ரஷ்ய இராஜதந்திரிகள் வெளியேற்றம்: மேற்குலகின் இயலாமை

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

உலக அரசியல் நடப்புகள் பலவற்றுக்கு, தர்க்கரீதியான விளக்கங்கள் இல்லை. அதையும் மீறிச் சொல்லப்படும் விளக்கங்கள், தர்க்கரீதியானவை அல்ல. அத்தகைய விளக்கங்கள் சொல்லப்படுவதைவிட, சொல்லாமல் விடுவது அதிகம். தற்போதைய உலக அரசியலில், அரசியல் நடத்தை என்பது, வலிமையால் தன்னை நிலைநிறுத்த முனைவது. வலிமையால் நிறுவமுடியாத போது, அவதூறும் பொய்யும் புனைகதையும் உண்மைகள் போல் சொல்லப்படுகின்றன. இதனாலேயே ‘பொய்ச் செய்தி’களின் காலத்தில், நாம் வாழத் தலைப்பட்டிருக்கிறோம்.

(“ரஷ்ய இராஜதந்திரிகள் வெளியேற்றம்: மேற்குலகின் இயலாமை” தொடர்ந்து வாசிக்க…)

முன்னாள் போராளிகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்கான பாரிய வேலை திட்டம் யாழை மையப்படுத்தி விரைவில் ஆரம்பம்

இலங்கை மக்கள் நலன்புரி ஸ்தாபனத்தின் தலைவி வதனி அம்மையார் உறுதி

தமிழீழ விடுதலை புலிகள் இயக்க முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரம், பொருளாதாரம், வாழ்க்கை தரம், சுய தொழில் வாய்ப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்துகின்ற பாரிய வேலை திட்டம் ஒன்றை யாழ்ப்பாண மாவட்டத்தை மையமாக கொண்டு விரைவில் ஆரம்பிக்க உள்ளார் என்று இலங்கை மக்கள் நலன்புரி ஸ்தாபனத்தின் தலைவி வதனி மோகனசங்கர் அம்மையார் தெரிவித்தார்.

(“முன்னாள் போராளிகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்கான பாரிய வேலை திட்டம் யாழை மையப்படுத்தி விரைவில் ஆரம்பம்” தொடர்ந்து வாசிக்க…)

கூட்டமைப்பிலிருந்து வெளியேறியது விடுதலைப்புலிகள் கட்சி

தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவதாக, புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சி தெரிவித்துள்ளது. ஒற்றுமையின் பலமாக செயற்பட முன்வந்த முன்னாள் போராளிகளாகிய தமது நம்பிக்கையினை உடைத்தெறிந்ததன் மூலம் ஈபிஆர்எல்எவ், தமிழர் விடுதலைக் கூட்டணிக் கட்சிளுடனான கூட்டினை முன்னெடுக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விடுதலைப்புலிகள் அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(“கூட்டமைப்பிலிருந்து வெளியேறியது விடுதலைப்புலிகள் கட்சி” தொடர்ந்து வாசிக்க…)

ஓருங்கிணைந்துசெயற்படவேஉள்ளூராட்சியில்மக்கள் தீர்ப்பு

(சுகு-ஸ்ரீதரன்)

உள்ளூராட்சிசபைகளில் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு மக்கள் பணிசெய்வதற்குஅனைத்துதமிழ் தரப்புக்களும் முயல வேண்டும். இந்தசபைகள் அரசியல் வேறுபாடுகள் முரண்பாடுகளுக்sritharan sukuகான களங்கள் அல்ல. வட்டார பிரதேச- நகர- மாநகரமட்டங்களில் மக்களின் ஜீவாதார நலன்களுடன் தொடர்புபட்டவை. கடந்தஉள்ளு+ராட்சி சபைகள் போல கிழக்கு,வடக்கு மாகாணசபைகள் போல் குறிப்பிடத் தகுந்த எதையும் சாதிக்கமுடியாததாக இச்சபைகள் ஆகிவிடக் கூடாது.

(“ஓருங்கிணைந்துசெயற்படவேஉள்ளூராட்சியில்மக்கள் தீர்ப்பு” தொடர்ந்து வாசிக்க…)

நகரசபைகள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கைகளில் வீழ்ந்து விட்டன

 

“ஓயாத அலைகள்” நடவடிக்கையில் புலிகளிடம் படபடவென இலங்கை இராணுவத்தின் படைத்தளங்கள் வீழ்ந்ததைப்போல அல்லது 2008, 2009 களில் இலங்கைப் படையினரிடம் புலிகளின் பிரதேசங்களில் கடகடவென வீழ்ச்சியடைந்ததைப்போல யாழ்ப்பாண மாநகர சபை, சாவகச்சேரி, பருத்தித்துறை நகரசபைகள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கைகளில் வீழ்ந்து விட்டன.

