Category: கட்டுரைகள்
Articles
புத்தாக்க ஆய்வரங்கு 2018: மனிதர்களைத் தேடி அலைதல்
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, உலகம் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்குகிறது. ஒருபுறம் புவிவெப்பமடைதலின் தாக்கங்களை, எல்லோரும் உணர்கிறோம். இன்னொருபுறம், நான்காவது தொழிற்புரட்சி பற்றிய நம்பிக்கைகள், புதிய சவால்களை உருவாக்கியுள்ளன. இவையிரண்டும், புத்தாக்கத்தின் தேவையை முன்னிறுத்துகின்ற அதேவேளை, புத்தாக்கம் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்துவிடும் சர்வரோக நிவாரணி அல்ல என்பதும், உணரப்பட வேண்டும்.
(“புத்தாக்க ஆய்வரங்கு 2018: மனிதர்களைத் தேடி அலைதல்” தொடர்ந்து வாசிக்க…)
The full story of why MbS might have wanted Jamal Khashoggi dead
This was not a straightforward snatch and grab attempt. The officers sent to Istanbul to deal with Jamal Khashoggi were given clear instructions; return with Khashoggi alive or kill him there. That order did not come from any senior general or bureaucrat, but straight from the de-facto head of the largest Royal family in the world that controls the world’s largest proven oil reserves.
(“The full story of why MbS might have wanted Jamal Khashoggi dead” தொடர்ந்து வாசிக்க…)
உணர்ச்சி அரசியலை கைவிட்டு அறிவுமைய அரசியலுக்கு வர வேண்டு, நேர்காணல் பத்திரிக்கை வெளியீடு
எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த…..!(Part 9)
நான் இலங்கையில் பிறந்தவனாக இருந்தாலும் இதுவரை வாழ்ந்த எனது வாழ்வுக்காலத்தில் கொழும்பு ஐ கடந்து இலங்கையின் தென்பகுதியின் எந்த பகுதிக்கும் சென்றவன் அல்ல. இதற்கான விருப்பு என்னிடம் இருந்தாலும் இதற்கான வாய்ப்புக்கள் ஏற்படவில்லை. இந்த பிரதேச மக்கள் பற்றி தகவல்களை வாசிப்புக்கள் ஊடு மட்டும் அறிந்திருந்தேன். இலங்கையின் ஏனைய சிறுபான்மை மக்களுடன் இவர்களுக்கான தொடர்புகள் குறைவாக இருந்ததினால் பேரினவாதத்தின் செல்வாக்கு இவர்களிடத்து அதிகம் காணப்படுவதாக ஒரு பொதுப் பார்வை இருக்கின்றது. இதில் உண்மைகளும் உண்டு. அரசியல்வாதிகள் இதனை தமது பாராளுமன்ற வெற்றிகளுக்காக பாவித்துக் கொண்டனர். ஆனால் தமிழ் பேசும் மக்களின் உரிமைப் போராட்டமும் சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்து அரசியல் செயற்பாடுகளும் ஜேவிபி இனரின் செயற்பாடுகளும் இந்தப்பகுதி மக்களிடம் இருந்து பேரினவாத சிந்தனைகளை குறைத்திருக்கின்றது என்ற எனது பார்வைக்கு வலுச் சேர்பது போல் எனது இலங்கையின் தென்பகுதிக்கான பயண அனுபவம் எனக்கு தந்திருக்கின்றது.
(“எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த…..!(Part 9)” தொடர்ந்து வாசிக்க…)
தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் பத்திரிகை அறிக்கை
தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி
294, கண்டி வீதி, யாழ்ப்பாணம்
அ. வரதராஜா பெருமாள்
கட்சி அமைப்புச்செயலாளர்.
