பற்குணம் (பகுதி 111 )

இதை இடைச் செருகலாக எழுதுகிறேன்,

எனது சகோதரன் ஒருவர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அங்கத்தவர்.இவர் ஒருவர் மட்டுமே அந்தகர கட்சியின் செயற்பாட்டாளர் .இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பில் தென்மராட்சி பிரதேச சபை உறுப்பினராக இருக்கிறார்.

இவர் 1982 இல் திருமணம் முடித்தார்.இந்த திருமணத்துக்கு சாவகச்சேரி பாராளுமன்ற உறுப்பினர் வி.என்.நவரத்தினத்துக்கும் அழைப்பு வைத்தார்.ஆனால் அவர் வரவில்லை.இதுஅவருக்கு மனக்கஷ்டத்தைக் கொடுத்தது.ஆனாலும் நவரத்தினத்தை பகைக்க விரும்பவில்லை.இவரின் அரசியல்போக்கு அப்படி இருந்தாலும் கொஞ்சம் வெளிப்படையாக பேசக்கூடியவர்.

ஒருநாள் தருணம் பார்த்து நவரத்தினத்திடம் தனது திருமணத்துக்கு ஏன் வரவில்லை என வினாவினார்.அதைக் கேட்ட நவரத்தினம் சிரித்துக்கொண்டே ஒரு கடிதத்தை பைலிருந்து எடுத்து என் சகோதரனிடம் கொடுத்து படிக்கக் கொடுத்தாராம்.அதைப் படித்துவிட்டு வந்து சமாதானமான என் சகோதரன் சிரித்துக்கொண்டே சொன்னார் அண்ணை நிற்கிற இடத்தில் எம்.பி வரமாட்டார்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இக் கடிதம் பற்குணத்தால் பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்தில் எழுதப்பட்டது.அதற்குப் பதிலளிக்காமல் ஆனால் பத்திரமாக அவ்வளவு காலம் வைத்திருக்கிறார்.அன்றைய நிலையில் நான் இதைப்பற்றி யோசிக்கவில்லை.

இது 1966-69 காலத்தில் எழுதியிருப்பார் என நினைக்கிறேன்.இக்காலத்தில் தமிழரசுக்கட்சியின் எம்.பிகளான நவரத்தினம்,அமிர்தலிங்கம்,செல்வநாயகம் ஆகியவர்களின் தொகுதிகளிலேயே தீண்டாமைக்கு எதிரான போராட்டம் உக்கிரமாக நடந்தது.இதன, காரணமாகவே தமிழரசுக்,கட,சியை அதிகம் வெறுத்தார்.அவர்கள் காட்டிய மௌனம் சந்தர்பவாதம் அப்படி.அதன் காரணமாக நவரத்தினத்தை கேள்வி கேட்டு எழுதியிருப்பார் என நினைக்கிறேன்.அதுவும் அவ்வளவு காலமும் பத்திரப்படுத்தி வைக்குமளவுக்கு முக்கியம் என்ன? அந்த கடிதம் பற்றி நானும் பற்குணத்திடம் விசாரிக்கத் தவறிவிட்டேன்.

ஆனால் பற்குணம் திருமண வீட்டுக்கு வந்தவரிடம் அரசியல் பேசமாட்டார்.நவரத்தினத்தின் பயம் தேவையற்றது.மேலும் போகவிட்டு புறம் சொல்லும் குணம்கூட அவரிடம் இல்லை.அப்படி யாராவது சொல்வதும் பிடிக்காது.யாரெனினும் நேரே சொல்லவேண்டும் என்பார்.

(தொடரும்….)
(விஜய பாஸ்கரன்)

வரவேற்போம்.

கேப்பாபுலவு மக்கள் போராட்டம் பிலகுடியிருப்பு (பகுதியாகவோ முழுமையாகவோ) காணிகளை விடுவிப்பதில் வெற்றிகண்டுள்ளது என்பது மகிழ்ச்சி தருகிறது. மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கதைசொல்கிற அரசியல் வாதிகளினது பலத்தை விடவும் தமது பலத்தை நம்பியிருக்கிறார்கள் இந்த மக்கள்.

