வாதங்களும் விதண்டாவாதங்களும்

1978 ஆம் ஆண்டு பாடசாலை நாட்களில் ஒரு நாள் மத்தியானம் வீடு சென்று அவசரமாக பாடசாலை திரும்பினேன்.அப்போது வழியில் நடந்து வந்த ஒருவர் என்னை மறித்து என் சைக்கிளில் ஏற்றி செல்லமுடியுமா எனக் கேட்டார்.நான் அப்படி யார் கேட்டாலும் மறுக்காமல் ஏற்றிச் செல்வது வழக்கம்.எனவே மறுப்பின்றி ஏற்றினேன்.

(“வாதங்களும் விதண்டாவாதங்களும்” தொடர்ந்து வாசிக்க…)

‘வட மாகாண சபையில் மூன்று அமைச்சர்களின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் கிடைக்கும்வரை பதவியை துறந்திருக்க வேண்டும்’

‘வட மாகாண சபையில் மூன்று அமைச்சர்களின் நடவடிக்கைகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு குழுவொன்று அமைக்கப்பட்டு விசாரணை செய்வதற்கான தீர்மானத்தை வடமாகாணசபை நிறைவேற்றியுள்ளதானது எனக்கு மிகவும் அதிர்ச்சியை தருகின்றது’ என்று தெரிவித்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி, ‘குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும்வரை அமைச்சு பதவிகளில் இருந்து தாமாகவே விலகியிருக்க வேண்டும்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

(“‘வட மாகாண சபையில் மூன்று அமைச்சர்களின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் கிடைக்கும்வரை பதவியை துறந்திருக்க வேண்டும்’” தொடர்ந்து வாசிக்க…)

பிடல் காஸ்ற்ரோ: புரட்சியின் வரலாறு

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

உலக வரலாறு எத்தனையோ தலைவர்களைச் சந்தித்திருக்கிறது. நல்லவர்கள், வல்லவர்கள், நான்கும் தெரிந்தவர்கள் எனப் பல வகைப்பட்டோர் இதில் அடங்குவர். வரலாற்றைத் திருடியவர்கள், அதை அழித்தவர்கள், எழுதியவர்கள், திரித்தவர்கள் என வரலாறு பலரது கதைகளை தன்னுள் உட்பொதித்து வைத்திருக்கிறது. காலங்கடக்கையில் பலர் மறைந்து போகிறார்கள்; அனேகர் மறக்கப்படுகிறார்கள்; வெகு சிலரே காலங்கடந்தும் நிலைக்கிறார்கள். அவ்வாறு நிலைப்பவர்களை வரலாறு விடுதலை செய்து விடுகிறது.

(“பிடல் காஸ்ற்ரோ: புரட்சியின் வரலாறு” தொடர்ந்து வாசிக்க…)

மெத்தப் படித்தவர்கள் தலைமையில்! வடக்கு மாகாண சபையின் நிலை? [நீட்சி-2]

1988ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் திகதி, திருமலை நகரசபை மண்டபத்தில், ஆளுநர் முன் இடம்பெற்ற சத்திய பிரமாண வைபவம் என் கண்முன் விரிகின்றது. மேடையில் ஆளுநர், அன்றைய அரச அதிபர் மற்றும் மேலதிக அரச அதிபர் அமர்ந்திருக்க, உறுப்பினர்களான நாம் அனைவரும் கீழே வரிசையாக தியேட்டரில் படம் பார்ப்பவர்கள் போல் அமர வைக்கப்பட்டோம். மேலதிக அரச அதிபர் மேடையில் ஒலி வாங்கி முன் நின்று சத்திய பிரமாண வாசகங்களை வாசிக்க நாமும் கோரசாக அதனை தொடர்ந்தோம். பின்பு பேரவை தலைவர், மற்றும் பிரதி பேரவை தலைவர் பெயர்கள் முன்மொழிந்து, வழிமொழியப்பட போட்டி இன்றிய தெரிவாக அது நிறைவேறியது. அப்போது அம்பாறையில் இருந்து தெரிவான 1 யு என் பி உறுப்பினரும், திருமலை, மட்டக்களப்பு, அம்பாறையில் இருந்து தெரிவான 17 முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் சமூகமளிக்கவில்லை.

(“மெத்தப் படித்தவர்கள் தலைமையில்! வடக்கு மாகாண சபையின் நிலை? [நீட்சி-2]” தொடர்ந்து வாசிக்க…)

புலிகளின் தகவல்களை ரோவிற்கு வழங்கிய புளொட் தலைவர் சித்தார்த்தன்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை கொலைசெய்யுமாறு வழங்கப்பட்ட உத்தரவை இடைமறித்துக்கேட்ட புளொட் அமைப்பின் உறுப்பினர் ஓருவர் அதனை தனது தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் கவனத்திற்கு கொண்டுவந்தார்- அவர் அதனை உடனடியாக இந்தியாவின் புலனாய்வு பிரிவினரிற்கு தெரிவித்தார்.

