புத்திர சோகத்தில் நீதிமன்ற வாசலில் காத்திருந்த மகிந்த!!!

நிதிமோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த லெப்.யோசித ராஜபக்ச இன்று மீண்டும் கடுவெல நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்ட போது, அவரை வரும் பெப்ரவரி 25ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. யோசித ராஜபக்ச உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்டிருந்த விளக்கமறியல் காலம் இன்றுடன் காலாவதியான நிலையிலேயே, இன்று காலை அவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். சிறைச்சாலைப் பேருந்தில் கைவிலங்கிடப்பட்ட நிலையில், யோசித ராஜபக்ச, கொண்டு வரப்பட்ட போது நீதிமன்றத்தில் அவரது தந்தையான மகிந்த ராஜபக்ச, உள்ளிட்ட குடும்பத்தினர் பலரும் குவிந்திருந்தனர்.

(“புத்திர சோகத்தில் நீதிமன்ற வாசலில் காத்திருந்த மகிந்த!!!” தொடர்ந்து வாசிக்க…)

பொது சந்தை போலான வட மாகாணசபை பேரவை கூட்டம்!

2013ல் மலர்ந்தது தமிழர் அரசு என்ற பத்திரிகை தலையங்கத்தை பார்த்து இது சற்று அதிகப் பிரசிங்கதனம் என நினைத்தாலும், மாற்றம் வரும் என நம்பியவர்களில் நானும் ஒருவன். காரணம் எனது சொந்த விஜயமாக நாட்டில் அதுவும் வடக்கில் நின்றபோது போது தான், வட மாகாணசபபை தேர்தல் நடந்தது. கூட்டமைப்பில் இணைத்து கொள்ளப்பட்ட புளட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் மற்றும் முன்னாள் வவுனியா நகரசபை தலைவர் லிங்கநாதன் போன்றவர்கள், வேட்பாளராக போட்டியிட களம் இறங்கிய அந்த தேர்தலில் மிக பெரிய வெற்றியை த.தே.கூ பெறும் என அப்போதே தெரிந்திருந்தது. பண்ணாகத்தில் கோவில் முன்றலில் நடந்த கூட்டத்தில், அனைத்து கட்சி தலைவர்களும் ஒருமித்து மேடையில் இருந்ததை பார்த்தபோது சாதிக்கப் போகிறார்கள் என்ற எண்ணம் துளிர்விட்டது. ஆனால் அண்மைய நிகழ்வுகள் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக இவர்கள் நடத்திய கூட்டுப்பொறுப்பு என்ற போர்வையில் விட்ட தவறுகள் இன்று வெட்ட வெளிச்சமாகின்றன.

(“பொது சந்தை போலான வட மாகாணசபை பேரவை கூட்டம்!” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கை தேசிய இனங்களினதும் சமூகங்களினதும் இணை சம்மேளனமாக அமைய வேண்டும் – சமூக சீராக்கல் இயக்கம்

சிங்களவர், இலங்கை தமிழர், முஸ்லிம்கள் மற்றும் மலையக தமிழர் ஆகிய தேசிய இனங்களினதும் பரங்கியர், மலேயர், ஆதிவாசிகள் சமூகங்களின் இணை- சம்மேளனமாக இலங்கை அமைய வேண்டும் என சமூக சீராக்கல் இயக்கம் புதிய அரசமைப்பு தொடர்பாக யோசனைகளை முன்வைப்பதற்காக நடாத்திய கலந்துரையாடலில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்தியவம்சாவளி தமிழர்களாக தற்போது அரச ஆவணங்களில் அடையாளப்படுத்தப்படும் வரும் மலையக மக்களை, மலையக மக்கள் என அரசப்பினூடாக அங்கீகரிப்பதே அவர்களை தேசிய இனமாக அங்கீகரிப்பற்கு ஏற்ற அடையாளம் எனவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பிரஜைகளுக்கான அடிப்படை உரிமைகள் சிவில் அரசியல், பொருளாதார, சமூக, கலாசார உரிமைகளை மிகவும் விரிவாக உள்ளடக்கி உறுதி செய்யும் அதேவேளை, அவற்றை அனுபவிக்க எவ்வித மட்டுபாடுகளும் இருத்தலாகாது என்றும், அத்தோடு அடிப்படை உரிமைகள் மீறும் போது அதற்கான நிவாரண ஏற்பாடுகள் தனி அத்தியாயமாக அரசமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டும் எனவும் எற்றுக் கொள்ளப்பட்டது. அடிப்படை உரிமைக்கான நீதிமன்ற நிவாரணங்கள் மக்களுக்கு இலகுவில் அணுகும் விதத்தில் அரசமைப்பில் ஏற்பாடு இருக்க வேண்டும் எனவும் அடிப்படை உரிமைகளை விசாரிக்க மாவட்ட ரீதியில் விசேட நீதிமன்ற கட்டமைப்பை ஏற்படுத்தல், மனித உரிமைகள் ஆணைக்குழுவை மக்களுக்கு இலகுவில் அணுகும் விதத்தில் மீளமைத்து அது சட்ட அங்கீகாரம் பெற்ற கட்டளைகளை வழங்கும் அமைப்பாக மாற்றுதல் மற்றும் ஒப்புட்ஸ்மனுக்கு அடிப்படை உரிமைகள் மீறல் தொடர்பாக கட்டளை வழங்க அரசமைப்பில் ஏற்பாடுகள் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

