திருகோணமலையில் மக்களோடு மக்களாய்

திருகோணமலை வாசகசாலையினால் வாசிப்பு மாதத்தை முன்னிட்டு பாடசாலைகள் மட்டத்தில் நடத்தபட்ட போட்டிகளின் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசு வழங்கும் நிகழ்வின் போது

மீண்டும் சரிந்தது ரூபாய்

ஐக்கிய அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு, நேற்றும் (27) வீழ்ச்சியடைந்தது. நேற்றைய நாளில், ஐ.அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாய், 169.25 எனப் பதிவாகியது. நேற்று முன்தினம், 169.05 என்ற அதியுச்ச வீழ்ச்சியைப் பதிவுசெய்திருந்த ரூபாய், இரண்டாவது தொடர்ச்சியான நாளாக, நேற்றும் வீழ்ச்சியடைந்தது. ரூபாயின் மதிப்பிறக்கத்தைத் தடுப்பதற்கு, இலங்கை மத்திய வங்கி, ஏற்கெனவே நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையிலும், இவ்வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த மாதத்தில் 1.2 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாய், இம்மாதத்தில் மாத்திரம், 4.7 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதோடு, இவ்வாண்டில், 10.1 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட காணி இன்னமும் இராணுவத்திடம்

வலிகாமம் வடக்கு, குரும்பசிட்டிப் பகுதியில் உள்ள கூட்டுறவுச் சங்கக் காணி விடுவிக்கப்பட்டதாக, எழுத்துமூலமாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளரிடம் தெரிவித்த இராணுவத்தினர், தொடர்ந்தும் அக்காணியைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு, காணியின் நில அளவை வரைபடத்தைக் கோருவதாகவும், கூட்டுறவுச் சங்க நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

(“வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட காணி இன்னமும் இராணுவத்திடம்” தொடர்ந்து வாசிக்க…)

விரிவுரையாளர் கொலைக்கு நீதிக்கோரி போராட்டம்

கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியாற்றிய போதநாயகி நடராஜாவின் மரணத்துக்கு நீதிக்கோரி, இன்று (28) மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக வளாகத்துக்குள் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நடைபவனியாக சிறிது தூரம் சென்று போராட்டத்தில் ஈடுப்பட்டனர். விரிவுரையாளர் போதநாயகியின் மரணத்துக்கான காரணத்தை உடனடியாக கண்டறியுமாறு, சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளிலிருந்து பெண்களை பாதுகாக்கவேண்டுமெனவும், மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

பதிலடி வழங்கப்படும் – ஈரானின் புரட்சிகர காவல்படை

ஈரானில், இராணுவ அணுவகுப்பு மீது நடத்தப்பட்ட தாக்குதலில், 25 பேர் கொல்லப்பட்டிருந்த நிலையில், அத்தாக்குதலுக்கு, “பயங்கரமானதும் மறக்கமுடியாததுமான” பதிலடி வழங்கப்படும் என, ஈரானின் புரட்சிகர காவல்படையினர் எச்சரித்துள்ளனர். இத்தாக்குதலில் கொல்லப்பட்டோரில் 12 பேர், புரட்சிகரக் காவல்படையைச் சேர்ந்தவர்கள் என்ற நிலையிலேயே, இவ்வெச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

(“பதிலடி வழங்கப்படும் – ஈரானின் புரட்சிகர காவல்படை” தொடர்ந்து வாசிக்க…)

Maldives will prioritize own interest, not India’s

(Global Times)

Maldives’ opposition leader Ibrahim Mohamed Solih won the nation’s presidential election on Monday. By a margin of 16.7 percent, incumbent Abdulla Yameen conceded defeat. “Pro-China Maldives president Yameen loses election, India welcomes result,” claimed the Press Trust of India and the New York Times called Solih’s winning a “surprise victory.”

(“Maldives will prioritize own interest, not India’s” தொடர்ந்து வாசிக்க…)

உன்னத கனவுகளின் காலத்தின் தோழர்.

மறைந்து 14 ஆண்டுகள்!!
தோழர் உமாகாந்தன் எமது ஈழமக்கள் பாரம்பரியத்தின் சர்வதேசியவாதி.
உலகளவிய பார்வையுடன் இலங்கை ஈழதேசிய வர்க்க சமூக விடுதலைப்போராட்டத்தை அணுகியவர்
1980கள் 90களின் புலம் பெயர் அரசியல் இலக்கிய சூழலில் தோழர் உமாகாந்தன் மிக முக்கிய ஆளுமை.
அவரது ஆளுமையின் தாக்கத்துடனான பிரான்சுப் பாரம்பரியம் இன்றளவில் நிலவுகிறது.
(“உன்னத கனவுகளின் காலத்தின் தோழர்.” தொடர்ந்து வாசிக்க…)