வன்னியிலும் வெள்ளம்…….?

 

தொடர்ச்சியாகப் பெய்து வரும் பெருமழையினால் வன்னிப்பகுதியில் பல இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எங்கள் வீட்டுக்கு வரும்பாதை முழுமையாகச் சேதமடைந்திருக்கிறது. நாங்கள் இப்பொழுது வளவுகளுக்குள்ளால்தான் போய் வருகிறோம். வண்டி, வாகனங்கள் எதுவும் வர முடியாது. இப்படித்தான் பெரும்பாலான உள்வீதிகள் சேதமாகியிருக்கின்றன. பலவும் சேறாகி விட்டன.

(“வன்னியிலும் வெள்ளம்…….?” தொடர்ந்து வாசிக்க…)

இஸ்லாமியரே, உங்க‌ள் தெய்வத்தைத் தெரியாது; உங்களைத் தெரிந்துகொண்டோம்!

 

உதவுவாரில் எங்கே பார்த்தாலும்…
குல்லாக்கள்… SDPI, TNTJ, TMMK
பாதிக்கப்பட்டோரில் யாரைக் கேட்டாலும்…
“பாய்கள்”, “முஸ்லீம்காரவங்க வந்து காப்பாத்துனாங்க”,
“சாய்புகள்தான் சாப்பாடு போட்டுகிட்டிருக்காங்க”.
‘தொடக்கி விட்டுவிட்டார்கள்’ என்றில்லை;
‘இடையில்தான் வந்தார்கள்’ என்றில்லை;
‘திணறி நின்றார்கள்’ என்றில்லை;
‘சோர்ந்து விலகிவிட்டார்கள்’ என்றில்லை!
தங்கள் மனிதத்தை தங்கள் கடவுளுக்கும்,
தங்கள் ஆண்மையை தங்கள் எதிரிகளுக்கும், தங்களுக்கும் உணர்த்திக்கொண்டஇவர்களது அதிரவைக்கும் அற்பணிப்பு!
உடல்நலம், வீடு மறந்து – ஒருவார ஓட்டத்திற்குப் பின்னும்
முகத்தில் அயர்ச்சியில்லை! பேச்சில் கடுப்பில்லை!
இன்னும் ஓயந்ததாயில்லை… – இன்னும்
பெரிதாக அரவணைக்கிற திட்டங்களோடு!
இது போன்ற பேரிடரில் மக்களுக்காக
மக்கள் மத்தியில் திட்டமிட்டே கடவுள்
வைத்துவைத்த இரக்கத்தின் விதைகளின்
விஸ்வரூபங்களாக தெரிகின்றனர்!
இஸ்லாமியரே, உங்க‌ள் தெய்வத்தைத் தெரியாது;
உங்களைத் தெரிந்துகொண்டோம்!
உள்குத்து இல்லாத ஒரு பெரிய நன்றி…
உங்களுக்கும் – உங்களை
இப்படி அனுப்பிய உங்கள் கடவுளுக்கும்!

(REALATIVES உறவுகள்)

மசூர் மௌலானா மறைந்தார் !!!

வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபையில் நான் பெற்ற அறிமுகம் மசூர் மௌலானா. அரசியல் மேடைகளில் அவரை தூர நின்று பார்த்து, அவர் பேசும் தமிழ் கேட்டு கவரப்பட்டு அவர் போல் ஆக வேண்டும் என ஆசைப்பட்ட வேளையில் அரசியல் விபத்தாக அதுவும் நடந்தது. கட்டை பனையில் நெட்டை பனை போல் யாரோ அமரவேண்டிய பேரவை தலைவர் ஆசனத்தில் நான் அமர்ந்த அரசியல் விபத்து 1988 மார்கழி 5ல் நிகழ்ந்தது. ஈபிஆர்எல்எப், ஈஎன்டிஎல்எப் முஸ்லிம் காங்கிரஸ் உடன் அம்பாறையில் யுஎன்பி யில் இருந்து ஒரு சிங்கள பிரதி நிதி மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தார். ஆனால் 1989 மார்ச்சில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் வென்றதால் அந்த அம்பாறை பிரதிநிதியின் இடம் காலியாக அதற்கு யுஎன்பி உறுப்பினராக நியமிக்கப்பட்டவர் தான் மசூர் மௌலானா.

(“மசூர் மௌலானா மறைந்தார் !!!” தொடர்ந்து வாசிக்க…)

பிரான்ஸ் – வெளிநாட்டுக் குடியேறிகளை வெளியேற்ற வேண்டும் எனக் கோரும் நிறவாதக் கட்சி !