(“இலங்கை தேசிய இனங்களினதும் சமூகங்களினதும் இணை சம்மேளனமாக அமைய வேண்டும் – சமூக சீராக்கல் இயக்கம்” தொடர்ந்து வாசிக்க…)

மிக எளிமையாக வாழ்ந்த உலகின் ஏழை ஜனாதிபதிக்கு பிரியாவிடை கொடுத்து வழியனுப்பிய உருகுவே மக்கள்

 

மிகவும் ஏழை ஜனாதிபதி என்று என்னை அழைக்கின்றார்கள். ஆனால், என்னைப் பொருத்த வரை நான் ஏழை அல்ல. ஆடம்பரமான வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு இன்னும் இன்னும் வேண்டும் என்று அலைகின்றவர்கள்தான் ஏழைகள். ஜனாதிபதி என்றாலே… நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் வாழ்ந்துக் கொண்டு, கோடிக்கணக்கில் அரசு பணத்தை செலவழித்து நாடு நாடாக சுற்றுப்பயணம் செய்பவர் என்பதை நாம் அறிவோம். இந்த இலக்கணத்திற்கு நேர்மாறாகவும் ஓர் ஜனாதிபதி வாழ்கின்றார் என்பது பலருக்கு ஆச்சரியமான தகவலாக இருக்கலாம்.

(“மிக எளிமையாக வாழ்ந்த உலகின் ஏழை ஜனாதிபதிக்கு பிரியாவிடை கொடுத்து வழியனுப்பிய உருகுவே மக்கள்” தொடர்ந்து வாசிக்க…)

ஊழல் பெருச்சாளி ஐங்கரநேசனுக்கு எதிராகப் பிரேரணை நிறைவேற்றம்! காப்பாற்றிய விக்னேஸ்வரன் சரணாகதி!

வாக்குப் பொறுக்கும் அரசியலுக்கும் ஊழலுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. நான்கு தசாப்த ஆயுதப் போராட்டத்தையும் அதன் இழப்புக்களையும் வட மகாணசபைக்குள்ளும், யாழ்ப்பாணத்தினுள்ளும் முடக்கி அழித்து வாக்குப் பொறுக்கும் அரசியல் கலாச்சாரத்தை மீள் கட்டமைத்த பெருமை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், விக்னேஸ்வரனையுமே சாரும். வட மாகாண சபையின் ஊழல் பெருச்சாளிகளுள் அதிஉச்ச பங்காற்றியவர் போ.ஐங்கரநேசன் என்பது குறிப்பிடத்தக்கது. சுன்னாகம் நச்சு நீர் தொடர்பான பிரச்சனையில் ஐங்கரநேசனின் ஊழல் தொடர்பாக இனியொரு பல்வேறு தகவல்களை வெளிப்படுத்தியிருந்தது. வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரனின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஐங்கரனேசன், சுன்னாகத்தில் அழிப்பை நடத்திய நிறுவனத்தைக் காப்பாற்ற போலி நிபுணர் குழு ஒன்றை அமைத்து அறிக்கை வெளியிட்டிருந்தார். விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசனுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்து மாகாண சபையில் அதன் உறுப்பினரும் புளொட் அமைப்பைச் சார்ந்தவருமான கே.ரீ.லிங்கநாதன் பிரேரணை ஒன்றை முன்வைத்தார்.

(“ஊழல் பெருச்சாளி ஐங்கரநேசனுக்கு எதிராகப் பிரேரணை நிறைவேற்றம்! காப்பாற்றிய விக்னேஸ்வரன் சரணாகதி!” தொடர்ந்து வாசிக்க…)

அப்பன் குதிருக்குள் இல்லை!

இலங்கையில், கணிசமானோரின் அரசியல் இருப்பு ஆட்டம் கண்டிருக்கிறது. முன்னைய ஆட்சிக் காலத்தில், மஹிந்த ராஜபக்ஷவின் நிழலில் குட்டி ராசாக்கள் போல் வலம் வந்தவர்கள், இப்போது நடுத் தெருவில் நின்று கொண்டிருக்கின்றார்கள். இதனால், எதையாவது செய்து தமது இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய தேவை, இந்த முன்னாள் குட்டி ராசாக்களுக்கு எழுந்துள்ளது. இவர்கள் தமது இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, ஆர்வக் கோளாறில் செய்யும் பல விடயங்கள், இவர்களினதும் இவர்கள் சார்ந்தோரினதும் தலைகளில் இவர்களே மண்ணை வாரி இறைக்கும் நிலையினை ஏற்படுத்தி விடும் அபாயமுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இளவரசர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன், இலங்கை வந்திருந்தார். இலங்கை மீது மனித உரிமைகள் பேரவை நிறைவேற்றிய ஜெனீவா பிரேரணையினை அமுலாக்குதல் பற்றியதாக ஹுஸைனின் விஜயம் அமைந்திருந்தது.

