பழைய கதை பேசி பல்லக்கில் ஏறுவோர் தான் ஈழத்தின் விதியா?

மீண்டும் ஒரு பத்தியாளர் பத்தவைத்த திரியில் நானும் என் பங்கிற்கு வெடிகொளுத்தும் பதிவு இது. ஒருகாலத்தில் ‘’பழம் பழுத்தால் வௌவால் வரும்’’ என்றவரும் ‘’புலிவரும் முன்னே தமிழ் ஈழம் வரும் பின்னே’’ என்றவரும் மேடைகளில் முழங்கிய வேளையில் கூடவே கொக்கரித்தவர்களில் மாவையும் ஒருவர். பாசறைகள் தயாராகிவிட்டன பயிற்சிகள் தொடங்கிவிட்டன என உணர்ச்சி ஊட்டியவர் இவர்.

(“பழைய கதை பேசி பல்லக்கில் ஏறுவோர் தான் ஈழத்தின் விதியா?” தொடர்ந்து வாசிக்க…)

திருகோணமலையில் மக்களோடு மக்களாய்

03/09/2017 இன்று தமிழர் சமூக ஜனநாயக கட்சி திருகோணமலை காரியாலயத்தில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பத்தின் பெண்களுடன் கலந்துரையாடலும் பதிவுகளும் நடைபெற்றன. அத்துடன் வந்தவர்கள் எல்லோருக்கும் மதிய உணவும் போக்குவரத்திற்கான செலவும் கொடுக்கப்பட்டன. தோழர சுகு தோழர் ஞானசக்தி போன்றவரi;களுடன் திருகோணமலையின் பல் வேறு பகுதிகளைச் சேர்ந்தவரகள் கலந்துகொண்டனர். ஒரு மாற்றத்திற்கான அறிகுறியாக இது காணப்படுவதாக மக்கள் பேசிக் கொண்டனர். திருகோணமலை கடற்கரை வீதியில் அமைந்த தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் காரியாலயத்தில் இந் நிகழ்வு நடைபெற்றது

“கேரள டயறீஸ்“

யாழ்ப்பாணத்தில் வெளியிப்படவுள்ள “கேரள டயறீஸ்“ புத்தகத்தைப்பற்றித் தவறான தகவல்களை சிலர் பரப்பி வருகின்றனர். ஏறக்குறைய இது ஒரு வதந்தியே. மெய்யான அழைப்பிதழை பிழையாக உருமாற்றம் செய்து, தவறான விதத்தில் குழப்பமான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இதற்குப் பின்னால் ஒரு சிறிய குழு செயற்படுகிறது. அந்தக் குழுவின் அரசியல் உள் நோக்கம் மிகக் கீழ்த்தரமானது. வதந்தி எப்போதும் தீமைகளையே விளைவிப்பதுண்டு. அது ஒரு தொற்றுநோய் என்பது சமூக வரலாற்று அனுபவம்.

(““கேரள டயறீஸ்“” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கு கிழக்கு சமூக பொருளாதார வளர்ச்சியின் சிகரங்களை தொடமுடியும்.

சிறு பொறி பெரும் காட்டு தீயை மூட்டும். இலங்கை இந்தியாவின் வளர்ச்சியடைந்த தென் இந்திய மாநிலங்களுக்கு அருகாமையில் இருக்கிறது. இந்த வளர்ச்சியும் இலங்கையின் சமூக பொருளாதார வளர்ச்சியும் நெருங்கிய தொடர்பு பட்டவை என்பதே புவி பொருளாதார அரசியல் யதார்தமாகும். 1.5 மில்லியன் புலம் பெயர் மக்களுடனான சமூக பொருளாதார தொடர்புகள் அதிகமாகும். இங்கு உற்பத்தி சந்தை நடவடிக்கைகள் வேலைவாய்ப்புக்கள். கல்வியில் மறுமலர்ச்சி வாய்ப்புக்கள் கொட்டிக் கிடக்கின்றன. (“வடக்கு கிழக்கு சமூக பொருளாதார வளர்ச்சியின் சிகரங்களை தொடமுடியும்.” தொடர்ந்து வாசிக்க…)

வன்னியிலும் வாகரையிலும் வாடும் மக்களுக்கு ஆதரவளிப்பது யார்?

