கரோனா ஒவ்வொரு நாட்டிலும் குடிமக்களிடையே இருக்கும் பிளவுகளை வலுப்படுத்துகிறது. இனமத வெறுப்புகளைப் பீறிடவைக்கிறது. வெவ்வேறு நாடுகளில் மக்கள் தமது நம்பிக்கைகளை முன்னிறுத்திக் குழுமிட மதம் முக்கியக் காரணியாக உள்ளது. கரோனா பரவிட இது உகந்த சூழலாகிறது. இக்காலத்தில், மனிதர்கள் சரீர விலகலைப் பேணாமல் அறிவியலை மறுத்து ஓரிடத்தில் குழும மதம் மட்டுமே காரணமில்லை எனினும் முக்கியக் காரணம் மதம். எல்லா மதங்களிலும் பெரும்பான்மையினர் அறிவியலைப் புறந்தள்ளுபவர்கள் அல்ல எனினும் புறந்தள்ளுவோருக்கு மத நம்பிக்கைகளே முக்கியத் தூண்டுகோலாக உள்ளன.
உயிரிழப்பு ஒரு இலட்சம் தாண்டியது
உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கிலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைத் தாண்டியுள்ளது. இலங்கை நேரப்படி இரவு 9.50 மணிவரை உலகளாவிய ரீதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100,174ஆகவும், வைரஸ் தொற்றுக்கிலக்காகியவர்களின் எண்ணிக்கை 1,639,993ஆகவும் பதிவாகியுள்ளது.
கரூர் அருகே தூய்மைப் பணியாளர்களுக்கு பாத பூஜை; தலா ரூ.5 லட்சம் மதிப்புள்ள காப்பீடு வழங்கிய தொழிலதிபர்
நோய்த்தடுப்பு நடவடிக்கையில் ஊட்டச்சத்துள்ள உணவுக்கும் முக்கியத்துவம் வேண்டும்
ஐ.நா.,வில் இன்று ஆலோசனை
’நியாயமற்ற வர்த்தகத்தில் ஈடுபட்டால் தண்டனை’
பொதுத் தேர்தல்: கை விரித்தார் கோட்டாபய
ஜனாதிபதிக்கு கிடைக்கப்பெற்றுள்ள ஆலோசனைகளுக்கமைய, 2020 மே மாதம் 28ஆம் திகதியோ அல்லது அதற்கு முன்னரோ, பொதுத் தேர்தலை நடத்த முடியுமென்று, தற்போதைய நிலையில் குறிப்பிட முடியாதெனத் தெரிவித்துள்ள ஜனாதிபதியின் செயலாளர், தேர்தலுக்கான திகதியைக் குறிக்கும் பொறுப்பு, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கே உள்ளதென்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கோ அல்லது பொறுப்புகளுக்கோ, ஜனாதிபதியால் குறுக்கிட முடியாதென்றும் தெரிவித்துள்ளார்.