யாழ். கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க பிள்ளையார் களத்தில்!

 

யாழ். இராசாவின் தோட்டம் வீதியில் பொறுப்பற்ற விதமாக கழிவுகளை கொட்டிவந்த பொறுப்பற்ற மக்களை திருத்த பிள்ளையாரே களத்தில் இறங்கிவிட்டார். சூழலை பாதுகாக்க சட்டங்களால் முடியவில்லை. சாமிகளால் முடிகிறது…..?. குங்குமம் பொட்டர் விக்னேஸ்வரனின் ஐடியாவோ….?(குடாநாட்டான்)

காணாமற் போனோர் உறவுகளை மிரட்டிய சிவாஜிலிங்கம்!

தமிழ் மக்கள் ஏதாவது ஓர் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், உண்ணாவிரதம் நடத்தினால் ஓடிவந்து அங்கிருந்து ஊடகங்களுக்குப் பேட்டி கொடுப்பதில் சிவாஜிலிங்கம் முதல்வர்! மாவீரர்கள் தினம் வந்துவிட்டால் கோவிலுக்குப் போகும் இதர பக்தர்களுடன் போவிலுக்கு மூன்று பேருடன் நுழைந்து, கற்பூரம் பொளுத்திவிட்டு, அதனைப் படம் பிடித்து, மாவீரர் தினம் கொண்டாடியதாக கதை விடும் இவர், காணாமற்போனோரது உறவுகள் மேற்கொள்ளும் எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் இதுவரை அழையா விருந்தாளியாக தலைகாட்டி வந்தார். இவர் போன்ற சிலர் இடையில் கலந்துகொண்டு, அரசியல்லாபம் தேடிக்கொள்வதால் தங்களது கோரிக்கைள் எடுபடாததை உணர்ந்த காணாமற்போனவர்களது உறவினர்கள், இவருக்குத் தெரியாமல் நேற்றைய தினம் ஒரு கவன ஈர்ப்பு போராட்டத்தை யாழ் பஸ் நிலையத்தில் ஆரம்பித்திருந்தனர். இதனை சற்றும் எதிர்பார்த்திராத சிவாஜிலிங்கம், அதனை ஏற்பாடு செய்தவர்களுக்கு தொலைபேசி எடுத்து, ‘எனக்கு சொல்லாமல் ஏன் இதனை செய்தீர்கள்? ஏதாவது பின்விளைவுகள் வந்தால் யார் பொறுப்பு? இனிமேல் என்னிடம் சொல்லாமல் இப்படியெல்லாம் செய்யக்கூடாது’ என மிரட்டியுள்ளார். அரசியலில் எப்படியெல்லாம் சம்பாதிக்கிறார்கள் பாருங்கள்!

மௌனித்துப் போனது ஆயுதப் போராட்டமே!

தமிழ் மக்கள் தங்களுக்கான சுயநிர்ணய உரிமையைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் தமிழ் அரசியல் கட்சிகளான தமிழரசுக் கட்சி, தமிழ் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்கின்ற பிரதான மூன்று கட்சிகளினூடாக போராடியிருக்கின்றனர். தமிழ்க் கூட்டமைப்பின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் ,குறைபாடுகள் முன்வைக்கப்பட்டாலும், மக்களின் ஏகபிரதிநிதிகளாகவும், மக்களின் ஆதரவு பெற்றதும் தமிழ் மக்களின் சுயநிர்ணம் பற்றிய அரசியல் விடயங்களில் நேரடிக் களம் இறங்கிக் கொண்டிருப்பதும் தமிழ் கூட்டமைப்பேயாகும்.

(“மௌனித்துப் போனது ஆயுதப் போராட்டமே!” தொடர்ந்து வாசிக்க…)

நீடித்து நிலைக்கும் தட்டிவான் பயணம்!

 

உலகமயமாக்கலிலும் மாற்றமுறாது தொடரும் பருத்தித்துறை – கொடிகாமம் தட்டிவான் பயணம் காலமாற்றம் காணாதது. இயற்கை காற்று உடலை தழுவும். அதில் கலந்துவரும் புழுதி மண் வாசனை புத்துணர்ச்சி தரும். இந்த இயற்கை இன்பம் சொகுசு வாகன பயணத்தில் கிடைக்குமா? கோடைகாலத்து குளிரூட்டி எம் மண்ணின் பருவகால காற்று. மாரி காலத்தில் உடலை சூடேற்ற பயணிகளை நெருக்கி அடையும் நடத்துனர். தட்டிவானுக்கு ஏசி தேவை இல்லை. ஹீற்றர் போடும் அவசியம் இல்லை இயற்கையோடு வாழ்ந்து ஓசோன் படலத்தை பாதுகாக்கும் எம் பயணத்தை ஒரு தடவை ஊர் வந்து அனுபவி புலம் பெயர் தமிழா!

(Ram)

கொடிகாமம் பருத்தித்துறை வீதி ஏன் புனரமைக்கப்படவேண்டும்?

