முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளராக 40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய கே.பி.ராமகிருஷ்ணன் காலமானார். சினிமாவில் சண்டைப் பயிற்சி கலைஞராகவும் எம்.ஜி.ஆர் இரட்டை வேடத்தில் நடித்த அனைத்து படங்களிலும் அவருக்கு டூப் போட்டு நடித்தவர் இவர்தான். ஒரு சில படங்களில் நம்பியாருக்கும் டூப் போட்டு நடித்துள்ளார்.
ஹர்த்தாலுக்கான முஸ்லிம் சமுகத்தின் ஆதரவு: இது புதிய தொடக்கமாகட்டும்!
(எஸ். ஹமீத்)
சகோதர தமிழ் சமுகத்தின் உரிமைப் போராட்டத்தில் உணர்வோடு தம்மையும் அர்ப்பணிக்க ஆயத்தமாகிவிட்ட முஸ்லிம் சமுகத்தின் தற்போதைய தீர்மானம் உண்மையிலேயே வரவேற்கத்தக்கதாகும். ஆண்டாண்டு காலமாக அடக்கியொடுக்கப்பட்ட இரு சமூகங்கள் தமக்கிடையேயான முரண்பாடுகளுக்கப்பால் இத்தருணம் இணைந்து இனவாதத்திற்கும் எதேச்சாதிகாரத்திற்கும் எதிராகக் குரல் கொடுப்பதற்குக் களமிறங்கியிருப்பது காலத்தின் மிக மிக இன்றியமையாத தேவையென்பதில் மாற்றுக் கருத்துகள் நம்மிடையே இருக்க முடியாது.
நவம்பர் 19 நாபா பிறந்த தின நினைவுகள்
பிறப்பும் இறப்பும் எம் கையில் இல்லை என்றாலும் வாழ்தல் நாம் வகுத்துக்கொள்ளும் வழிமுறையில் செல்கிறது. சுயநலம், உறவுகள் நலம், பொதுநலம் என்ற தெரிவும் எமதே. அடிப்படையில் நாம் சுயநலம் கொண்டவராக ஆரம்பித்து உறவுகளின் கலப்பில் அவர் சார்ந்த நலம் பேணும் நிலைக்கு ஆட்பட்டு பின்பு சமூகப் பாதிப்பில் தான் பொதுநலம் பற்றிய சிந்தனையில் ஈடுபடுகிறோம். அதில் ஓரளவு எமது பங்களிப்பை செய்தாலும் சுயநலமும் உறவுகள் நலமும் முன்னிலைப்படுதல் யதார்த்தம்.
‘மயிருள்ள சீமாட்டி அவிழ்த்தும் விடலாம்; அள்ளியும் முடிஞ்சுக்கலாம்’
அடுத்தவரைப் பார்த்து வாழநினைத்தால் இருப்பதையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்துநிற்க வேண்டிய நிலைமைதான் ஏற்படும். இல்லையேல், கடன்காரர்களின் தொல்லைகளால் இறுதியில் தன்னுயிரை மாய்த்துக்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமையே ஏற்படும். அவ்வாறான சம்பவங்கள், எமது நாட்டில் ஏராளமாக இடம்பெற்றுள்ளன.
கடும் பிற்போக்குச் சிந்தனைகளை விதைத்த மிகச் சரியான நாள்
யாழ். பல்கலையிலும் கரிநாள் பிரகடனம்
நான், சிங்கள-பௌத்த தலைவன்’ – கோட்டாபய ராஜபக்ஷ
’தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து பேரினவாதத்தை எதிர்க்கலாம்’
வியட்நாமில் அமெரிக்கா
(Maniam Shanmugam)
அமெரிக்கா தனது வல்லாதிக்க கொள்கைகளை எதிர்ப்பவர்களை மிரட்டி அடிபணிய வைப்பதற்கு “மனித உரிமை மீறல்” என்ற சொற்பதத்தைப் பயன்படுத்தி வருகின்றது. ஆனால் இரண்டாம் உலக யுத்தம் முடிவடைந்த பின்னர் அமெரிக்கா உலகம் முழுவதும் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் எல்லோரும் அறிந்த சங்கதி.