(“அப்பன் குதிருக்குள் இல்லை!” தொடர்ந்து வாசிக்க…)

மகிந்தவை பின் பின்வரிசைக்கு தள்ளிய பொன்சேகா! அமைச்சு பதவி என்ன?

ஜனநாயக கட்சி தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்ற உறுப்பினராக நேற்று சபாநாயகர் கரு ஜயசூரிய முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். மறைந்த அமைச்சர் எம்.கே.டி.எஸ்.குணவர்தனவின் வெற்றிடத்திற்காகவே சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டார். சரத் பொன்சேகாவுக்கு நாடாளுமன்றத்தில் ஆறாவது வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தன. எனினும் நேற்று அமைச்சர் ராஜித சேனாரத்ன வராத காரணத்தினால் பொன்சேகா அவருக்கு அருகில் இருந்த ஆசனத்தில் அமர்ந்திருந்தார். இதேவேளை மறைந்த குணவர்தனவின் அமைச்சர் பதவி பொன்சேகாவுக்கு வழங்கப்படவில்லை எனவும், அவர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்க்கும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் பதவியும் வழங்கப்படாதென தெரிவிக்கப்படுகின்றது.

(“மகிந்தவை பின் பின்வரிசைக்கு தள்ளிய பொன்சேகா! அமைச்சு பதவி என்ன?” தொடர்ந்து வாசிக்க…)

அமைச்சர் ஐங்கரநேசனுக்கு எதிராக பிரேரணை ஏகமனதாக ஏற்பு !

வடமாகாண விவசாய அமைச்சருக்கு எதிராக மாகாண சபையில் பிரேரணை கொண்டுவரப்பட்டு சபையில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது.அதன்போது, இரணைமடு நீர்ப்பாசன திட்டம் தொடர்பிலான செயற்பாடுகள், பார்த்தீனிய ஒழிப்பு தொடர்பான செயற்பாடுகள், பளை பிரதேசத்தில் நிறுவப்பட்ட காற்றாலை தொடர்பிலான விடயம், சுன்னாக நிலத்தடி நீர் தொடர்பிலான செயற்பாடுகள், மருதங்கேணி கடல்நீரை நன்னீர் ஆக்கும் செயற்பாடு, கார்த்திகை மர நடுகை, அனர்த்த நிவாரண விநியோகம், உழவர் திருநாள், மலர்க்கண்காட்சி, விவசாய தினம், மண் தினம், போன்றவை தொடர்பில் மாகாண சபை உறுப்பினர்களுக்கு உரிய முறையில் அறிவிக்காமல் நடாத்தியமை மற்றும் இந்த விழாவுக்கான செலவீனங்களை வெளிப்படுத்தாமை, கூட்டுறவு துறையில் உள்ள முறைகேடுகளை சீராக்காமை, விவசாய துறையில் பல செயற்திட்டங்களை முன்னெடுக்காமை, சிறு குளங்களை புனரமைக்க மத்திய அமைச்சு அழைத்த போது அதனை நிராகரித்தமை,

(“அமைச்சர் ஐங்கரநேசனுக்கு எதிராக பிரேரணை ஏகமனதாக ஏற்பு !” தொடர்ந்து வாசிக்க…)

பரிசம்’ போட்டுச் சென்றுள்ள சுஷ்மா!!!

இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ்;, கொழும்புக்கு வந்து முக்கியமான சில பேச்சுக்களில் கலந்துகொண்டுவிட்டு நாடு திரும்பியிருக்கிறார். இலங்கையின் கடந்த நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக தோற்றம்பெற்றபோதும் அதன் அதன் தலைவர் இரா.சம்பந்தன், எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டபோதும்கூட, எந்த அசுமாத்தமும் காட்டாமல் இலங்கையின் நகர்வுகளை மதிப்பிட்டுக்கொண்டிருந்த இந்தியா, முதன் முதலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் நேரடியாக சந்தித்துப் பேசியிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், கடந்த தடவை ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவரை சந்திக்க கிடைத்த பரந்த வாய்ப்பு போல அல்லாமல், குறுகிய சந்திப்பாக இருந்தாலும்கூட கிடைக்கப்பெற்ற நேரத்தில் முக்கியமான விடயங்களை பேசியுள்ளார்கள் என்று அறியவருகிறது.

(“பரிசம்’ போட்டுச் சென்றுள்ள சுஷ்மா!!!” தொடர்ந்து வாசிக்க…)

விசாரணையை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயச் சூழல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள். இந்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர். ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானத்துக்கு அமைவாக போர்க்குற்ற விசாரணையை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிபதிகள், சர்வதேச நிபுணர்கள் ஆகியோர் அடங்கிய கலப்புமுறை நீதிமன்றத்திற்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்றும் உள்ளக பொறிமுறை ஒன்றின் மூலமே போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப்படும் என்பதை ஆணையாளர் அல் ஹூசைனிடம் வற்புறுத்த வேண்டும் எனவும் TNAஅமைச்சர்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.

(“விசாரணையை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயச் சூழல்” தொடர்ந்து வாசிக்க…)