தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆசனப்பங்கீட்டு விபரங்கள்

நேற்றுக் காலை 11 மணி தொடக்கம் மாலை 3 மணிவரை சந்திப்பு நடந்தது. எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஐயா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன், புளொட் தலைவர் சித்தார்த்தன் அண்ணர், தமிழரசுக்கட்சி தலைவர் மாவை.சேனாதிராசா அண்ணர், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள், ரெலோ செயலாளர் நாயகம் நல்லதம்பி சிறீ காந்தா அண்ணர் அவர்கள், எம்.பி வியாழேந்திரன் , எம்.பி சுமந்திரன் , ஆர்.இராகவன், மாகாணசபை உறுப்பினர்களான விந்தன் கனகரட்ணம், சிவாஜிலிங்கம். வினோநோகராதலிங்கம், இந்திரகுமார் பிரசன்னா, கோவிந்தன் கருணாகரம் ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர்.

(“தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆசனப்பங்கீட்டு விபரங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

பாலகுமார்

மிகவும் நல்ல மனிதர் தனிப்பட்ட முறையில் என்றால்….? எப்படி புலிகளுடன் இணைந்து அவர்கள் செய்த ஜனநாயக மறுப்புக்களுக்கும் பாசிச செயற்பாடுகளுக்கும் துணை போய் இதற்கான நியாயங்களையும் செய்து கொண்டிருந்தார். சரி புலிகள் மட்டும் தான் களத்தில் நின்று போராடினார்கள் (மற்றவர்களைப் போராட விடாமல் புலிகள் தடுத்தார்கள் என்பதை துப்பியல் நிகழ்வாக எடுத்தாலும்) இந்நிலையில் அவரால் என்ன செய்ய முடியும் போராடுபவர்களுடன் இணந்து தனது உயிரையும் காப்பாற்றி ‘போராடினார் என்று ஒரு வாதத்திற்கு வைத்தாலும்…. ஈழவிடுதலை அமைப்புக்கள் உருவாக்கிய முதல் ஐக்கிய முன்னணி ஈழத் தேசிய விடுதலை முன்னணி(ENLF)யில் புலிகள் இணைந்த பின்பு அவர்களின் பக்கமே நின்று மாற்று இயக்கங்களை புலிகள் அழிக்க முற்பட்ட போதும், இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்பான கால கட்டங்களில் சகல அமைப்புகளும் மீண்டும் செயற்படக் கூடிய ஜனநாயக சூழலிலும் புலிகளின் உளவு அமைப்பாகவும் செயற்பட்டு புலிகளை மட்டும் வளர்த்துவிட ஏன் செயற்பட்டார்.

(“பாலகுமார்” தொடர்ந்து வாசிக்க…)

‘யாழ்., கிளியில் கை சின்னத்தில் போட்டியிடுவோம்’

“ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பொறுத்த வரையில், வேறு பகுதியில் ஒவ்வொரு கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றது. ஆனாலும் யாழ். மாவட்டம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனித்து வெற்றிலைச் சின்னம் இல்லாமல் கை சின்னத்தில் போட்டியிடும்” என்று, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

(“‘யாழ்., கிளியில் கை சின்னத்தில் போட்டியிடுவோம்’” தொடர்ந்து வாசிக்க…)

‘8 மாவட்டங்களிலும் இணைந்து போட்டியிடவுள்ளோம்’

“வடக்கு – கிழக்கில் உள்ள தமிழர் தாயகத்தில் உள்ள 8 மாவட்டங்களிலும் தமிழ் தேசிய மக்கள் முன்னனி மற்றும் பொது அமைப்புகள் இணைந்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சைக்கில் சின்னத்தில் போட்டியிடவுள்ளது” என, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் இணைச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார். எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், நேற்று (08) மதியம் மன்னார் தேர்தல் திணைக்களத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியது.

