யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தோருக்கு பரிசோதனை

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தோருக்கான கொரோனா பரிசோதனையானது யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெறுகின்றன.

கோப்பாயில் பொலிஸார் குவிப்பு

கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் இரண்டு விடுதிகள் கோப்பாய் பிரதேசத்தில் கடமையாற்றி தற்போது விடுமுறையில் உள்ள இராணுவ வீரர்களை இருபத்தொரு நாள்கள் தனிமைப்படுத்துவதற்காக, நேற்று முன்தினம் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுருந்த நிலையில், நேற்றைய தினம் அந்த பகுதியில் பொது மக்களின் எதிர்ப்பு ஏதாவது ஏற்படலாம் என்ற ரீதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு, பொலிஸார் ரோந்து நடவடிக்கையும் பலப்படுத்தப்பட்டுள்ளதை காணக்கூடியதாக இருந்தது. எனினும் அந்த இடத்தில் எந்தவொரு போராட்டமும் பொதுமக்களால் முன்னெடுக்கப்படவில்லை.

விவசாயிகளுக்காக அரசு செய்ய வேண்டியது என்ன?

ஊரடங்கால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களது விளைபொருட்களைத் தடையின்றி விற்கவும், விளைபொருட்களுக்குத் தகுந்த விலை கிடைக்கவும் மா.சா.சாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், அரசுக்குச் சில பரிந்துரைகளை முன்வைக்கிறது. இந்தப் பரிந்துரைகள் திண்டுக்கல், விழுப்புரம், புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய மாவட்ட விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலானவை.

ஜிம்பாப்வேயில் இருமுனைத் தாக்குதல்

ஜிம்பாப்வே இரண்டு முனைகளில் போராடிக்கொண்டிருக்கிறது. ஆம்! அங்கே மலேரியா பெருந்தொற்றும் ஏற்பட்டிருக்கிறது. 1.35 லட்சம் பேருக்கு மலேரியா தொற்று ஏற்பட்டிருக்கிறது. வெப்பமும் ஈரப்பதமும் கொண்ட பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில்தான் ஜிம்பாப்வேயில் மலேரியா போன்ற தொற்றுக்கள் ஏற்படும். ஏற்கெனவே, வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் அந்த நாட்டில் கடந்த இருபதாண்டுகளாக மருத்துவக் கட்டமைப்பும் சீர்குலைந்துபோயிருக்கிறது. இந்த நிலையில் கரோனா, மலேரியா என்று இரண்டு பக்கத் தாக்குதல் அங்கு ஏற்பட்டிருக்கிறது. மலேரியா மட்டுமல்ல; எய்ட்ஸ், காசநோய் ஆகியவையும் அங்கே அதிகம் பேரைக் கொல்லும் நோய்கள். செய்வதறியாது தவிக்கிறது ஜிம்பாப்வே.

ஜோதிகாவின் அண்மைய கருத்து…

(சாவித்திரி கண்ணன்)

புதுசா நான் சொல்றதுக்கு ஒன்னுமில்லை,ஜோதிகா விவகாரத்தில்!
அவர் பேசியது நிஜமான சமூக அக்கறை சார்ந்து என்பதை நிருபிக்க எந்த மெனக்கிடலும் அவசியமில்லை!

புத்தகம்…..

(சாகரன்)

(உலக புத்தக தினத்தை முன்னிட்டு இப்பதிவை எழுதியுள்ளேன்)

அகரம் என்ற அரிச்சுவடியை மதிப்பிற்குரிய மூத்தவரின் மடியில் இருந்து தாம்பாளத்தில் உள்ள பச்சையரிசியில் விஜயதசமி அன்று என் பிஞ்சுக் கரம் பற்றி ஏடு தொடக்கிய நாளில் கற்கண்டு உடன் அ இலிருந்து ஃ வரையிலான எழுத்துக்களையுடைய அரிச்சுவடிதான் நான் பெற்ற முதல் புத்தகம். இது பனை ஓலையிலான் ஆனது. ஒரு பக்கமாக இருந்தாலும் இது இன்றி நான் இல்லை.. நாம் இல்லை. இன்றளவிற்கு மிகப் பெரிய பொக்கிஷமாக… முதல் புத்தகமாக இதனை நான் என் வாழ்நாளில் கருதுகின்றேன்.

இது US Hotal, Jaffna இன் பதிவு

உணவிற்காக தவிக்கும் கஷ்டப்பட்ட மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு சமைத்த உணவை (மதிய உணவு மாத்திரம் )வழங்க நாம் தயாராக உள்ளோம். நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையை கருத்திற் கொண்டு மனிதாபிமான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்துள்ளோம்

தூய்மைப் பணியாளர்களின் கண்ணியமான வாழ்க்கைக்கு இப்போதாவது வழி பிறக்குமா?

கரோனாவுக்கு எதிரான போரில் அரசுத் துறை நிறுவனங்களின் தேவைகளையும் சேவைகளையும் சமூகம் உணரத் தொடங்கியுள்ளது. மருத்துவம், வருவாய், காவல், உள்ளாட்சித் துறைகள் பாராட்டப்படுகின்றன. தூய்மைப் பணியாளர்களின் சவால் நிறைந்த பணியையும் சமூகம் உணரத் தலைப்படுகிறது என்றாலும் மற்ற துறைகளுக்கு இருக்கும் அதிகாரமோ, கிடைக்கும் மரியாதையோ, மற்றவர்கள் பெறும் உரிமைகளோ எதுவும் என்றைக்கும் தூய்மைப் பணியாளர்களுக்குக் கிடைக்காது என்பதே நிதர்சனமான உண்மை.

தமிழகம், குஜராத் உள்பட 3 மாநிலங்களில் கரோனா நிலவரத்தை ஆய்வு செய்ய மத்தியக் குழு: உள்துறை அமைச்சகம் அனுப்பியது


தமிழகம், குஜராத், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் கரோனா வைரஸ் பரவல் குறித்தும், எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்ய 4 மத்தியக் குழுக்களை உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது.

கோத்தாவும் கொரோனாவும்

உயிர்த்தஞாயிறன்று இசுலாமிய அடிப்படைவாத கொலைக்கும்பலால் நடத்தப்பட்ட நரபலி வெறியாட்டத்தைத் தொடர்ந்து இசுலாமியர்கள் மீது சிங்கள மக்களிடத்தில் மேலிட்ட பகையுணர்வானது, இசுலாமியர்களை முடக்கி அவர்களை சிறிலங்காவின் பொருண்மியத்திலும் அரசியலிலும் எந்தவொரு தாக்கத்தையும் செலுத்த இயலாதவர்களாக்கி சிறிலங்காவை அச்சுறுத்தலற்ற நாடாக்க வேண்டும் என்ற வேணவாவை சிங்களவர்களிடத்தில் ஏற்படுத்தியதன் விளைவாக, அப்படியொரு விடயத்தை செயற்படுத்தவல்ல ஆளுமையாக கோத்தாபயவினை சிங்கள மக்கள் பார்த்தார்கள்.