(எஸ்.கருணாகரன்)

மாவை சேனாதிராஜா தலைமையில், தமிழரசுக்கட்சியின் அணியொன்று கனடாவுக்குப் பயணமாகியுள்ளது. இந்த அணியில், நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா, வட மாகாணசபை உறுப்பினர் ஆனோல்ட், தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான துரைராஜசிங்கம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கனடாவில் உள்ள தமிழரசுக் கட்சி அனுதாபிகள், அபிமானிகள், ஆதரவாளர்கள் போன்றவர்களை, இந்த அணியினர் சந்திக்கச் செல்வதாகவே, அதன் நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(“வன்னியிலும் வாகரையிலும் வாடும் மக்களுக்கு ஆதரவளிப்பது யார்?” தொடர்ந்து வாசிக்க…)

மண்டை தீவு கடல் இழப்பு!  சோகங்களுடன் நானும் இணைந்து கொள்கின்றேன்.

(சாகரன்)

மண்டை தீவுக்கடலில் மூழ்கி மரணித்த அந்த இளைஞர்கள் அனைவருக்கும் எனது அஞ்சலிகள். மிகுந்த வருத்தம் நிறைந்த நிகழ்வு சிறப்பாக அவர்தம் பெற்றோரின் கவலையை நீக்க எம்மிடம் வார்த்தைகள் இல்லை. தவிர்த்திருக்கக் கூடிய இழப்புக்கள். நீரில் மூழ்காதிருக்கும் பாதுகாப்பு கவசங்களை இவர்கள் அணித்திருக்கவில்லை என்பதுவும் எவ்வாறு இந்த களியாட்ட விபத்து நிகழ்ந்திருக்கின்றது என்பதுவும் இங்கு கேள்விகளாகவும் கண்டனங்களாகவும் எம் முன் இருக்கின்றன. உல்லாசப் பயணத்திற்கு அழைத்துச் சென்றவர்களிடம் நீச்சல் ‘நன்கு’ தெரிந்தவர் இல்லையா என்ற கேள்விகளும் பிரதான இடத்தைப் பிடிக்கின்றது. நடக்க தெரிந்த மனிதன் மற்றய உயிரினங்கள் போல் பழகாமலே நீந்தும் இயல்பைக் கொண்டிருப்பதில்லை என்பதினால் நீச்சல் என்பது இங்கு மனிதர்களுக்கு அடிப்படையாக தெரிந்திருக்க வேண்டியதொன்றாகின்றது.

(“மண்டை தீவு கடல் இழப்பு!  சோகங்களுடன் நானும் இணைந்து கொள்கின்றேன்.” தொடர்ந்து வாசிக்க…)

பட்டும் திருந்தவில்லை

1952 இல் சேர்.யோன்.கொத்தலாவல பிரதமராகிய பின் யாழ்ப்பாணம் வந்தார்.இவருக்கு யாழ் ம்த்திய கல்லூரி மைதானத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்த வரவேற்பில் அமிர்தலிங்கம் தலைமையில் கறுப்புக்கொடி காட்டப்பட்டது. இதன் மூலம் அமிர்தலிங்கம் பிரபலமானார்.இருந்தாலும் இந்த வரவேற்பை கொத்தலாவல பொருட்படுத்தவில்லை. அதன் பின் தீவுப்பகுதியில் கொழும்பு தமிழ் வர்த்தகர்களால் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்த வரவேற்பைக் கண்டு மகிழந்த கொத்தலாவல உணர்ச்சிவசப்பட்டு தமிழுக்கு ஒரு சிறந்த இடத்தை வழங்க ஏற்பாடுசெய்வதாக கூறினார்.இந்த உணர்ச்சிவசப்பட்டு சொன்ன வார்த்தை இலங்கையில் அரசியலையும் அரசியற்போக்கையும் சின்னாபின்னமாக்கியது.

