மகிந்தரை வருத்திக் கொண்டிருப்பது எது?

நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பலன் கிடைக்கும். அது பாவச் செயலாக இருந்தாலும் சரி நல்ல செயலாக இருந்தாலும் சரி ஏதோ ஒருவகையில் அதற்கான பெறுபேறு கிடைக்கும். இலங்கை நாட்டின் அரசியல் வரலாற்றில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் ஒவ்வொன்றும் ஏதோ ஒருவகையில் செய்(த)வினை செய்தவர்களாகவே இருக்கின்றார்கள். இந்த நாட்டின் சிறுபான்மை மக்களுக்கு கிடைக்க கூடிய அதிகாரங்களை கிடைக்க விடாமல் செய்வதற்கு அவர்கள் பட்டபாடுகள் கொஞ்சமல்ல,எந்த வகையில் எல்லாம் அரசியல் தீர்வு கிடைக்க கூடாது என்று நினைத்தார்களோ அதை எல்லாம் இழுத்து மூடினார்கள். இதன் விளைவு தான் முப்பது ஆண்டுகால ஆயுத போராட்டம். அதுவும் இறுதியில் இரத்த ஆற்றோடு முடிவுக்கு வந்தது.

(“மகிந்தரை வருத்திக் கொண்டிருப்பது எது?” தொடர்ந்து வாசிக்க…)

வீரவன்சவின் போராட்டமே மகிந்தவின் சரிவின் ஆரம்பம்!

ஐக்கிய நாடுகள் அமைப்பின் அலுவலகத்திற்கு எதிரில் விமல் வீரவன்ச நடத்திய உண்ணவிரதப் போராட்டமே மிகவும் பலமாக இருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சியின் சரிவின் ஆரம்பமாக அமைந்தது என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பை விமல் வீரவன்ச, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளாக எண்ணினார்.

(“வீரவன்சவின் போராட்டமே மகிந்தவின் சரிவின் ஆரம்பம்!” தொடர்ந்து வாசிக்க…)

டக்ளஸ் கொலை முயற்சி! எமில்காந்தனுக்கு மீண்டும் பிடியாணை!

தமிழீழ விடுதலை புலிகளின் முக்கிய உறுப்பினராக கருதப்படும் அன்டனி எமில்காந்தனை கைதுசெய்யும் வகையில் கொழும்பு விசேட மேல் நீதிமன்றம் மீண்டும் பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளது. 1998 களுத்துறை பகுதியில் வைத்து முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கூரிய ஆயுததால் தாக்கி கொலை செய்ய முயற்சித்தமை தொடர்பிலே அவருக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 2 ஆம் திகதி எமில்காந்தன் நீதிமன்றத்தில் சரண் அடையத் தயாராக உள்ளதாக எமில்காந்தன் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணிகள் குறிப்பிட்டனர். எனவே எமில்காந்தனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை உத்தரவை இரத்துச் செய்ய வேண்டும் என அவரின் சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றிருந்தது.

(“டக்ளஸ் கொலை முயற்சி! எமில்காந்தனுக்கு மீண்டும் பிடியாணை!” தொடர்ந்து வாசிக்க…)

ராஜீவ் கொலை: 7 பேரின் விடுதலை விவகாரம் மீண்டும் சூடுபிடித்தது

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலிருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்வதற்குத் தீர்மானித்துள்ள தமிழக அரசாங்கம், இது தொடர்பில் மத்திய அரசாங்கத்துக் கடிதமொன்றை எழுதியுள்ளது. தமிழக அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், 2ஆம் திகதி புதன்கிழமை எழுதிய கடிதத்தையடுத்து, இவ்விவகாரம் சூடுபிடித்துள்ளது.

(“ராஜீவ் கொலை: 7 பேரின் விடுதலை விவகாரம் மீண்டும் சூடுபிடித்தது” தொடர்ந்து வாசிக்க…)

யுத்த பாதிப்புக்குள்ளானவர் தேவைகள் முதன்மைப்படுத்தப்பட வேண்டும்!

யுத்தத்தின் பாதிப்புகளை வடக்கில் அதிகம் எதிர்கொண்டவர்கள் என்ற அடிப்படையில், முல்லைத்தீவு மாவட்ட மக்களின் தேவைகள் முதன்மைப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டுமென வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜப்பானிய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் 24 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட முல்லைத்தீவு உடையார்கட்டு தமிழ் கலவன் பாடசாலையை நேற்று (புதன்கிழமை) மாலை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே வடக்கு முதல்வர் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.

(“யுத்த பாதிப்புக்குள்ளானவர் தேவைகள் முதன்மைப்படுத்தப்பட வேண்டும்!” தொடர்ந்து வாசிக்க…)

தாஜுடீன் கொலை காணொளியை வழங்குமாறு டக்ளஸ்சிற்கு உத்தரவு!

