50 ஆண்டுகளுக்குப் பின் பூமியின் சுழற்சி வேகத்தில் மாற்றம்

பூமி 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட வேகமாக சுழன்று கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், பூமி 24 மணி நேரத்திற்குள் தனது ஒருநாள் சுழற்சியை முடித்துள்ளது. பூமி தன் வட்டப்பாதையில் சுழன்று கொண்டு சூரியனையும் 365 நாட்களில் சுற்றி வருகிறது என்பதே அறிவியல் உண்மை. 

ஆட்சியைப் பிடிக்கும் மகுட வாசகம் ‘சிஸ்டம் சேஞ்ச்’

(என். கே அஷோக்பரன்)

‘சிஸ்டம் சேஞ்ச்’  (கட்டமைப்பு மாற்றம்) என்ற சொற்றொடர், சஜித் பிரேமதாஸ முதல் அநுர குமார திஸாநாயக்க வரை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியை எதிர்க்கும் கட்சிகள் அனைத்தும், உச்சரிக்கும் மந்திரமாக மாறியுள்ளது. 

தேசிய அரசாங்கமும் தமிழர் தரப்பும்

(லக்ஸ்மன்)

உட்கட்சி முரண்பாடுகளோடு கொள்கைப்பிடிப்போடும் கட்சிகளை நடத்திச் செல்வதென்பது மிகவும் சிக்கலான விடயமே. இதில் உட்கட்சி ஜனநாயகம் பெரும் குழப்பமாகவே இருந்து கொண்டிருக்கிறது. இதில் நம்முடைய நாடும் அகப்பட்டே இருக்கிறது.

சர்வதேச நாணய நிதியம்: தரித்திரத்தின் சரித்திரம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை, இன்னொருமுறை கையேந்துவது என்று முடிவாகி, நீண்ட காலமாகிவிட்டது. எப்போது அக்கடன் கிடைக்கும் என்பதே, இப்போதைய பிரச்சினை. ஊடகங்களும் பொருளியல் அறிஞர்களும் அரசியல் விமர்சகர்களும் எழுப்பும் கேள்வி அதுவே! 

சர்ச்சைக்குரிய சீன கப்பல் குறித்து புதிய செய்தி

சீன ஆராய்ச்சிக் கப்பலான yuan wang -5 இன்று (22) மாலை 4.00 மணிக்கு மீண்டும் சீனாவுக்குப் புறப்பட உள்ளது. துறைமுக அதிகார சபையின் துறைமுக அதிகாரி நிர்மல் சில்வா இதை தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய சீன உயர் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்புக் கப்பல் கடந்த 16ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது.
  செயற்கைக்கோள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை கண்காணிப்பு மற்றும் ஆதரவு தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்ட யுவான் வாங்-கிளாஸ் கப்பல் அந்த தொழில்நுட்பத்தின் மூன்றாம் தலைமுறையை குறிக்கிறது.

ரங்கன லக்மால் கைது

சோஷலிச மாணவர் ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளர் ரங்கன லக்மால் தேவப்பிரிய கொம்பனித்தெரு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கோட்டை பொலிஸாரிடம் அழைத்துச் செல்லப்பட்டார். பல்வேறு இடங்களில்  போராட்டத்தில் ஈடுபட்டு தொண்டர்கள் இன்று பொலிஸாரிடம் வந்து சரணடைந்து வாக்குமூலம் அளித்தனர். இதேவேளை இன்று அடக்குமுறைக்கு எதிராக சில இடங்களில் போராட்டங்களும் நடந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரச வன்முறையைக் கண்டித்து கண்டனப் பொதுக்கூட்டம்.

இலங்கை அரச வன்முறையைக் கண்டித்து கண்டனப் பொதுக்கூட்டம்.
ශ්‍රී ලංකාවේ රාජ්‍ය ප්‍රචණ්ඩත්වයට එරෙහිව මහජන රැස්වීමක්.
A Public Meeting Protesting against State violence in Sri Lanka.

பயங்கரவாத தடைச் சட்டம், அவசரகாலச் சட்டம் என்பனவற்றை உடனடியாக நீக்கு!
ත්‍රස්තවාදය වැළැක්වීමේ පනත සහ හදිසි නීතිය වහා අහෝසි කරනු!
Abolish the Prevention of Terrorism act and the Emergency act Immediately!

தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அமைதி போராட்டக்காரர்களையும் விடுதலை செய்!!
අත්අඩංගුවට ගත් සියලුම සාමකාමී විරෝධතාකරුවන් නිදහස් කරනු!!
Release all detained peaceful Protestors!!

அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்!!!
සියලුම දේශපාලන සිරකරුවන් නිදහස් කරනු !!!
Release all Political Prisoners!!!

அரகலய போராட்டகாரர்களிற்கு எமது ஒன்றுபட்ட ஆதரவு
අරගලයට සවියක්වීමට සියලුදෙනාම එක්වෙමු
Unite in Solidarity to support the Aragalaiya

On Saturday August 20th. 5.30PM-9:00PM

At Scarborough Village CRC

3600 Kingston Road

Scarborough, ON

Welcome all comradely.

Unite in Solidarity to support the Aragalaiya

Equal Rights Movement- Canada (Lanka)

Canadians For Peace Sri Lankan Alliance

Tamil Resources Centre (Thedakam)

Contact:

Jaya: +1 416-275-0070

Ellalan : +1-416-917-0549

Ratnam Ganesh: +1 416-937-5985

தமிழ் அடையாளத்தினூடாக யாழ். உயர்வர்க்க நலன் பேணல்

யாழ். உயர்வர்க்கம் தமது நலன்களுக்காக தமிழ்த் தேசிய உணர்வினையும் அவ்வடையாளத்தினையும் தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வந்துள்ளதை இலங்கை அரசியல் வரலாறு எடுத்துக் காட்டுகின்றது. டொனமூர் அரசியல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போதும் தமது நலனை முன்னிறுத்தியே செயற்பட்டனர். டொனமூர் அரசியல் திட்டம் தமிழ்மக்களுக்கு போதுமானதாக இல்லை என எதிர்த்தவர்களில் ஜீ.ஜீ.பொன்னம்பலம், சேர்.பொன்.இராமநாதன், அ.மகாதேவா போன்றவர்கள் முக்கியமானவர்கள்.

அமெரிக்காவில் மீண்டும் குடியேற கிரீன் கார்டுக்கு கோட்டா விண்ணப்பம்

பதவி விலகக் கோரி பொதுமக்களின் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மீண்டும் அமெரிக்காவுக்குச் சென்று தனது மனைவி மற்றும் மகனுடன் அங்கு குடியேற அமெரிக்க கிரீன் கார்டைப் பெறுவதற்கு காத்திருப்பதாக தெரிய வருகின்றது.