யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஊர்கள்

அச்சுவேலிஅராலிஅரியாலைஅளவெட்டிஆவரங்கால்ஆனைக்கோட்டைஇணுவில்இடைக்காடுஇருபாலைஇளவாலைஉடுவில்உரும்பிராய்ஊரெழுஏழாலை

உழவுக்கு வந்தனம் செய்வோம்!

உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் மனிதனுக்கு மிகவும் அவசியம். இவை அனைத்தும் விவசாயத்தின் அடிப்படையில் பெற வேண்டும். உணவு இல்லையென்றால் மனிதனால் உயிர்வாழ முடியாது. விவசாயி ‘சேற்றில் கால்வைத்தால்தான், நாம் சோற்றில் கைவைக்க முடியும்’.’தாளாற்றி தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தல் பொருட்டு’ என விவசாயத்தின் மகத்துவத்தை திருவள்ளுவர் கூறுகிறார். இன்றைக்கு விவசாயத்தின் நிலை என்ன?
விவசாயம் அழிவுப்பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதற்கு காரணமும் மனிதர்களாகிய நாம்தானே. மனிதனின் உயிர்மூச்சாக இருந்தது விவசாயம்.

25ஆவது திருத்தத்துடன் ட்ரம்ப்பை அகற்றுவதை எதிர்க்கும் பென்ஸ்

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை பதவியில் இருந்து அகற்றுவதற்காக 25ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதை எதிர்ப்பதாக, அந்நாட்டின் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்ஸி பெலோஸிக்கு அந்நாட்டின் உப ஜனாதிபதி மைக் பென்ஸ் நேற்று தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலியத் தாக்குதல்களில் 57 பேர் கொல்லப்பட்டனர்’

கிழக்கு சிரியாவில், ஆயுதக் களஞ்சியங்களை மற்றும் இராணுவ நிலைகளை இலக்கு வைத்த இஸ்ரேலிய இரவுத் தாக்குதல்களில் குறைந்தது 10 சிரியப் படைவீரர்களும், 47 இணைந்த போராளிகளும் கொல்லப்பட்டதாக மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் நேற்று தெரிவித்துள்ளது.

சக்திவாய்ந்த நிலநடுக்கம்; கூட்டம் கூட்டமாக வெளியேறும் மக்கள்!

இந்தோனேசியாவில் உள்ள சுலவெசி தீவில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது ஏழு பேராவது உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பதற்றத்தில் வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

தூபி அமைக்கும் பணி ஆரம்பம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில், மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை அமைப்பதற்கான வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தரின் பணிப்புரைக்கமைய, பொறியியல் வேலை பகுதியினரால் அளவீடுகள் மற்றும் கட்டட வரைபடம் வரையும் பணி, நேற்று (13) முன்னெடுக்கப்பட்டன.

தை பிறந்தால் வழி பிறக்கும்…. தைத் திருநாள்…அறுவடை நாள் வாழ்த்துகள்

(சாகரன்)

தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற எல்லோருக்கும் வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படுத்தி முன்னேறுவதற்குரிய கொண்டாட்டத்திற்குரிய அறுவடையை கொண்டாடும் நாள். அறுவடையை வைத்தே தை பிறந்தால் வழி பிறக்கும் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள் என்பதில் எனக்கு உடன்பாடு உண்டு. எனது அனைத்து தோழமைகளுக்கும், சகாக்களுக்கும், நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் என் தைத் திருநாள், உழவர் திருநாள் வாழ்த்துகள்.

ஜல்லிக்கட்டை ரசித்தார் ராகுல் காந்தி

பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருவதுவழக்கம். அதில், முதல் ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையான இன்று அவனியாபுரத்தில் வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது.

பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் தேச ஐ. அமெரிக்க பட்டியலில் கியூபா

பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் தேசங்களின் ஐக்கிய அமெரிக்க பட்டியலில் கியூபாவை இணைத்துள்ளதாக ஐ. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகமானது நேற்று அறிவித்துள்ளது.

நினைவுத்தூபி அழிப்பு: அறத்தின் மீதான ஆக்கிரமிப்பு

(புருஜோத்தமன் தங்கமயில்)

போர் வெற்றி வாதத்துக்கு எதிராக முளைக்கும் சிறிய புல்லைக்கூட, விட்டு வைத்துவிடக் கூடாது என்பது ராஜபக்‌ஷர்களின் ஒரே நிலைப்பாடு. அதுபோல, பௌத்த சிங்கள மேலாதிக்க மனநிலையைக் கேள்விக்கு உள்ளாக்கும் எந்தவோர் அம்சத்தையும், நாட்டின் எந்தப் பாகத்திலும் அனுமதித்துவிடக் கூடாது என்பது, தென் இலங்கையின் குறிக்கோள்.