(க. அகரன்)
நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் வர்த்தகர்கள், பாரபட்சமின்றி சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் வவுனியா மாவட்டப் பொறுப்பதிகாரி ச.நிலாந்தன் தெரிவித்தார்.
The Formula
ஜனாதிபதிக்கு கிடைக்கப்பெற்றுள்ள ஆலோசனைகளுக்கமைய, 2020 மே மாதம் 28ஆம் திகதியோ அல்லது அதற்கு முன்னரோ, பொதுத் தேர்தலை நடத்த முடியுமென்று, தற்போதைய நிலையில் குறிப்பிட முடியாதெனத் தெரிவித்துள்ள ஜனாதிபதியின் செயலாளர், தேர்தலுக்கான திகதியைக் குறிக்கும் பொறுப்பு, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கே உள்ளதென்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கோ அல்லது பொறுப்புகளுக்கோ, ஜனாதிபதியால் குறுக்கிட முடியாதென்றும் தெரிவித்துள்ளார்.
வீடுகளில் இலகுவில் பெற்றுக் கொள்ளக் கூடிய பொருள்களைக் கொண்டு, நோய் எதிர்ப்புச் சக்திகளைப் பெருக்கிக் கொள்வதன் மூலம் கொரோனா போன்ற தொற்று நோய்களில் இருந்து எம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும் என, நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி தொற்றா நோய் வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் கே.எல்.எம்.நக்பர் தெரிவித்தார்.
ஐக்கிய அமெரிக்காவில் இவ்வாண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான போட்டியிலிருந்து ஐக்கிய அமெரிக்காவின் செனட்டரான பேர்ணி சாண்டர்ஸ் இன்று விலகியுள்ளார். அந்தவகையில், இவ்வாண்டு நவம்பர் மாதம் மூன்றாம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை, ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் உப ஜனாதிபதி ஜோ பைடன் எதிர்கொள்வார் எனக் கருதப்படுகிறது.
இலங்கையிலிருக்கும் சகலருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுப் பரிசோதனையை முன்னெடுப்பதற்கு, அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில், ஏற்றுக்கொள்ளக்கூடிய முறைமையைத் தயாரிப்பதற்காக, பிரதிச் சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அமல் ஹர்ஷ டீ சில்வா தலைமையிலான நால்வர் அடங்கிய குழுவொன்றையும் சுகாதார அமைச்சு நியமித்துள்ளது.