வாசகர் கருத்து

அன்புள்ள சூத்திரம்,
மனநோயாளி மனேகணேசனின் அறிக்கையைப் போடுமளவுக்கு என்னய்யா உங்களுக்கு நடந்தது? முன்பு சூத்திரம் வாசிக்கக்கூடியதாக இருந்தது. இப்ப ஏன் இந்தப் போக்கு? புரியவில்லை. திரும்பவும் வாருங்கள் பட்டிக்கு.
– சந்திரன்
இது ஒரு வகை பத்திரிகா தந்திரோபாயம் மனோ கணேசனை அவரனின் அறிகை மூலமே அம்பலப்படுத்துவது. இது அவரின் கருத்தை ஏற்றுக் கொளவதாக அமையாது. சற்று ஆழமாகப் பார்த்ததால் புரியும் -ஆர்

மகிந்த நாலடி பாய்ந்தால், அரசு எட்டடி பாயும்! இலங்கை அரசியல் நிலவரம்!

இலங்கை அரசியல் வரலாற்றில் மறக்கப்பட முடியாதவர் மகிந்த ராஜபக்ச என்றால் அது மிகையாகாது. ‘யுத்த வன்முறையை தனது ஆட்சிக் காலத்திலேயே முடிவுக்கு கொண்டு வருவேன். அதை அடுத்த தலைமுறைக்கும், அடுத்த தலைமைகளுக்கும் விட்டுவைக்க மாட்டேன்’ என்று மகிந்த ராஜபக்ச 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கினார். 2009ஆண்டு மே 18ஆம் திகதி யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டதாக அவர் அறிவித்தபோது, இலங்கை இரண்டாவது முறையாக விடுதலை பெற்றுள்ளது என்று சிங்கள மக்கள் மகிந்தவைக் கொண்டாடினார்கள். அதன் பிறகு அபிவிருத்தியை முன்னெடுக்கப் போவதாகக் கூறினார். பெரும்பாலும் வீதிகளை அபிவிருத்தி செய்து நகரங்களையும், கிராமங்களையும் இலகுவாக இணைக்கும் முயற்சியில் குறிப்பிடத்தக்க வெற்றிகளையும் பெற்றார்.

(“மகிந்த நாலடி பாய்ந்தால், அரசு எட்டடி பாயும்! இலங்கை அரசியல் நிலவரம்!” தொடர்ந்து வாசிக்க…)

அரசு தரும் அழுத்தம் மின்சாரக் கதிரையைவிடக் கொடுமையானது! மகிந்த புலம்பல்!

மின்சார நாற்காலியில் இருந்து தப்பினாலும் தற்போது அதனை விட பன்மடங்கு அதிகமான அழுத்தங்களுக்கு தான் உள்ளாகி இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அளுத்கம மொரகல்ல கடற்கரையில் நேற்று(திங்கட்கிழமை) உடற்பயிற்சியில் ஈடுபட்ட முன்னாள் ஜனாதிபதி ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “மின்சார நாற்காலிக்கு அனுப்புவதை விட மனரீதியாக கொடுக்கப்படும் அழுத்தங்கள் போதுமானது. மின்சார நாற்காலிக்கு கொண்டு சென்றது போல்தான் இதுவும். அது ஒருமுறைதான். இது வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும் தண்டனை. எனினும், ஒரு போதும் நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு துரோகம் செய்ய மாட்டேன். அவ்வாறு துரோகியானதும் இல்லை. 58 இலட்சம் வாக்காளர்களுக்கும் நான் துரோகியாகவில்லை. அதற்கு பிறகு வாக்களித்த 48 லட்சம் வாக்காளர்களுக்கும் நான் துரோகியாகவில்லை. ஆனால் துரோகியானது யார் என்பதே கேள்வி. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வருகின்றது. அந்த கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியும் அரசாங்கத்துடன் இணைந்துள்ளது. மக்கள் தற்போது புதிய கட்சி ஒன்றை கோரியுள்ளதுடன் அதற்கான தலைவர் ஒருவரையும் தேடிக் கொண்டிருக்கின்றனர். ” எனத் தெரிவித்தார்..

கூகுள் இன்டர்நெட் வலையமைப்பு இலங்கையில் ஆரம்பம்!

