எங்கள் சர்வேஸ்வரி அம்மாவுக்கு அஞ்சலி -தோழர் சிறிதரன்

1980 களின் நடுப்பகுதியில் மறைந்த தோழர் அகிலனின் தாயார் சர்வேஸ்வரி பரமசாமி(86) மறைவு. 1983 இன வன்முறையின் போது இவரது கணவர் பரமசாமியும் மூத்த புதல்வரும் தெகிவளையில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்கள். இவரது இளைய மகன் தோழர் அகிலன் ஈழமாணவர் பொதுமன்றத்தின் முன்னோடிகளில் ஒருவர்.
1980 களின் நடுப்பகுதியில் வங்ககடலில் படகு விபத்தில் தோழர்களுடன் உயிர் நீத்தார். 1983 இன் பின்னர் அவர்கள் பேரிழப்பின் துயரத்துடன் சர்வேஸ்வரி அம்மா அகிலன் வாசுகி யாழ்ப்பாணம் உரும்பிராய் விட்டுக்கு வந்து சேர்ந்தனர். அவர்களின் உரும்பிராய் வீடும் 1983 இற்கு பின்னான இருண்ட காலத்தில் சமூக விடுதலை இயக்கத்தை ஆதரித்த இடமாக இருந்தது. சர்வேஸ்வரி 1983 இல் இருந்து 35 ஆண்டுகள் சர்வேஸ்வரி பரமசாமி அம்மாவின் ஈடுசெய்ய முடியாத இழப்புக்களுடனான பயணம் . அது ஒரு அவல சரித்திரம்.
அம்மாவிற்கு எமது அஞ்சலிகள்!தோழர்கள் வாசுகி ஆதவன் பிள்ளைகளுடன் துயர் பகிர்கிறோம்.