சிறுபான்மை இனங்களின் மீதான சந்தேகப் பார்வை, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகின்றதே தவிர, கொஞ்சமேனும் குறையவில்லையென்பது இடம்பெறுகின்ற ஒவ்வொரு சம்பவங்களும் அச்சொட்டாகப் புடம்போட்டுக் காட்டிவிடுகின்றன.
வெலிக்கடையை வென்ற வெருகல்.
(Sutharsan Saravanamuthu)
கறுப்பு ஜூலையை விஞ்சிய சிகப்புச் சித்திரை .கிழக்கு மண்ணில் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட போராளிகளுக்கு எனது வீரவணக்கங்கள்.10 04 2004 வெருகல் படுகொலை நினைவுநாள்,புலிகளின் வரலாற்றை புரட்டிபோட்ட நாள், கருணா அம்மானும் கிழக்கு போராளிகளும் இல்லாத ஆண்டுகள் புலிகளின் வீழ்ச்சிகாலங்களாகவே இருந்தன, எதிரி என்று சொல்லப்பட்ட இலங்கை அரசுடன் தேனிலவு கொண்டாடத் தெரிந்த புலிகளுக்கு தமது சொந்த போராளிகளுடன், ஒன்றாகவிருந்து உணவுண்டவர்களுடன் பேசத்தெரிந்திருக்கவில்லை.
சித்திரவதையின் உச்சம்
இந்த புகைப்படத்தைப் பார்த்தவு டன் இதயத்தில் இனம் தெரியாத வலி. அதன் பின்னணியை வாசித்த போது இதயம் கண்ணீர் விட்டு அழுதது….படத்தில் உள்ள இவரின் பெயர் மன்சூர் ஷஹாதீத், பலஸ்தீன முஸ்லீம். 17 வருடங்கள் இஸ்ரேலிய சிறைச் சாலையில் கடும் சித்திரவதைக் கும், பலவந்த தனிமைபடுத்தலுக் கும் ஆளாகியதால் மனநிலை பாதிக்கவைக்கப்பட்டவர். இஸ்ரேலிய இனவாத சக்தியின் கொடூர கொடுமைப்படுத்தல் காரணமாக மனநிலை பாதிக்கப் பட்ட நிலையில் நேற்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
‘எல்லைச் சண்டைகளில் 100 பேர் கொல்லப்பட்டனர்’
இளைஞர்களைப் புறக்கணிக்கும் தமிழ்க் கட்சிகள்
(புருஜோத்தமன் தங்கமயில்)
தாயக அரசியலில் ஆர்வம் காட்டிவரும் புலம்பெயர் தேசங்களிலுள்ள அரசியல் செயற்பாட்டாளர்கள், புலமையாளர்கள் சிலருக்கு இடையிலான இணையவழி உரையாடலொன்று அண்மையில் நடைபெற்றது. அதன்போது, ‘தமிழ்த் தேசிய கட்சிகள், இளைஞர்களை அரசியலுக்குக் கொண்டுவரத் தயங்குவது ஏன்? குறைந்த பட்சம், அரசியல் விழிப்புணர்வுக் கருத்தரங்குகளைக்கூட இளைஞர்களை இணைத்துக் கொண்டு கட்சிகள் நடத்துவதற்குப் பின்நிற்பது ஏன்?’ என்ற தொனியிலான கேள்விகள் முன்வைக்கப்பட்டு, உரையாடப்பட்டன. குறித்த உரையாடலில், தாயகத்திலிருந்து பங்குகொண்ட ஒருவராக, இதற்கான பதில்களை நான் வழங்க வேண்டியிருந்தது.
நடுத்தெருவில் பாய்ந்த சட்டமும் கொடுமையான மகிழ்வும்
தன்னை காப்பாற்றிக்கொள்வதற்காக, கடலுக்குள் பாய்ந்த இளைஞன், கைக்கூப்பிக் கும்பிட்டு மன்றாடியும், பொல்லுகளினால் அடித்தே கொன்ற சம்பவமொன்று பம்பலப்பிட்டிய ரயில் நிலையத்துக்கு அருகாமையிலுள்ள கடலில் 2009இல் இடம்பெற்றமை யாவருக்கும் ஞாபகத்தில் இருக்கும். அக்காட்சிகளை இப்போது பார்த்தாலும் இரத்தத்தை உறையவைக்கும்.
தமிழகத் தேர்தல்: பொத்தானுக்குள் சிக்கும் ஐந்து ஆண்டுகள்
நொடிப்பொழுதில் அழுத்தும் பொத்தானுக்குள் சிக்கும் 5 ஆண்டுகள்
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியாவாகும். அங்கு மத்திய அரசாங்கமாக இருந்தாலும் சரி, மாநில அரசாங்கங்களாக இருந்தாலும் சரி, ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் திருவிழா நடந்தே தீரும். அதில், ஆளப்போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் மிகக்கூர்மையான ஆயுதமே வாக்குரிமையாகும்.
மலையக மக்களின் உரிமை
விரிவுரையாளர் இன்பமோகன் பேராசிரியரானார்
தோழர் வே. ஆனைமுத்து தனது சிந்தனையை நிறுத்திக் கெண்டார்.
(சாகரன்)
ஈவேரா என்று அழைக்கப்படும் பெரியாரை அறிந்தவர்கள் தோழர் வே. ஆனைமுத்துவை அறியாமல் இருக்க முடியாது. பெரியாரின் மூச்சை… சிந்தனையை… பேச்சை… செயற்பாட்டை… பெரும்பாலும் முழுமையாக தொகுத்தவர் செயற்படுத்த முற்பட்டவர் அவற்றை இந்தியா முழுவதும் எடுத்துச் சென்றவர் என்றால் அது தோழர் ஆனைமுத்துவையே சேரும்.
பெரியாரின் படைப்புகளைத் தொகுத்தவரும் பெரியாரிய – மார்க்சிய ஆய்வாளருமான வே. ஆனைமுத்து புதுச்சேரியில் ஏப்ரல் 06, 2021 தனது வயது முதிர்வின் காரணமாகவே நீண்ட காலமாக வீட்டிலும் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுவந்ததவர் தனது 96 வயதில் சிந்தனையை நிறுத்திக் கொண்டார்.