தோழர்களை நினைவுகூர்வோம். …….

தோழர் நடேசலிங்கம் EPRLF இல் களப்பலியான முதலாவது தியாகி.தோழர் நடேசலிங்கம் அவர்கள் EPRLF இன் அமைப்பாளர்களில் ஒருவர். 1981 அக்டோபர் 4ம் திகதி முதல் 11 ம் திகதி வரரை தமிழ்நாடு கும்பகோணத்தில் நடைபெற்ற கட்சியின் அமைப்பாளர் மகாநாட்டில் தோழர் நடேசலிங்கம் மத்திய குழு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டவர். “தாடிக் கிழவனின் பாதையில் தாகம் எடுத்து நடப்பேன்” என கவிதை எழுதிய தோழர் நடேசலிங்கதின் வாழ்க்கையின் நினைவுகள் எம் நெஞ்சைவிட்டகலாது .

மாதவிடாய் வரியும் ’ சம்மட்டியை ’ கையிலேந்தி நிற்கும் சிலையும்

பிரதான நகரங்கள், சில சந்திகளில் கம்பீரமாய் காட்சியளிக்கும் சிலைகளில் காகங்கள் எச்சமிட்டிருப்பதை பார்த்து பலரும் சிரித்திருப்பர். ஆனால், சிலைகளின் பின்னிருக்கும் வருத்தங்கள் தெரியாமலே போய்விடும். சிலைகளுக்குப் பின்னாலும் ஏதோவொரு வகையில் ‘இரத்தம் தோய்ந்த’ கதைகள் உண்டு.

கார்த்திகை பூவே

(சுகன்)

போர்க்களத்தைத்தவிர வேறெதற்கும் இந்த நஞ்சுச் செடி நினைவுகூரப்படுவதில்லை. போரிற்குச் செல்லுமுன் செங்காந்தள் மாலையை அணிந்து செல்வதாய ஒரு சித்திரம் புறநானூறில் உண்டு.பெண்களின் கைவிரல்களுக்கு அழகின் உவமானமாகக் கொள்வது இப்பூவின் உருவம்.

கௌரவர்களுடன் யுத்தம் என முடிவெடுத்தபின் திரோபதி இந்த மலரைத் தலையிற் சூடி அதை உறுதிப்படுத்தினாரென பாரத உபகதை உண்டு.Gloriosa superba என தாவர வகைப்பாட்டில் அடையாளப்படுத்தப்படும் இச்செடியருகே பாம்புகள் படுத்திருக்குமெனவும் பார்த்தால் கண்வருத்தம் வருமெனவும் வேலியோரங்களில் தானே வளரும் இதை வெட்டி அழித்துவிடுவார்கள்.

இதைக் குறியீடாகக் கொள்ளும் இனக்குழுக்கள் அழிந்துபோவர்கள் என ஐதீகம்.அழகைக் காட்டினாலும் ஆரும் இம்மலரை அண்டுவதில்லை.தமிழ்நாட்டுத் தமிழுணர்வாளர் ஒருவர் பிரபாகரனுக்குப் பரிந்துரை செய்தது இது.

தமிழ்நாட்டினதும் சிம்பாப்வேயினதும் தேசிய மலரிது. துக்கத்தின் குறியீடாகக்கூடக் கொள்ளப்படாத இப்பூவையும் செடியையும் ஆடு- மாடு மற்றும் தாவர பட்சணிகள் எதுவும் உணவாகக் கொள்வதில்லை.

பூவே செம்பூவே ..என பாடும் பாடல்களிலும் இதற்கு இடமில்லை,வாசமில்லா மலரிது…மல்லிகைப்பூவே ..மல்லிகைப்பூவே பார்த்தாயா..செந்தூரப்பூவே ..செந்தூரப்பூவே..முல்லை மலர்மேலே மொய்க்கும் வண்டுபோலே..தாமரை பூத்த தடாகமடி…இப்படியாக வாழ்வோடிணைந்துவரும் பூக்களின் வழியிலும் இதற்கு இடமில்லை.கோவில்களின் சிற்பங்களிலும் இல்லை.பூசைக்கேற்ற பூவிது..எனக் கொண்டோருமில்லை.தண்மையும் குளிர்மையுமற்ற இப்பூ நெருப்பின் தீச்சுவாலை வடிவமாக அனல் மேலெழும் உற்பவமாகப் பார்க்கப்படுவதுமுண்டு “கார்த்திகைப்பூக் காதலர்கள் ” ஆழ்ந்த இரக்கத்திற்குரியவர்கள்.