இலங்கை இன்று முதல் பலூன் வழி கூகுள் இன்டர்நெட் வசதியை பயன்படுத்தும் நாடாக மாற்றம் பெற்றுள்ளது. பலூன் மூலமான இன்டர்நெட் சேவையொன்றை அறிமுகப்படுத்தும் கூகுள் நிறுவனத்தின் பரீட்சார்த்த முயற்சி நேற்று முதல் இலங்கையில் ஆரம்பமாகியுள்ளது. இதற்காக தென் அமெரிக்காவில் இருந்து பறக்கவிடப்பட்ட ஆளில்லா கூகுள் பலூன் நேற்று இலங்கையின் தென் பகுதி ஊடாக இலங்கை வான்பரப்பிற்குள் பிரவேசித்து நிலை கொண்டுள்ளது. இதனையடுத்து இன்று முதல் பலூன் வழி இன்டர்நெட் சேவையின் பரீட்சார்த்த முயற்சிகள் இலங்கையில் மேற்கொள்ளப் படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக தொலைதொடர்புக் கோபுர உதவியின்றி இன்டர்நெட் வசதியைப் பெறும் உலகின் முதல் நாடாக இலங்கை மாற்றம் பெற்றுள்ளது. பலூன் வழி இன்டர்நெட் சேவை தொடர்பாக கூகுள் நிறுவனத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்குமிடையில் கடந்த வருடம் ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஈ.பி.டி.பி. கட்சிக்கு மானம் இருக்கின்றதா? சட்டத்தரணி கேள்வி!

முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி. கட்சிக்கு என்ன மானம் இருக்கின்றது? இவ்வாறு சட்டத்தரணியும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பினார். முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்த அரசால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் அதன் ஆணையாளர்கள், ஈ.பி.டி.பி. கட்சி ஒரு சட்டவிரோத ஆயுதக் குழு என்று இந்த நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். அப்படியிருக்கும் போது அந்தக் கட்சிக்கு என்ன மானம் இருக்கின்றது? இவ்வாறு நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பினார் சட்டத்தரணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.

(“ஈ.பி.டி.பி. கட்சிக்கு மானம் இருக்கின்றதா? சட்டத்தரணி கேள்வி!” தொடர்ந்து வாசிக்க…)

எனது காணியில் ஈ பி டி பி முகாம்! முறையிட்டும் பயனில்லை!

சிறீலங்கா அரசுடன் சேர்ந்து இயங்கிய ஈ.பி.டி.பி தனது சொந்த வீட்டை அடாத்தாக பிடித்து வைத்து முகாம் அமைத்துள்ளதாக தந்தை ஒருவர் பரிதாபத்துடன் அரசியல் அமைப்பு தொடர்பாக கருத்துகேட்கும் அமர்வில் கூறியுள்ளார். இதன் போது மேற்படி குழுவில் ஈ.பி.டி.பி உறுப்பினரும் வட மாகாணசபை எதிர்கட்சி தலைவருமான சி.தவராசா இருந்தமை குறிப்பிடத்தக்கது. மேற்படி யாழ் மாவட்டத்துக்கான அமர்வு யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்று வருகிறது. இதன் போதே தனது ஆதங்கத்தை வயோதிப தந்தை ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார். எனினும் இந்த அமர்வு அரசியல் அமைப்பு தொடர்பானது எனவும் இதில் இவ்வாறான விடயங்கள் கதைக்க முடியாது எனவும் குழுவின் மேற்பார்வையாளர்களால் அவருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

(சங்கதி 24.கொம்)

பிரபாகரனை உயிருடன் வைத்திருக்கும் இந்தியா!

“அவன் தணிந்த குரலில் கதைத்தான். வார்த்தைக்கு வார்த்தை இடைவெளி விட்டுவிட்டுக் கதைத்தான். அந்த இடைவெளிக்குள் அகப்பட்டு, அவஸ்தைப்பட்டு அவஸ்தைப்பட்டு வெளியே வந்தான். இரண்டு வார்த்தைகளுக்கிடையிலான மெளனத்தில் என் மனம் நசிந்தது. இது ஒரு வலி. பட்டால் மட்டும் புரியும் வலி.” – இது ஈழத்தமிழர் குணா கவியழகன் எழுதிய ‘நஞ்சுண்டகாடு’ நாவலில் வரும் வரிகள். அவருடனான உரையாடலும் இப்படியானதாகத்தான் இருந்தது. ‘குணா கவியழகனின் படைப்புலக ஆய்வரங்கு’ நிகழ்வுக்காக நெதர்லாந்திலிருந்து, சென்னை வந்தவரை தொடர்பு கொண்டேன். ‘இலக்கியம் பேசுவதாக இருந்தால் நாம் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். ஆம், எனக்கு இலக்கியம் தவிர பேச வேறொன்றுமில்லை. சம்மதமா?’ என்றார். உடனே சம்மதித்தேன். குணா அவருடைய நாவல்களிலேயே அரசியல் பேசுபவர். ஆகவே, நிச்சயம் அது வெறும் இலக்கிய உரையாடலாக மட்டும் இருக்காது என்று நம்பியதால் சம்மதித்தேன்.

