தூய்மைப் பணியாளர்களின் கண்ணியமான வாழ்க்கைக்கு இப்போதாவது வழி பிறக்குமா?

கரோனாவுக்கு எதிரான போரில் அரசுத் துறை நிறுவனங்களின் தேவைகளையும் சேவைகளையும் சமூகம் உணரத் தொடங்கியுள்ளது. மருத்துவம், வருவாய், காவல், உள்ளாட்சித் துறைகள் பாராட்டப்படுகின்றன. தூய்மைப் பணியாளர்களின் சவால் நிறைந்த பணியையும் சமூகம் உணரத் தலைப்படுகிறது என்றாலும் மற்ற துறைகளுக்கு இருக்கும் அதிகாரமோ, கிடைக்கும் மரியாதையோ, மற்றவர்கள் பெறும் உரிமைகளோ எதுவும் என்றைக்கும் தூய்மைப் பணியாளர்களுக்குக் கிடைக்காது என்பதே நிதர்சனமான உண்மை.

தமிழகம், குஜராத் உள்பட 3 மாநிலங்களில் கரோனா நிலவரத்தை ஆய்வு செய்ய மத்தியக் குழு: உள்துறை அமைச்சகம் அனுப்பியது


தமிழகம், குஜராத், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் கரோனா வைரஸ் பரவல் குறித்தும், எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்ய 4 மத்தியக் குழுக்களை உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது.

கோத்தாவும் கொரோனாவும்

உயிர்த்தஞாயிறன்று இசுலாமிய அடிப்படைவாத கொலைக்கும்பலால் நடத்தப்பட்ட நரபலி வெறியாட்டத்தைத் தொடர்ந்து இசுலாமியர்கள் மீது சிங்கள மக்களிடத்தில் மேலிட்ட பகையுணர்வானது, இசுலாமியர்களை முடக்கி அவர்களை சிறிலங்காவின் பொருண்மியத்திலும் அரசியலிலும் எந்தவொரு தாக்கத்தையும் செலுத்த இயலாதவர்களாக்கி சிறிலங்காவை அச்சுறுத்தலற்ற நாடாக்க வேண்டும் என்ற வேணவாவை சிங்களவர்களிடத்தில் ஏற்படுத்தியதன் விளைவாக, அப்படியொரு விடயத்தை செயற்படுத்தவல்ல ஆளுமையாக கோத்தாபயவினை சிங்கள மக்கள் பார்த்தார்கள்.

செல்வம் அங்கே நாயகம் இங்கே!

(Maniam Shanmugam)
‘கம்யூனிஸ்ட் கார்த்திகேசன்’ என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்ட மு.கார்த்திகேசன் மாஸ்டர் தான் உறுதியுடன் பின்பற்றிய சோசலிசக் கருத்துகளை கேட்பவர்கள் மனதில் பதியும்படி நகைச்சுவையுடன் சொல்வதில் வல்லவர்.

இலங்கையில் தொற்றாளர்கள் 368

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 368ஆக உயர்ந்துள்ளது. இலங்கையில் இன்றுமட்டும் 38 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாகவும் இவர்களில் நால்வர் கொழும்பு-12, பண்டாரநாயக்க மாவத்தையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியவர்களெனவும், 29 பேர் வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்த சிப்பாய்கள் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டல் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அந்தவகையில், இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 368ஆக அதிகரித்துள்ளது.

அரிசிக்கு நிறமூட்டம்; ஒருவருக்கு அபராதம்

மட்டக்களப்பு – ஏறாவூர்ப் பிரதேசத்தில் அரிசிக்கு சிகப்பு நிறமூட்டம் செய்து விற்பனைக்காக களஞ்சியப்படுத்தியிருந்தவேளை கைதுசெய்யப்பட்ட விற்பனை நிலைய உரிமையாளருக்கு நீதிமன்றால் நேற்று (22) இருபதாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் கிருமி பற்றி உயிர்தொழில் நுட்ப துறையில் முனைவர் பட்டம் பெற்ற ஒரு மருத்துவரின் அருமையான விளக்க பதிவு!!

நான் Dr.P.மணி.
நான் உயிர்தொழில் நுட்ப துறை (Biotechnology )ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளேன். இப்போது கும்பகோணம்அன்னை அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மருத்துவ குழுமத்தின் இயக்குநராக பணியாற்றி வருகிறேன்.

ஜோதிகா கூறிய கருத்துகள் சரியானவையே

(அன்பரசன் நடராஜா)

பிரகதீஸ்வரர் ஆலயத்தின் தூய்மையினையும் ,
படப்பிடிப்புக்காக தான் சென்ற மருத்துவமனையின் கேவலத்தையும் ஒப்பிட்டு நடிகை ஜோதிகா பேசிய பேச்சை சங்கிகளுடன் சேர்ந்து சில ஈழத்தமிழர்களும் கண்டித்து , அவரை வசைபாடுவதை காணக்கூடியதாகவுள்ளது.

வாட்ஸ் அப் புதிய ஸ்டிக்கர் பேக் அறிமுகம்: உலக சுகாதார மையத்துடன் இணைந்து முயற்சி

உலக சுகாதார மையத்துடன் இணைந்து, ‘வீட்டிலேயே இணைந்திருப்போம்’ (Together at home) என்ற தலைப்பில் புதிய ஸ்டிக்கர்களை வாட்ஸ்அப் தனது பயனர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.

வவ்வால்கள் மீதுஏன் இந்த வீண்பழி?

(மு. மதிவாணன்)

எப்பொழுதெல்லாம் விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு தொற்றுகிற வைரஸ் நோய்கள் (Zoonotic Diseases) வருகின்றனவோ அந்த நேரத்தில் காட்டுத்தீபோல் வவ்வால்கள் குறித்த எதிர்மறையான செய்திகளும் தேவையின்றி பரப்பப்படுகின்றன. தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸும் வவ்வால்களை விட்டு வைக்கவில்லை. இது தொடர்பாக நிறைய செய்திகள் சமூகவலைத் தளங்களில் மட்டுமல்லாமல் ஊடகங்களிலும் பெருமளவில் பரப்பப்பட்டு வருகின்றன. வவ்வால்கள் மீது சுமத்தப்படும் வீண்பழி இது.