கார்த்திகைக் கோலம்

(George RC)

கார்த்திகை மாதம் வந்தால்பூ படம் போட்டுஓவரா சீன் போடும்கார்த்திகைப் பூ காதலர்களே!நெஞ்சிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டுநீங்கள் வைக்கும் கூலிக்கு மாரடிக்கும் ஒப்பாரிகளையும்நீலிக் கண்ணீர், முதலைக் கண்ணீர்,ஆடு நனையுதெண்டு ஓநாய் அழுத கண்ணீர் எல்லாவற்றையும்பார்த்தால்…உண்மையில் தங்கள் பிள்ளைகளை, தந்தையரை, துணைவரை போராளிகளாக இழந்தவர்கள் கூடஇப்படி கூத்துக் காட்ட மாட்டார்கள்.அவர்கள் மெளனமாக அழுது விட்டுப் போவார்கள்.”’

கூர்மை அடையும் காணிப் பிரச்சினைகள்

(மொஹமட் பாதுஷா)

உலக சரித்திரத்தில் நிலம் சார்ந்த போராட்டங்களுக்கு முக்கியமான இடம் இருக்கின்றது. நில ஆக்கிரமிப்புக்கான இராணுவ, இராஜதந்திர நகர்வுகளும் நிலமீட்புக்கான போராட்டங்களும், யுத்தங்களில் முடிந்ததை நாம் அறிவோம்.

ஆயிரம் மலர்வது, ‘ஜனவரி’ நாடகமாக இருந்துவிடக்கூடாது

ஆயிரம் மலர்வது, ‘ஜனவரி’ நாடகமாக இருந்துவிடக்கூடாது. ஒன்றை அடையவேண்டு​மாயின், ஏதாவதொன்றை அர்ப்பணிக்க வேண்டுமென்பர். ஆனால், எவ்வளவுதான் அர்ப்பணித்தாலும் சாதாரண கோரிக்கையையேனும் நிறைவேற்றப்படாவிடில், அம்மக்களின் வாழ்க்கை ஒளிமயமானதாகவே இருக்காது.

மரடோனா காலமானார்

கால்பந்து ஜாம்பவான் மரடோனா காலமானார் என்று ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மாரடைப்பு காரணமாகவே அவர் காலமானார் என அவருடைய பேச்சாளர் தெரிவித்துள்ளார். இறக்கும் போது அவர்க்கு வயது 60 ஆகும். அவர், 1986ஆம் ஆண்டு உலக கால்பந்து கிண்ணத்தை ஆர்ஜென்டினா வெல்வதற்கு பெரும் பங்குவகித்தவர்.

தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 294 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பேலியகொடை கொரோனா கொத்தணியின் தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து நாட்டில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 21261ஆக உயர்ந்துள்ளது. 5720 பேர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

கண்டி, களுத்துறையில் முடக்கப்பட்ட பகுதிகள்

கண்டி, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் சில கிராம உத்தியோகஸ்தர் பிரிவுகள் நேற்றிரவு முதல், மறு அறிவித்தல் வரையிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்பிரகாரம், களுத்துறை – பண்டாரகம பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அட்டுலுகம கிழக்கு, எபிட்டமுல்ல, கொலமெதிரிய ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை, கண்டி-அக்குறணை பிரதேச செயலக பிரிவில் உலுகஹதென்ன, தெலெம்புகஹவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

ரஸ்யாவுக்குச் சென்ற 27 இலங்கையர்கள் கைது

போலி ஆவணங்களை சமர்ப்பித்து, கல்வி மற்றும் தொழில் வாய்ப்புக்காக ரஸ்யாவுக்குச் சென்ற 27 இலங்கையர்கள் அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, ரஸ்யாவுக்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.