(“நகரசபைகள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கைகளில் வீழ்ந்து விட்டன” தொடர்ந்து வாசிக்க…)

கூட்டமைப்பின் பிடி முன்னணியின் சறுக்கல்

(புருஜோத்தமன் தங்கமயில்)
அரசியலில், கிடைத்த சந்தர்ப்பங்களைச் சாதகமாகப் பயன்படுத்துவது மாத்திரமல்ல; சாதகமான சந்தர்ப்பங்களை உருவாக்குவதும் அடிப்படையானது. அதற்கு, சாவகச்சேரி நகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்திருப்பதை அண்மைய உதாரணமாகக் கொள்ளலாம். கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், வடக்கு- கிழக்கு பூராவும் கூட்டமைப்பு சுமார் இரண்டு இலட்சம் வாக்குகளை இழந்தது. முக்கியமாக, பருத்தித்துறை மற்றும் சாவகச்சேரி நகர சபைகளில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிடம் தோல்வியடைந்திருந்தது.

(“கூட்டமைப்பின் பிடி முன்னணியின் சறுக்கல்” தொடர்ந்து வாசிக்க…)

ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தவிசாளராக  மிக பொருத்தமான ஒருவர் தெரிவு செய்யப்படுவார்

(சு. க அமைப்பாளர் ரகுபதி உறுதி)
 
 ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆலையடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர்களில் சிலர் தமிழினத்தை காட்டி கொடுக்கின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு உள்ளமை கவலை தருகின்றது என்று இக்கட்சியின் ஆலையடிவேம்பு பிரதேச அமைப்பாளர் கே. ரகுபதி தெரிவித்தார். இவருடைய ஆலையடிவேம்பு இல்லத்தில் ஊடகவியலாளர்களை நேற்று திங்கட்கிழமை சந்தித்து பேசியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.

(“ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தவிசாளராக  மிக பொருத்தமான ஒருவர் தெரிவு செய்யப்படுவார்” தொடர்ந்து வாசிக்க…)

மக்களின் நிலம் நிச்சயம் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும்

(கவிநயா)
மக்களின் நிலங்கள் மக்களிடம் நிச்சயம் கையளிக்கப்பட வேண்டும், அல்லது அந்நிலங்களுக்கான நஷ்ட ஈடுகள் மக்களுக்கு வழங்கப்பட்டே ஆக வேண்டும், இது தொடர்பாக முறையான பொறிமுறை ஒன்று நடைமுறையில் இருக்க வேண்டியது அத்தியாவசியமான விடயம் ஆகும் என்று ஞாயிறு தினக்குரலுக்கு
வழங்கிய சிறப்பு பேட்டியில் இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளைதளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

(“மக்களின் நிலம் நிச்சயம் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் பக்கம் – ‘Page Tamil’ இன் Who is the Black sheep? என்பதற்குப் பதில்

(Janaki Karthigesan Balakrishnan)

நேற்றைய தினம் யாழ். நகரசபை மேயர் தெரிவில் இணக்க அரசியலை நடைமுறைப்படுத்தியதைப் போற்றி எழுதிவிட்டு, இன்று இக்கட்டுரையை எழுதுவதற்கு தயக்கமாக இருந்தாலும், அதில் ஒரு கட்டாயம் இருக்கிறது என்பதை தீர்க்கமாக உணர்கிறேன். இன்றைய அரசியல் பல வயதினரும், குறிப்பாக இன்றுவரை அதிக ஜனநாயக தேர்தல்முறை அரசியலில் பங்கேற்காத இளைஞரும், யுவதிகளும் கூட, ஈடுபடுகிறார்கள். இந்த இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் இணக்க அரசியல் என்பதை கடந்த காலங்களில் அறிய வாய்ப்பிருந்திருக்காததுடன், அதை யாழ். நகரசபை மேயர் தெரிவில் நடைமுறைப்படுத்தின் காரணம், பயன்கள் என்ன என்பதை புரிந்து கொள்வதற்கு, இதை நடைமுறைப்படுத்திய தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைப் போல் வயதிலும், அறிவிலும் முதிர்ச்சியும், அரசியல் அனுபவமும் போதாது. இது அதில் ஈடுபட்ட சில மூத்த அரசியல்வாதிகளுக்கும், வயதைத் தவிர்ந்த ஏனைய விடயங்களில் பொருந்தும். இந்தக் கட்டுரை ஒரு யதார்த்தமான அரசியலில் என்னவெல்லாம் நடக்கலாம், அதை ஒவ்வொருவர் எவ்வாறு கையாளுவர் என்று எதிர்பார்க்கலாம் என்பதைத் தெரிவிக்குமுகமாக எழுதப்படுகிறது.

(“தமிழ் பக்கம் – ‘Page Tamil’ இன் Who is the Black sheep? என்பதற்குப் பதில்” தொடர்ந்து வாசிக்க…)

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டமும் படிப்பினைகளும்!

(டி.எஸ்.எஸ்.மணி)
24 -03 -2018 சனிக்கிழமை தூத்துக்குடி நகரமே இதுவரை கண்டிராத மக்கள் எழுச்சியைச் சந்தித்தது. தூத்துக்குடி நகரம், ஸ்ரீவைகுண்டம் நகரம், புதியமுத்தூர் நகரம், தருவைகுளம் என எல்லா இடத்திலேயும் கடைகள் அடைக்கப்பட்டன. கடையடைப்பு என்றே அறிவிக்கப்பட்டது. ‘ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடு’ என்ற முழக்கத்துடன் கடையடைப்பு செய்யப்பட்டது.

(“ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டமும் படிப்பினைகளும்!” தொடர்ந்து வாசிக்க…)