத்தாளர் நடேசனுடன் சந்திப்பு

அவுஸ்திரேலியாவில் வதியும் மிருகவைத்தியரும் எழுத்தாளருமான டொக்டர் நடேசன் கனடாவுக்கு வருகைதந்துள்ளார். சிறுகதை, நாவல், பத்தி எழுத்துக்கள் முதலான துறைகளில் சில நூல்களையும் வரவாக்கியிருக்கும் நடேசனுடனான சந்திப்பு எதிர்வரும் 20 th September திகதி Sunday, மாலை 5.30 PM.மணிக்கு கனடாவில் 430 mayfair on the Green..,Mclivin Avenue , Scarborough Ontario நடைபெறும். இந்தக் கலந்துரையாடலில் சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர்களான தேவகாந்தன் என் கே மகாலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வார்கள். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

மேலதிக விபரங்களுக்கு
Sabesan – 4168011654
e mail uthayam12@gmail.com
புரட்டாசி 09, 2015

பாருங்க!…..பாருங்க!!….பாருங்க!!!…. – இதுக்கு பேருதானா அரசியல் …………………………..?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தொடர்ந்தும் தமிழன் நம்புறான் பாருங்க!
ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தமிழன் வோட்டு போடுறான் பாருங்க!!
டக்ளஸ் தேவானந்தாவும் தொடர்ந்து தேர்தலில் வென்று மந்திரியாகிறார் பாருங்க!!!
போதைவஸ்து கடத்தல்காரனைக் கூட ஆயர் இராயப்பு ஜோசேப்புவும் கத்தோலிக்க குருமாரும் ஆதரிக்கிறார்கள் பாருங்க!!!!
பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என இன்னமும் சில தமிழர்கள் சொல்லுறாங்கள் பாருங்க!!!!!
பச்சைப் பயங்கரவாதி எழிலனின்; மனைவி அனந்தி கூட மனித உரிமை பற்றி பேசுகிறா பாருங்க!!!!!!
இதுக்கு பேருதானா அரசியல்.?

இப்படிப் போகின்றது விக்கி, சுரேஷ், கஜேன் கூட்டமைப்பு

சிங்களத்தின் ‘அடி கழுவி – தழுவி’, வடக்கில் நடக்கிறது மாபெரும் தமிழினத் துரோகச்சதி !!!
மாண்புமிகு முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயா அவர்களையும், முதலமைச்சருக்கு ஆதரவாக செயல்படும் கௌரவ அமைச்சர் ஐங்கரநேசன் அவர்களையும், பதவிகளை இராஜினாமா செய்துவிட்டு வெளியேறுமாறு கடந்த மூன்று நாள்களாக ‘சம்பந்தன் – சுமந்திரன் – மாவை’ கூட்டுக்கும்பல், இருவருக்கும் கடும் ‘பிரஸர்’ கொடுத்துக்கொண்டிருக்கின்றது! சோற்றில் உப்புபோட்டுச் சாப்பிடும் சமூகமாகவிருந்தால் வெகுண்டெழுந்து நல்லூர் ஆலய முன்றலில் ஒன்றுகூடி எதிர்ப்பை காட்டுங்கள் !!!