ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியிலுள்ள சக்திகள் யார்?

ஈஸ்டர் ஞாயிறு தினமான ஏப்ரல் 21ந் திகதி இலங்கையில் நடந்த தற்கொலைத் தாக்குதல்களைத் தொடர்ந்து இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதக் கருத்துக்கள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வகையில் ஊடுருவிவிட்டதா என்ற கேள்வி பலராலும் எழுப்பப்பட்டு வருகின்றது. ஒப்பீட்டளவில் குறைந்தளவிலான இஸ்லாமிய மக்களைக் கொண்ட இலங்கை போன்ற நாடுகளில் இஸ்லாமிய அடிப்படைவாதம் பலமாகக் காலூன்றுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவானதாகவே உள்ளன என்பது பொதுவாக எல்லோருக்கும் தெரிந்ததே.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒரு ஜனாதிபதியின் தடுமாற்றம்

(எம்.எஸ்.எம். ஐயூப்)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமது அரசியல் எதிர்காலத்துக்காகவும் இருப்புக்காகவும் தமது குடும்பத்தின் பாதுகாப்புக்காகவும் என்னென்னவோ எல்லாம் செய்து வருகிறார். அந்த விடயத்தில், அவருக்கு எவ்வித கொள்கைகளும் இருப்பதாகத் தெரியவில்லை.

வெள்ளாளர்கள்; யாழ்ப்பாணத்தின் துயரம்

” குவாங்கோ நதியை சீனாவின் துயரம் என்பதுபோல; யாழ்ப்பாணத்தின் துயரம்; யாழ்ப்பாணத்து வெள்ளாளர்” என்பார் நண்பர் ஒருவர். யாழ்ப்பாணத்தில்; பிராமணர்கள் ஆதிக்க சாதி இல்லை என்று பார்த்தோம். ஆனால், பிராமணர்கள் செய்யக் கூடிய கொடுமைகளை; கீழ் ஜாதியினருக்கு வட்டியும் முதலுமாகச் செய்தனர் வெள்ளாளர்கள். உண்மையில் கேரளத்துக்கு நம்பூதிரிகளோ எப்படியோ; யாழ்ப்பாணத்துக்கு வெள்ளாளர்கள் அப்படி.

ஓநாய் அழுத கதை

(முகம்மது தம்பி மரைக்கார்)
‘சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ்ந்தாலும் தமிழர்களுடன் வாழ முடியாது’ என்கிற எண்ணம் முஸ்லிம்களிடம் மிக நீண்ட காலமாக உள்ளது. இப்போது, தமிழர்களிடமும் அவ்வாறானதொரு மனப்பதிவு வேர்பிடிக்கத் தொடங்கியுள்ளது. ‘சிங்களவர்களுடன் இணைந்து வாழ்ந்தாலும், முஸ்லிம்களுடன் வாழ முடியாது’ என்கிற முடிவுக்கு அவர்கள் வந்துள்ளார்கள் என்று நினைக்குமளவுக்கு, அவர்களின் அண்மைக்கால நடத்தைகள் உள்ளன.

ஒரே நாடு; ஒரே தேர்தல்

(எம். காசிநாதன்)
இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் முதலாவது நிகழ்ச்சி நிரல், இந்தியாவில் “ஒரே நாடு; ஒரே தேர்தல்” என்ற கோட்பாட்டுக்கு, முழு வடிவம் கொடுப்பதுதான். முதலாவது அனைத்துக் கட்சிகளின் கூட்டம், நாடாளுமன்றத்தைச் சுமூகமாக நடத்துவதற்குக் கூட்டப்பட்டது. அடுத்ததாக, நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என்பதற்காக, 19.6.2019 அன்று, இரண்டாவது அனைத்துக் கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது.