தாஜுடீன் கொலை வழக்கு தொடர்பான விசாரணைகளுக்கென பார்க் வீதியிலுள்ள டக்ளஸ் தேவானாந்தாவின் கட்சி அலுவலக சி சி ரி வி காணொளிகளை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் தாஜுடீன் கொலை வழக்கு, இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிபதி நிஷாந்த பிரீஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். தாஜுடீன் கொலை வழக்கின் விசாரணைகளுக்கென 2012 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி பதிவான டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அலுவலக சி சி ரி வி காணொளிகளை வழங்க வேண்டும் என குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தனர்.

(“தாஜுடீன் கொலை காணொளியை வழங்குமாறு டக்ளஸ்சிற்கு உத்தரவு!” தொடர்ந்து வாசிக்க…)

தீண்டாமை ஒழிப்பு போராட்டம்- மந்துவில்(பகுதி 15 )

அச்சுவேலியில் ஏற்பட்ட சம்பவத்தில் அரியரத்தினம் கொல்லப்பட்டார். இது தொடர்பாக யாரும் எந்த தகவலும் பொலிசாருக்கு கொடுக்கவில்லை.உண்மை விபரங்களை வெளியிடவும் இல்லை.எனக்குத் தெரிந்த விசயங்களை பகிரவிரும்பவில்லை.இறப்பதற்கு முதல்நாள் எங்கள் வீட்டுக்கு வந்து தன் தோட்டத்துக்கு பனை ஓலை வாங்கிக்கொண்டு போனார். மறுநாள் இந்த தகவல் கிடைத்தது.அவர் பிரபாகரன் பாணியில் செயற்பட முனைந்தார்.புரிந்தவரகள் விளங்கிக் கொள்ளவும்.

(“தீண்டாமை ஒழிப்பு போராட்டம்- மந்துவில்(பகுதி 15 )” தொடர்ந்து வாசிக்க…)

இந்தியா உதவவில்லை – வரதர்! இந்தியா உதவ வேண்டும் – விக்கி?

இந்தியா சமஸ்டி அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள உதவவில்லை என்று இந்தியாவின் அரவணைப்பில் இருக்கும் முன்னாள் மாகாண முதல்வர் வரதராஜப் பெருமாள் கூறியிருக்கிறார். ஆனால் சமஸ்டி அதிகாரங்களை பெறுவதற்கு இந்தியா உதவ வேண்டும் என்று இந்நாள் முதல்வர் விக்கினேஸ்வரன் அவர்கள் கேட்டிருக்கிறார். இந்தியா தமிழ் மக்களுக்கு இதுவரை உதவவில்லை. இனியும் உதவப் போவதில்லை. எனவே மீண்டும் மீண்டும் இந்தியா உதவ வேண்டும் என்று கேட்பதன் மர்மம் என்ன? தமிழ்மக்கள் மீதான இத்தனை அழிவுக்கும் காரணமான இந்தியா உதவவேண்டும் என்று இன்னமும் கேட்பதன் அரசியல் என்ன? இலுப்பம் பழம் பழுத்தால் வெளவால் வரும் என்று முன்பு சொன்னார்கள். வந்தது வெளவால் அல்ல, இந்தியா என்ற குள்ள நரி என்று கண்டோம்.

(“இந்தியா உதவவில்லை – வரதர்! இந்தியா உதவ வேண்டும் – விக்கி?” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் பிளவு?

தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தால், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்டிருக்கும் இந்த கருத்து முரண்பாடுகளையும், உட்கட்சி பிளவுகளையும் தீர்ப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை எதிர்வரும் 6ஆம் திகதி சனிக்கிழமை எதிர்க்கட்சித் தலைவரது கொழும்பு அலுவலகத்தில் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்துள்ளது.

(“தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் பிளவு?” தொடர்ந்து வாசிக்க…)

சிறீலங்காவில் 28 துறைமுகங்கள் கட்டவிரும்பும் சீனா?

இலங்கைத் தீவைச் சுற்றி 28 துறைமுக நகரங்களை நிர்மாணிக்க சீனா விருப்பம் தெரிவித்திருப்பதாக, இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் சீனாவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டுக்கு அமைய, ஆரம்பிக்கப்பட்ட கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் கடந்த ஆண்டு மார்ச் முதல் வாரம் இடைநிறுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் உடன்பாட்டில் திருத்தங்களைச் செய்து அதனைத் தொடர்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் விருப்பம் கொண்டுள்ளது.

(“சிறீலங்காவில் 28 துறைமுகங்கள் கட்டவிரும்பும் சீனா?” தொடர்ந்து வாசிக்க…)