(“‘8 மாவட்டங்களிலும் இணைந்து போட்டியிடவுள்ளோம்’” தொடர்ந்து வாசிக்க…)

‘புதிய கூட்டணியில் வந்து இணையுங்கள்’

நாட்டுப்பற்றிருந்தால், எங்களுடைய புதிய கூட்டணியில் வந்து  இணையுங்கள். கடந்தகால கூட்டமைப்பு போல் தனிக்கட்சி அதிகாரம் இங்கில்லை. எனவே, பொய்களையும், குற்றச்சாட்டுகளையும் சுமத்துவதனை விடுத்து ஒன்றிணையுமாறு, வீ. ஆனந்தசங்கரி கஜேந்திரகுமாருக்கு அழைப்பு விடுத்துள்ளாா். கிளிநொச்சியில் தனது அலுவலகத்தில் நேற்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

(“‘புதிய கூட்டணியில் வந்து இணையுங்கள்’” தொடர்ந்து வாசிக்க…)

‘கூட்டமைப்பு பலமான கட்சியாக பரிமாணிக்க வேண்டும்’

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமான அரசியல் கட்சியாக பரிமாணிக்க வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு” என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்டு உள்ள பிளவு நிலை தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன என, நேற்று (08) ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கே, அவர் அவ்வாறு பதிலளித்தார்.

(“‘கூட்டமைப்பு பலமான கட்சியாக பரிமாணிக்க வேண்டும்’” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கில் வித்யா.. கம்பஹாவில் சேயா.. கொழும்பில் இவர்களா?..

பர்தாவுக்கு உரிமை குரல் கொடுக்கும் முஸ்லிம் சமூகம் இப்பதினெட்டு 18 இஸ்லாமிய சிறுமிகளின் துஸ்பிரயோகத்திற்கு எதிராக குரல் கொடுக்காதது ஏன்?..
(“வடக்கில் வித்யா.. கம்பஹாவில் சேயா.. கொழும்பில் இவர்களா?..” தொடர்ந்து வாசிக்க…)

தாயக தேர்தல் கள நிலமை

தமிழ் வாக்காளர்கள் பெரும்பாலானோரின் நிலை – தமிழ்த் தேசியம், பலமான அரசியல் சக்திகள் (ஏக பிரதிநித்துவம்) என்பதாக உள்ளது.
வடக்கில் தமிழ் தேசியத்திற்கு எதிர்ப்பு அல்லது வேறு காரணங்களால் தமிழ் தேசியத்திற்கு அப்பாலன ஆதரவும் இருந்தே வருகிறது(டக்ளஸ்,விஷயகலா,அங்கஜன்)
கிழக்கில் தமிழ்த் தேசியம் என்பது முஸ்லிம் எதிர்ப்பையும் கொண்டது… சில இடங்களில் இதுவே பிரதான நிலைப்பாடு.
தீவிர தமிழ் தேசியவாதம் ஏன் மக்கள் ஆதரவைப் பெறவில்லை என்பது முக்கியமான விடயம்.

(“தாயக தேர்தல் கள நிலமை” தொடர்ந்து வாசிக்க…)

சுமந்திரன் சுத்துமாத்து!

செய்தி- ஆயுதக்குழுக்கள் தமிழ்தேசியக்கூட்டமைப்பில் இருந்து தாராளமாக வெளியேறலாம்- சுமந்திரன்

சுமந்திரன் அவர்களே!

இத்தனைநாளும் கூட இருக்கும்வரையில் தெரியவில்லை. இப்போது அவர்கள் பிரிந்துபோகும்போதுதான் ஆயுதக்குழுக்களாக உங்களுக்கு தெரிகிறதா? (“சுமந்திரன் சுத்துமாத்து!” தொடர்ந்து வாசிக்க…)

பிரிவடையாது கூட்டமைப்பு நிலைக்கும்?

தமிழரசுக் கட்சியும் டெலோவும் முதற்கட்டமாக இணக்கம்உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஆசன ஒதுக்கீடு தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆகியவற்றுக்கிடையில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் காரணமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிளவுபடலாம் என்று கருதப்பட்ட போதிலும், அப்பிரச்சினைகள் தீர்வதற்கான முதற்கட்ட சமிக்ஞைகள் தென்பட்டுள்ளன. (“பிரிவடையாது கூட்டமைப்பு நிலைக்கும்?” தொடர்ந்து வாசிக்க…)