(“புலிகளின் தகவல்களை ரோவிற்கு வழங்கிய புளொட் தலைவர் சித்தார்த்தன்” தொடர்ந்து வாசிக்க…)

பயிரை மேய்ந்த வேலிகள்..(7)

(பிள்ளை பிடிக்கு உதவிய பிரித்தானிய தந்திரம்)

போர் முனைகளில் தொடர்ச்சியாக ஏற்பட்ட இழப்புகளால் பெருமளவில் ஏற்பட்ட ஆள் அணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய புலிகள் அத்தனை வழிகளையும் கையாளத் தொடங்கி இருந்தனர். பிரித்தானியரின் பிரித்தாளும் தந்திரத்தை போலவே அவர்களும் இங்கு பிரித்தாளும் தந்திரத்தை பிரயோகித்தனர்.

(“பயிரை மேய்ந்த வேலிகள்..(7)” தொடர்ந்து வாசிக்க…)

‘சலோ ஊனா’ நெடும்பயணம் வலியுருத்தும் அரசியல் பாடம் . . .!

தலித் மக்களின் சுயமரியாதைக்கான மாபெரும் எழுச்சி போராட்ட பயணம் (சுயமரியாதை பயணம்) குஜராத்தில், அகமதாபாத்தில் ஆகஸ்ட் 5ம் நாள் தொடங்கி பல கிராமங்களை கடந்து கிட்டத்தட்ட 81கி.மீ தொலைவு பயணித்து இன்றைய நாளில் (ஆகஸ்டு 15, 2016) ஊனாவை அடைகிறது. இது மதசார்பற்ற இந்திய நாடு, இந்து நாடு அல்ல என்று உணர்த்தும் வண்ணம் இந்திய கொடியை ஏற்றுகின்றனர். இதுகாறும் வன்கொடுமைகளுக்கும், இழிவாழ்விற்கும் ஆளான மக்கள் தன் விதியை தானே தீர்மானிக்க விடுதலை பாதையை நோக்கி வரலாற்று சிறப்புமிக்க போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அதுவும் இந்த நாட்டின் தலையெழுத்தையே மாற்றியமைப்பதாய் சொன்ன 56அங்குலம் மார்பை கொண்டிருக்கும் மோடி ஆட்சி செய்த குஜராத் மாநிலத்தில்.

(“‘சலோ ஊனா’ நெடும்பயணம் வலியுருத்தும் அரசியல் பாடம் . . .!” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் A.F.C ( பகுதி 59 )

1977 இல் தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டது.பற்குணம் தேர்தல் கடமையின் காரணமாக தற்காலிமாக தேர்தல் முடியும்வரை நுவரெலியாவிக்கு அனுப்பப் பட்டார்.தேர்தல் முடிந்தது .ஜே.ஆர்.தலைமையிலான கட்சி ஆட்சியைப் பிடித்தது.இந்தத் தேர்தலில் வரலாற்றில் முதல் தடவையாக ஆறில் அய்ந்து பெரும்பான்மையுடன் அய்.தே.கட்சி ஆட்சியைப் பிடித்தது.

(“பற்குணம் A.F.C ( பகுதி 59 )” தொடர்ந்து வாசிக்க…)

தமிழினி உட்பட உயிரிழந்த மூவரும் இயக்கத்திலேயே நோயுற்றிருந்தனர்

தமிழினிக்கோ அல்லது சிவரதிக்கோ இயக்கத்திலிருந்து வெளியில் வந்த பின்னர் புற்றுநோய் ஏற்படவில்​ைலயெனவும் அவர்கள் இயக்கத்தில் இருக்கும் போதே புற்றுநோய்க்குள்ளானதாகவும் தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த போராளியான தமிழ்கவி தெரிவித்தார்.

(“தமிழினி உட்பட உயிரிழந்த மூவரும் இயக்கத்திலேயே நோயுற்றிருந்தனர்” தொடர்ந்து வாசிக்க…)

ரூ.67 கோடிக்கு என்னய்யா நடந்தது?

’67 கோடியே 44 இலட்சம் ரூபாய்க்கு வடமாகாணத்தில் என்ன நடந்தது என தெரியவில்லை’ என வடமாகாண எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா, கணக்காய்வு திணைக்கள அறிக்கையை சுட்டிக்காட்டி தெரிவித்துள்ளார்.

(“ரூ.67 கோடிக்கு என்னய்யா நடந்தது?” தொடர்ந்து வாசிக்க…)