———————————————————-
பத்திரிகைகளுக்கான
அறிக்கை 15-10-2018
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தாம் வாக்குறுதி அளித்து பொறுப்பேற்றுள்ளபடி அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். (“தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் பத்திரிகை அறிக்கை” தொடர்ந்து வாசிக்க…)
ஊடகங்களுக்கான அறிக்கை – 12-10-2018
ஐ.அமெரிக்க – சீன முரண்பாடு
(ஜனகன் முத்துக்குமார்)
ஐ.அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பயோவின், பெய்ஜிங்குக்கான அண்மைய (ஒக்டோபர் 8) விஜயம், குறைநிரப்பு விடயமாகவே பார்க்கப்படுகின்றது. ஐ.அமெரிக்க உப ஜனாதிபதி மைக் பென்ஸ், ஐ.அமெரிக்கத் தேர்தலில் சீனா தலையீடு செய்ய முற்படுகின்றது என வெளிப்படையாகக் குற்றஞ்சாட்டியமையைத் தொடர்ந்து, சீனா அதன் அதிகாரபூர்வமான நிகழ்ச்சிநிரல்களில், ஐ.அமெரிக்காவை, சர்வதேச நிரல்களில் ஐ.அமெரிக்காவின் தலைமைத்துவத்தை கேள்விக்குட்படுத்த தொடங்கிய நிலையிலேயே, குறித்த விஜயம் முக்கியம் பெற்றிருந்தது.
மகாவலி கங்கையும் வடக்கு மக்களும்
(சுப்பராயன் )
மகாவலி கங்கையை வடக்கே (முல்லைத்தீவு மாவட்டத்துக்கு) கொண்டு வரும் அரசாங்கத்தின் முயற்சிக்கு அங்கு வாழும் தமிழ் மக்களிடமிருந்து (அல்லது அரசியல் செயற்பாட்டாளர்களிடமிருந்து) கடும் எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது. இந்த எதிர்ப்பு நியாயமானதா இல்லையா என்பதை ஆராய்வதற்கு முன்னர், மகாவலி கங்கையை வடக்கே திருப்பும் முயற்சியின் வரலாற்றைச் சுருக்கமாகத் தன்னும் பார்த்துவிடுவது பயனுள்ளதாக இருக்கும்.
தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும்(தொடர் – 12)
(Thiruchchelvam Kathiravelippillai)
கிழக்கு மாகாணத்தில் தமிழ்பேசும் மக்கள் உறவு விரிசலடைவதற்கான நடவடிக்கைகள் ஆட்சியாளர்களினால் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் போது தமிழ் விடுதலை இயக்கங்களின் சில நடவடிக்கைகளும் அதற்குத் துணை செய்தன.
விடுதலை இயக்கங்கள் தமது நாளாந்த செலவுகளிற்கான நிதியினை மக்களிடமிருந்தே பெற்றனர். தமிழ் மக்கள் முஸ்லிம் மக்கள் என்ற பேதமின்றி ஆரம்பத்தில் செல்வந்தர்களை அழைத்து அவர்களிடம் பண்பாகப் பேசி நிதியினைப் பெற்றனர். தொடர்ச்சியாக கொடுக்க முடியாது என்ற நிலை ஏற்பட்ட போது அச்சுறுத்தல் விடுத்தல், குடும்ப உறுப்பினர்களைக் கடத்துதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் நிதியினைப் பெற்றனர். தமிழ் மக்களிடத்தில் இந்நடவடிக்கை விசனத்தை ஏற்படுத்தினாலும் நமது பிள்ளைகள் என்ற எண்ணம் மேலோங்கியிருந்ததனால் அது பெரிதான விடயமாகப் பேசப்படவில்லை. ஆனால் முஸ்லிம் மக்களிடம் இந்நடவடிக்கை தமிழ் மக்கள் மீது வெறுப்பினை ஏற்படுத்துகின்ற நடவடிக்கையாக மாறியது. இந்திய அமைதி காக்கும் படை இலங்கைக்கு வரும் வரையில் தமிழ் இயக்கங்களின் நிதியீட்ட நடவடிக்கை கப்பம் வாங்குகின்ற செயற்பாடாக முஸ்லிம் மக்களால் பார்க்கப்பட்டது.
(“தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும்(தொடர் – 12)” தொடர்ந்து வாசிக்க…)