யாழ் தீபகற்பத்தின் பிரதான வீதிகளில் ஒன்றாக அமைந்துள்ளது கொடிகாமம் பருத்தித்துறை வீதி. AB31 எனத் தரப்படுத்தப்பட்டுள்ள இந்த வீதி வடமராட்சியின் மந்திகையிலிருந்து முள்ளிவெளி, வரணி ஊடாக கொடிகாமம் வரை நீள்கின்றது. வடமராட்சியில் இந்த வீதியின் தொடர்ச்சியாக – மந்திகையிலிருந்து பருத்தித்துறை வரை யாழ் – பருத்தித்துறை வீதியும் (AB20), தென்மராட்சியில் இந்த வீதியின் தொடர்ச்சியாக – கொடிகாமத்திலிருந்து கச்சாய் (B68) வீதியும் அமைந்துள்ளன. அதாவது முன்னர் யாழின் துறைமுகங்களாக விளங்கிய பருத்தித்துறை மற்றும் கச்சாய் துறைமுகங்களை இணைக்கின்றது இந்த வீதி.

(“கொடிகாமம் பருத்தித்துறை வீதி ஏன் புனரமைக்கப்படவேண்டும்?” தொடர்ந்து வாசிக்க…)

யாழில் பட்டையை கிளப்பும் பிழாச் சோறு

 

முக்கியமான விசேஷங்கள் மற்றும் பிக்னிக் போன்றவற்றில் பனை ஓலையை மடித்து அதில் உணவை இட்டு உண்பார்கள், நிஜமாலுமே (பனை) பிழாவில் உண்ணும் போது அதன் சுவையே தனி தான். அந்த சுவையை ருசித்தவர்களுக்கு கிடைக்கும் அனுபவம் என்றும் மறக்க முடியாததாகும்…!.ஒருகாலத்தில் ஆதிக்கசாதியினர் இவர்களால் தாழ்த்தப்பட்ட சாதியினர் என்று கூறப்படவர்களுக்கு தமது வீட்டுப்பாத்திரத்தில் உணவு வழங்கினால் ‘தீட்டு’ என்று கருதி அவர்களுக்கு இந்த ‘அட்சய’ பாத்திரத்தில்தான் சோறு கொடுத்தனர் என்ற வடுகள் நிறைந்த வரலாற்றையும் இந்த ‘பிழா’ அல்லது ‘தட்டுவம்’ கொண்டிருந்தது. தட்டுவதில் நீர் ஒழுகும் ஆனால் பிழாவில் நீர் ஒழுகாது. பிழாவில் அனேகமாக கள்ளு பரிமாறுவர். தண்ணீரைக் கிணற்றில் இருந்து அள்ளுவதற்கு வாளியிற்கு பதிலாக பனை ஓலையில் இழைத்துச் செய்யப்படுவது பட்டை இந்தப் பட்டையும், பிழாவும் எமது வாழ்வில் பின்னிப் பிணைந்த இனி பாத்திரங்கள்

(குடாநாட்டான்)

அதிசயம் ஆனால் உண்மை!

தற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறிவியல் அல்லது பகுத்தறிவு விதிகளுக்குப் பொருந்தாதவையாக அவை தோன்றினாலும் கூட நம் அறிவுக்கெட்டாத ஏதோ ஒரு ’விதி’ அந்த நிகழ்வுகளை சீரான முறையில் இயக்கி இருப்பது போல தோன்றும். அப்படிப்பட்ட சில ஆதாரபூர்வமான,ஆச்சர்யமளிக்கும், நிகழ்வுகள் சில, இரண்டு அமெரிக்க ஜனாதிபதிகள் விஷயத்தில் இருந்த மாபெரும் ஒற்றுமைகளைப் பார்ப்போம்.

(“அதிசயம் ஆனால் உண்மை!” தொடர்ந்து வாசிக்க…)

நாம் விதிக் குரங்குகள் கிழித்தெறியும் பஞ்சுத் தலையணையா?’

‘யாழ் நகரில் என் பையன்
கொழும்பில் என் பெண்டாட்டி
வன்னியில் என் தந்தை
தள்ளாத வயதினிலே தமிழ் நாட்டில் என் அம்மா
சுற்றம் பிறாம்போட்டில்
சகோதரியோ பிரான்ஸ் நாட்டில்
நானோ வழிதவறி அலாஸ்கா வந்தவிட்ட
ஒட்டகம்போல ஓஸ்லோவில்!
நம் குடும்பங்கள் என்ன?
காற்றில் விதிக் குரங்குகள்
கிழித்தெறியும் பஞ்சுத் தலையணையா?’

(வ.ஐ.ச.ஜெயபாலன்)

தற்கொலைக்கு தூண்டியது எது? – 3 மாணவிகளின் உருக்கமான கடிதம்!

விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள எஸ்.வி.எஸ்.யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்த வந்த மோனிஷா, சரண்யா, பிரியங்கா என்ற மூன்று மாணவிகள், கல்லூரிக்கு அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மாணவிகளின் மரணம். மூன்று மாணவிகளும் தற்கொலைக்கு முன் எழுதியுள்ள கடிதம் தற்போது சிக்கியுள்ளது. இந்த கடிதத்தில், அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், காலேஜில நாங்க படிச்சத விட வேலை பார்த்ததுதான் அதிகம் என்றும் தங்கள் மனவேதனையை வெளிப்படுத்தியுள்ளனர்.

(“தற்கொலைக்கு தூண்டியது எது? – 3 மாணவிகளின் உருக்கமான கடிதம்!” தொடர்ந்து வாசிக்க…)