தேர்தல் வெற்றியைத் தீர்மானிப்பதற்கு பணபலமும் ஊடக பலமும் மட்டும் போதுமா?

(கே. சஞ்சயன்)

வடக்கின் தேர்தல் களத்தில், முன்னெப்போதும் இல்லாத ஒரு குழப்பமானதும் வித்தியாசமானதுமான சூழல் இப்போது காணப்படுகிறது. கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு, தேர்தலில் பணபலம், அதிகார பலம், ஊடகப் பலம் என்பன, தேர்தலைத் தீர்மானிக்கும் சக்தியாக, இம்முறை மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

மக்களோடு மக்களாய்: தமிழர் சமூக ஜனநாயக கட்சி

வன்னி மக்களின் தொழில்வாய்ப்போடு கூடிய அபிவிருத்திக்கு தமிழர் சமூக ஜனநாயக கட்சி மெழுகுவர்த்தி சின்னமே ஒளிதரும்….. இலக்கம் …6.

வியட்நாமில் 99 நாட்களுக்குப் பிறகு திரும்பிய கரோனா

99 நாட்களுக்குப் பிறகு வியட்நாமில் மீண்டும் கரோனா பரவ தொடங்கியுள்ளது அந்நாட்டு மக்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. 9 கோடிக்கு அதிகமான மக்கள் தொகைக் கொண்ட வியட்நாம், உலக நாடுகள் கரோனா பரவலின் தீவிர தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில் கரோனாவை கட்டுப்படுத்தி முன் உதாரணமாக இருந்தது .

யாருக்கு அருகதை உண்டு தமிழர் தரப்பில்…?

(சாகரன்)
2009 ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிவைத் தொடர்ந்த யுத்தமற்ற சூழலுக்கு பின்ரான அரசியலைப் பேசவிளையும் பதிவு இது. தாம் சொல்லும் அரசியலை பாராளுமன்றத்தில் கிளிப்பிள்ளைப் போல் சொல்லவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு(TNA) உண்மையான பன்முகத் தன்மை கொண்ட பல கட்சிகளின் ஐக்கியப்பட்ட அமைப்பா…? என்றால் இல்லை என்ற பதிலை நாம் யாரும் மறுக்க மாட்டோம்.

’இலங்கை அரசாங்கத்தை டக்ளஸே காப்பாற்றினார்’

“ஜெனிவா சென்று, இலங்கையில் இனப்படுகொலை நடைபெறவில்லை என்று பேசியவர் தான் டக்ளஸ் தேவானந்தா. பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட நிலையில், ஜெனிவாக்கு சென்று இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றியவர்” என, தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

விக்கியின் வியாக்கியானங்கள்

(புருஜோத்தமன் தங்கமயில்)

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன், திருகோணமலையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில், “…சம்பந்தன் எந்தவொரு பிரச்சினையையும் உடனடியாகத் தீர்ப்பதில்லை. ‘பேசுவோம், பார்ப்போம்’ என்று கூறி, விடயத்தைத் தட்டிக்கழிப்பார். அதனாலேயே, பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுக்கின்றன…” என்று, தெரிவித்திருக்கிறார்.