7000 பேர் இலங்கையிலிருந்து வெளியேற்றப்படவுள்ளனர்

குடிவரவு-குடியகல்வு சட்டதிட்டங்களை மீறி, இலங்கையில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் 7000க்கும் அதிகமானவர்களை இலங்கையிலிருந்து வெளியேற்ற தீர்மானித்துள்ளதாக, குடிவரவு-குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. சுற்றுலா வீசா மூலம் இலங்கைக்கு வருகைத் தந்து, சட்டவிரோதமாக இலங்கையில் இவர்கள் தங்கியிருப்பதாகவும் இதில் அதிகமானோர் இந்தியா, சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களென, குடிவரவு-குடியகல்வு திணைக்களத்தின் பதில் கட்டுபாட்டு பணிப்பாளர் நாயகம் பசன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் குடியுரிமை வீசா மூலம் இலங்கைக்கு வருகைத் தந்து, வீசா காலம் நிறைவடைந்தவர்களும் இந்த 7000 பேரில் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அல்லாஹ் அக்பர் – வெட்கத்தைவிட்டு ரொம்ப வேதனைகளுடன் – 5

(யஹியா வாஸித்)

கள்ளத் தோணிகளில் வந்த சோனவனும் , நல்ல தோணிகளில் வந்த மகாத்மாக்களும்.

மதம்,மதம், அது , உன்மதமா, என்மதமா,சம்மதமா எண்டு யாருக்குமே
புரியல,அதப்பத்தி புரிஞ்சவங்களும் புரியாத எங்களுக்கு புரிய வைக்க
முயலல. எல்லாரும் நாங்க புடிச்ச முயலுக்கு மூணுகால் எண்டுதான் அடிச்சி
சொல்றாங்க.

கனடாவில் தியாகிகள் தினம்

தாயகத்திலும் உலகம் எங்கும் நினைவு கூரப்படும் தியாகிகள் தினம் இவ்வருடம் கனடாவின் பல்வேறு அரசியல் கருத்துடையோரின் சந்திப்பொன்றின் மூலம் நடாத்தப்பட்டது. மனித குல விடிவிற்காக தம்மை அர்பணித்த அனைத்து பொதுமக்கள் போராளிகளுக்கும் ஒரு நிமிட அஞ்சலியுடன் சந்திப்பு ஆரம்பமானது. சிறப்பாக ஈழவிடுதலைப் போராட்டத்திற்காக தம்மை அர்பணித்த போராளிகள் பொதுமக்களின் நினைவுகளை முன்தாங்கியதாக ஆரம்பமான சந்திப்பு கலந்துரையாடல் தற்போதைய இலங்கை அரசியல் சூழலை ஆராய்வது வரை விரிந்து சென்றது. பத்மநாபா போன்ற மகத்தான தலைவர்களின் இனங்களுக்கிடையிலான சகோதரத்துவ செயற்பாடுகள், போராடும் சிறுபான்மை மக்களுக்கிடையேயான உறவுகள், மாற்றுக் கருத்தாளர்களிடையேயான ஐக்கிய முன்னணி செயற்பாடுகள் என்பன எந்தளவிற்கு அவர் மறைவின் பின்பு முன்னேற்றம் அடைந்தன என்ற கருத்துக்கள் கேள்வியாக இங்கு எழுப்பப்பட்டது இச் சந்திப்பு கலந்துரையாடலின் சிறப்பாக அமைந்தது. இரு மணிநேரம் வரை நீடித்த இந்த கலந்துரையாடல் தோழர் நாபாவின் சிந்தனைகளை வலுப்படுத்தி மேலும் அவர் பாதையில் நாம் முன்னேற வேண்டிய அவசியத்தை வலியறுத்தி நிறைவு பெற்றது.

ஈழ யுத்ததின் பின் பெண்கள் விவகாரம் உரிமைகள் சலுகைகள,வாழ்வாதாரம் வலுவிழந்து பற்றி ஆராய்வு!!

(வேந்தன்)

சமூகம் சார்ந்தும் பெண் சார்ந்தும் செயலாற்றிவருகின்ற
செயற்பாட்டாளர்கள் எழுத்தாளர்கள் பெண்ணியவாதிகள் ஆர்வலர்களையெல்லாம் நேரடியாகச்சந்திக்கவும் உரையாடவும் அவர்களுடன் ஒட்டியுறவாடவும் முதன் முறையாக மும்பையில் களமமைத்துத்தந்த ஊடறு ,
இரண்டாவது தடவையாக மட்டக்களப்பில் எம்மையெல்லாம் ஒன்றுசேர்த்துக்கொண்டது.