(“வரவேற்போம்.” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் (பகுதி 110 )

பற்குணம் மறுநாள் மதியம் போல என்னைக் காணவந்தார்.என்ன வரமாட்டேன் என்றாய் இப்போது வந்திருக்கிறீர்கள் என்றேன்.அந்த விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.இந்திய தூதரக அதிகாரி ஒருவர் அமிர்தலிங்கத்தையும் அந்த கட்சியினரையும் சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார்.அது சம்பந்தமான கலந்துரையாடல்கள் நடத்த வேண்டி இருப்பதால் ரத்து செய்துவிட்டனர் என்றார்.

(“பற்குணம் (பகுதி 110 )” தொடர்ந்து வாசிக்க…)

முன்னாள் போராளிகள் ஐக்கியப்பட்டு தமிழ் மக்களுக்கான தலமையை தமிழரசுக் கட்சிக்கு மாற்றீடாக கொடுப்பார்களா….?

(சாகரன்)

டிரிஎன்ஏ(DTNA), தமிழ் மக்கள் அரங்கம் போன்ற முயற்சிகள் நடைபெற்றதையும் இங்கு கவனத்தில் எடுக்கவேண்டும். இவை பலமான ஐக்கிய முன்னணிகளாக முன்னேறாதற்குரிய காரணங்களையும் இங்கு நாம் இதயசுத்தியுடன் ஆராயவேண்டும் இவை பெரும்பாலும் முன்னாள் விடுதலை அமைப்புக்களின் ஆளுமைக்குள் வளர்ந்து வரக் கூடிய வாய்ப்புக்கள் இருந்தன. அண்மையில் நடைபெற்ற தோழமை தின நிகழ்வுகளும் இதற்கான சில சுழிகளே. ஏன் 2009 மே இற்கு பின்னரான காலகட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலை அமைப்புக்களின் ஆளுமைக்குள் வருவதற்கானவாய்புக்கள் நிறையவே இருந்தன.

(“முன்னாள் போராளிகள் ஐக்கியப்பட்டு தமிழ் மக்களுக்கான தலமையை தமிழரசுக் கட்சிக்கு மாற்றீடாக கொடுப்பார்களா….?” தொடர்ந்து வாசிக்க…)

ஈழத்துப் பாடகர் சாந்தன்

ஈழத்துப் பாடகர் சாந்தன் அவர்கள், காலமான செய்தி கவலை தந்தது. தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் பிரச்சாரப் பாடகராகவே அவரை நான் அறிந்திருந்தேன். அவரின் குரலில் வெளிவந்த எந்தவொரு பிரச்சார பாடல்களையும் , நான் முழுமையாகக் கேட்டவன் அல்ல. அவரின் குரல் என்னை கவர்ந்திருந்தபோதிலும், பாடல்களின் பிரச்சார சொல்லாடல்கள் என்னை அந்நியப்படுத்திக் கொண்டே இருந்தது.

(“ஈழத்துப் பாடகர் சாந்தன்” தொடர்ந்து வாசிக்க…)

சபதம் புகழ் சசிகலாவும் சயனைட் மல்லிகாவும்!

(எஸ். ஹமீத்)

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை செல்லும் முன்னம் ஜெயலலிதாவின் சமாதியில் ஆக்ரோஷமாகக் கையால் அடித்துச் சபதம் செய்து, அஞ்சா நெஞ்சினளாகத் தன்னைக் காட்டிக் கொண்ட சசிகலாவை, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் நடுநடுங்கச் செய்து கொண்டிருந்தவர் வேறு யாருமல்ல. ஆறு கொலைகளைச் செய்துவிட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் சயனைடு மல்லிகாதான். அதுசரி…யார் இந்தச் சயனைட் மல்லிகா…?

