’நியாயமற்ற வர்த்தகத்தில் ஈடுபட்டால் தண்டனை’

மோசடியான முறையில் வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகத் துறையினர் தொடர்பாக, அவர் இன்று (10) அனுப்பியுள்ள ஊடக அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் அவர், நியாயமற்ற முறையில் மோசடியாக வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் வர்த்தகத் துறையினரைச் சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள், வவுனியா மாவட்டப் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கூறியுள்ளார்.

சந்தையில் பொருள்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகப் போலியான தட்டுப்பாட்டை உருவாக்கி, நிர்ணய விலையிலும் பார்க்க அதிக விலையில் அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் ஒருவகை தந்திரோபாயத்தை, ஒரு சில வியாபாரிகள் முன்னெடுத்து வருகின்றனர் என்றும் அத்தகைய வியாபாரிகள், பொருள்களைப் பதுக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளமை எமது புலனாய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.