(“பட்டும் திருந்தவில்லை” தொடர்ந்து வாசிக்க…)

பிக்பொஸ் பேரலை?! ஈழப் போராளிகள் நினைவலை!?

அண்மையில் தாயகம் சென்று திரும்பிய இருவர் பேரூந்தில் எனது முன் ஆசனத்தில் இருந்து பேசிய விடயம் என் காதுவரை கேட்டது. கன காலத்துக்கு பின் இப்போதுதான் சொந்த மண்ணுக்கு செல்லும் பாக்கியம் கிடைத்தது பற்றி ஒரு நிமிடம் மட்டும் பேசியவர்கள் ஓவியா பக்கம் பாதை மாறினார்கள். அந்த பிள்ளை போனபின் பிக்பொஸ் சூடு தணிஞ்சு போச்சு என்றார் ஒருவர். மற்றவரோ எண்டாலும் சுஜா அவரை ஈடு செய்வார் என்றார். பதினைந்து நிமிட பயணத்தில் பதின்நான்கு நிமிடங்களும் பிக்பொஸ் பற்றிய பேச்சுத்தான் தொடர்ந்தது. தாயக பயணம் பற்றிய பேச்சை பாதை மாற்றியது பிக்பொஸ்.

(“பிக்பொஸ் பேரலை?! ஈழப் போராளிகள் நினைவலை!?” தொடர்ந்து வாசிக்க…)

ஹக்கீமிடம் பணம் வாங்கியவர்களுக்கே குமாரிக்கு நேர்ந்த அநியாயம் குப்பை, பழைய கதை

(தமிழ் மிரர் பத்திரிகை ஆசிரியரின் தான்தோன்றித்தனமான அசிங்க தலையங்கத்துக்கு பதில்)

ஸ்ரீலங்கா  முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சரும், தூய முஸ்லிம்  காங்கிரஸ்செயற்பாட்டளருமான பஷீர் சேகுதாவூத் அவரின் பேஸ்புக்கில்”இறைவன் நாடிவிட்டான்” என்ற தலைப்பில் வெளியிட்ட ஒருபதிவைஆதராமாக கொண்டு தமிழ் மிரர் பத்திரிகையின் ஆசிரியரான நீங்கள் உங்களது பத்திரிகையில் அவரை தாக்க வேண்டும் என்ற ஒரேநோக்கத்தில் ஆசிரியர் தலையங்கம் தீட்டியிருக்கிறீர்கள்.

(“ஹக்கீமிடம் பணம் வாங்கியவர்களுக்கே குமாரிக்கு நேர்ந்த அநியாயம் குப்பை, பழைய கதை” தொடர்ந்து வாசிக்க…)

பிலிப்பைன்ஸ் – சீன பொருளாதார உறவு

(ஜனகன் முத்துக்குமார்)

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிலிப்பைன்ஸ், பிராந்திய வல்லரசான சீனாவின் தென் சீனக் கடல் எல்லை தொடர்பான ஆக்கிரமிப்புக்கு எதிராக, டேவிட் எதிர் கோலியாத் பாணியிலான வழக்கைதத் தொடுத்திருந்த போதிலும், பிலிப்பைன்ஸ் – சீன உறவானது அண்மைக்காலத்தில் சுமூகமான நிலையை அடைந்துள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது. அவ்வாறாக பிலிப்பைன்ஸ் தனது எதிர்ப்புக் கொள்கைகளைத் தளர்த்துவதற்கும் சீனாவுடன் இணைந்து போதலுக்கும், நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதில் சீனாவுடனான பொருளாதாரத் தொடர்புகளின் வகிபாகம் முக்கியமென பிலிப்பைன்ஸ் உணர்ந்தமையே காரணமாகும் என, அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

(“பிலிப்பைன்ஸ் – சீன பொருளாதார உறவு” தொடர்ந்து வாசிக்க…)