(“சபதம் புகழ் சசிகலாவும் சயனைட் மல்லிகாவும்!” தொடர்ந்து வாசிக்க…)

யாழ் பல்கலைக்கழக துணைவேந்தருக்கான 3 விண்ணப்பதாரிகள்

யாழ் பல்கலைக்கழக துணைவேந்தருக்கான 3 விண்ணப்பதாரிகளாக தெரிவுசெய்யப்பட்டு
சனாதிபதியின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ள 3 வரில் அதிக வாக்குபெற்றவரான சற்குணராசா பின்வரும் காரணங்களால் ஆபத்தானவர்.
1. சிங்களமாணவர் மீதான தாக்குதலுக்கு காரணமானவர்களில் ஒருவர்.
2. சாதிவெறியும் மதவெறியுமுடையவர்.
3. ஊழல் நிறைந்தவர். திறமையான தனதுமாணவர்களை பழிவாங்குபவர். (“யாழ் பல்கலைக்கழக துணைவேந்தருக்கான 3 விண்ணப்பதாரிகள்” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் (பகுதி 109 )

1989 பொது தேர்த்லில் ஈ.பி.ஆர் எல் எப் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து அதன் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது.இந்த தேர்தலில் இவர்களை வெல்ல விடாமல் தடுக்க புலிகள் முடிவு செய்தனர்.எனினும் தோல்வி பயம் காரணமாக தமது ஆதரவாளர்களை களம் இறக்கப் பயந்தனர்.எனவே அவர்களின் பினாமிகளாக ஈரோஸ் அமைப்பை களம் இறக்கினார்கள்.

(“பற்குணம் (பகுதி 109 )” தொடர்ந்து வாசிக்க…)

169 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்ட சாதனை மனிதர் ‘நெல்’ ஜெயராமன்

தமிழகம் முழுவதும் கடந்த 15 ஆண்டுகளாக பயணம் செய்து, 169 அபூர்வ நெல் வகைகளை மீட்டெடுத்த ‘நெல்’ ஜெயராமன், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகிறார். 1,000 ஆண்டுகள் பழமையும், பாரம்பரியமும் கொண்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் வகைகள் நம் முன்னோரிடம் புழக்கத்தில் இருந்ததாகக் கூறப் படுகிறது. காலனி ஆதிக்க காலம் தொடங்கியதில் இருந்து, நமது பாரம்பரிய நெல் வகைகள் படிப் படியாக மறைந்தன. குறிப்பாக கடந்த 50 ஆண்டுகளில் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட பசுமைப் புரட்சியால்தான் பாரம்பரிய நெல் ரகங்கள் பெருமளவு அழிந்ததாக சூழலியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

(“169 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்ட சாதனை மனிதர் ‘நெல்’ ஜெயராமன்” தொடர்ந்து வாசிக்க…)

வரலாற்று முரண்- துயர்

உலகம் முழுவதும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களிடம் இருந்து தீவிரமான கண்டனங்கள் எழுந்த காலத்தில1980 களின் நடுப்பகுதி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் எது வித மனக் கிலேசமும் குற்ற உணர்ச்சியும் இன்றி தண்டனை வழங்கியவர் இன்று தமிழர்தலைவர்??
பயங்கரவாத தடைச்சட்டத்தின் மரணித்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் கொடூரமான சித்திரவதைகளை அனுபவித்தவர்கள் பெரும்பாலானோர் இலங்கை- இந்தியா உலகம் முழுவதும மனஅழுத்தங்களுடன் வாழ்கிறார்கள். அலைகிறார்கள். மனித உரிமை பற்றிய அவரின் போதனைகளும் ஆரவாரமும் தாங்க முடியவில்லை. , நாடகபாணி கபடத்தனம் என்பதில் பகுத்தறிவுள்ள ஜென்மங்கள் துளியளவு சந்தேகம் கொள்ளமாட்டார்கள். தமிழர் அரசியலும் மனித உரிமையும் அவருக்கு ஓய்வூதியகால பொழுது போக்கு. அவரை தமிழ் கடவுள் முருகனாக துதிக்கும் தமிழர்களின் மூடநம்பிக்கையை என்னென்று அழைப்பது???
“விதியே விதியே தமிழ் சாதியை என்செய நினைத்தாய்”- பாரதி