(“பிரபாகரனை உயிருடன் வைத்திருக்கும் இந்தியா!” தொடர்ந்து வாசிக்க…)

புலிகளும் வசதியான புலி உறுப்பினர்களும்

1987ல் இந்தியப் படைகள் வருவதற்கு முன்னர் புலிகள் இயக்கத்தில் வசதி படைத்தவர்களின் பிள்ளைகளும், மேட்டுக்குடிகளும் இணைந்திருந்தனர். புலிகளின் கரும்புலிகள் இல்லாத காலத்தில் புலிகளின் மேல் மட்டத்தில் சரி கீழ் மட்டதில் தளபதிகளாகவும் இருந்தவர்கள் வசதியான குடும்பங்களில் இருந்து வந்தவர்களே அதிகம். பிரபாகரன் இந்தியப் படையினருடன் யுத்தம் ஆரம்பித்ததும் இந்த மேட்டுக்குடிகளைச் சேர்ந்தவர்களும், வசதியான குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் தப்பியோடி இந்தியாவுக்கும், கொழும்புக்கும் சென்று வெளிநாடுகளுக்கும் சென்றுவிட்டனர். காரணம் அவர்கள் வெளிநாடு செல்லக்கூடிய வசதி படைத்தவர்களாக இருந்தனர்.

(“புலிகளும் வசதியான புலி உறுப்பினர்களும்” தொடர்ந்து வாசிக்க…)

யோசிதவின் சிறைக்கூடம் தடை செய்யப்பட்ட பிரதேசம்!

வெலிக்கடைச் சிறைச்சாலையில், லெப்.யோசித ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, சிறைக்கூடப் பகுதி தனிமைப்படுத்தப்பட்டு, தடை செய்யப்பட்ட பிரதேசமாக பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜே சிறைக்கூடப் பகுதிக்கு இரண்டு சிறைஅதிகாரிகளே நுழைவதற்கு அனுமதி அளி்க்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள், 24 மணிநேரமும் சிறைச்சாலை அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். யோசித ராஜபக்ச, விருந்தினர்களைச் சந்திக்கச் செல்லும் போது, ஒரு சிறை அதிகாரியும் சமூகமளித்திருப்பார். சிறை அதிகாரிகளுக்கு அறிவிக்காமல், இவர்கள் சிறைக்கூடத்துக்கு வெளியே செல்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.

(“யோசிதவின் சிறைக்கூடம் தடை செய்யப்பட்ட பிரதேசம்!” தொடர்ந்து வாசிக்க…)

யோசித ஆதரவு கடற்படையினர் இடைநிறுத்தம்!

யோசித ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து, கையில் பட்டி அணிந்து கொண்டு போட்டியில் பங்கேற்ற சிறிலங்கா கடற்படையின் ரக்பி அணி வீரர்கள் நால்வரை சிறிலங்கா கடற்படை இடைநிறுத்தியுள்ளது. டியகமவில் நேற்று நடந்த ரக்பி போட்டியில் விளையாடிய சிறிலங்கா கடற்படை அணியின் வீரர்கள் நால்வர், தமது அணியின் முன்னாள் அணித் தலைவரும் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவருமான, யோசித ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து, கையில் பட்டிகளை அணிந்திருந்தனர். யோசித ராஜபக்சவின் இலக்கமான 07 என்பதை, YO07 என அவர்கள் தமது கைப்பட்டிகளில் எழுதியிருந்தனர். இதையடுத்து, சிறிலங்கா கடற்படை அணியின் நான்கு வீரர்களும் விசாரணை முடியும் வரை சிறிலங்கா கடற்படைத் தளபதியால் இடைநிறுத்தப்பட்டுள்ளனர் என்று கடற்படைப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.