நீடித்து நிலைக்கும் தட்டிவான் பயணம்!

 

உலகமயமாக்கலிலும் மாற்றமுறாது தொடரும் பருத்தித்துறை – கொடிகாமம் தட்டிவான் பயணம் காலமாற்றம் காணாதது. இயற்கை காற்று உடலை தழுவும். அதில் கலந்துவரும் புழுதி மண் வாசனை புத்துணர்ச்சி தரும். இந்த இயற்கை இன்பம் சொகுசு வாகன பயணத்தில் கிடைக்குமா? கோடைகாலத்து குளிரூட்டி எம் மண்ணின் பருவகால காற்று. மாரி காலத்தில் உடலை சூடேற்ற பயணிகளை நெருக்கி அடையும் நடத்துனர். தட்டிவானுக்கு ஏசி தேவை இல்லை. ஹீற்றர் போடும் அவசியம் இல்லை இயற்கையோடு வாழ்ந்து ஓசோன் படலத்தை பாதுகாக்கும் எம் பயணத்தை ஒரு தடவை ஊர் வந்து அனுபவி புலம் பெயர் தமிழா!

(Ram)