வெளிநாட்டுக் குடியேறிகளை வெளியேற்ற வேண்டும் எனக் கோரும் நிறவாதக் கட்சி ! பிரான்சின் பிரதேச சபைத் தேர்தலில் ஏனைய அனைத்துக் கட்சிகளிலும் அதிகமான வாக்குகளைப் பெற்று முதலாவது சுற்றில் வெற்றிபெற்றுள்ளது.  ஜோன் மரி லூ பென் என்ற இரணுவ அதிகாரியால் உருவாக்கப்பட்ட தேசிய முன்னணி தனது ஆரம்பம் முதலே வெளிநாட்டவர்களுக்கும் இடதுசாரித்துவத்திற்கும் எதிரான அடிப்படைவாதக் கருத்துக்களை முன்வைத்து வருகிறது.
தமிழனை கடலுக்குள் தள்ளிக் கொலை செய்யவேண்டும் என சிங்கள பௌத்த வெறியர்களும், தமிழனின் காலில் செருப்புத் தைப்போம் என ஆரம்பித்து சுயநிர்ணைய உரிமைக்கான போரட்டத்தை இனவாதமாக மாற்றிய தமிழ் இனவாதிகளும் இலங்கையின் பின் தங்கிய சூழலில் மட்டும் காணப்படுவதில்லை.

(“பிரான்ஸ் – வெளிநாட்டுக் குடியேறிகளை வெளியேற்ற வேண்டும் எனக் கோரும் நிறவாதக் கட்சி !” தொடர்ந்து வாசிக்க…)

மழை வெள்ளத்தில்….! மக்கள் வெள்ளம்……..!!

(சாகரன்)
(முதற்கண் சென்னையின் வெள்ள அவலங்களில் சிக்கித் தவிக்கும் சகல மக்களின் துயரங்களுடனும் நானும் இணைந்து கொள்கின்றேன். இவர்களுக்கான நிவாரணப் பணிகளில் உள சுத்தியுடன் ஈடுபடும் அனைவரின் அர்பணிப்பு உணர்வு, மனித நேயத்திற்கு தலை வணங்குகின்றேன். ஆனாலும் என் மன உணர்வுகளை இவ்விடத்தில் பதிவிடவே விரும்புகின்றேன்…….!)

(“மழை வெள்ளத்தில்….! மக்கள் வெள்ளம்……..!!” தொடர்ந்து வாசிக்க…)

மதுரை உச்சப்பட்டி முகாம் ஈழத் தமிழ் மக்கள் வெள்ள நிவாரண உதவி வழங்கினர்.

 

தமிழகத்தின் தெற்கே, மதுரை திருமங்கலத்துக்கு அண்மையில் இருக்கும் அகதிகள் முகாம் உச்சப்பட்டி.இந்த முகாமில் அண்ணளவாக 500 குடும்பங்கள் வரை வசித்து வருகிறார்கள்.இவர்கள் இலங்கையில் எற்பட்ட உள்ளாட்டுப் போர் காரணமாக பல கட்டங்களாக இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு இடம்பெயர்ந்தவர்களாகும்.
தமிழகத்தில் எற்பட்ட வெள்ளம் காரணமாக பாதிக்கபட்ட சென்னை மற்றும் கடலூர் மக்களுக்காக இந்த முகாமில் உள்ள தன்னார்வலர்கள் வழிகாட்டுதலில் முகாம் மக்களின் ஒத்துழைப்புடன், சேகரிக்கபட்ட அத்தியாவசியப் பொருட்களை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள வெள்ள நிவாரண சேமிப்பு அலுவலகத்தில் 7.12.15 அன்று முகாம் மக்கள் சார்பாக முகாமில் உள்ள தன்னார்வலர்கள் வழங்கினர். முகாம் மக்கள் இந்த பொருட்கள் சேகரிப்பிகன் போது ஆர்வத்துடன் பொருட்களை வழங்கினர்.எங்களை ஆதரித்த தமிழக மக்களின் இன்னல்களின் நாமும் பங்குகொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் காணப்பட்டதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

O Canada…..What a cabinet:

Minister of Health is a doctor.
Minister of Transport is an astronaut.
Minister of National Defense is a Sikh Veteran.
Minister of Youth is under the age of 45.
Minister of Agriculture and Agri-Food is a former farmer.
Minister of Public Safety and Emergency Preparedness was a Scout.
Minister of Innovation, Science and Economic Development was a financial analyst.
Minister of Finance is a successful businessman.
Minister of Justice was a crown prosecutor and is a First Nations leader.
Minister of Sport, and Persons with Disabilities is a visually impaired Paralympian.
Minister of Fisheries and Oceans, and Canadian Coastguard is Inuit.
Minister of Science is a medical geographer with a PhD.
New titles include
Minister of Immigration, Citizenship and Refugees was an Immigration critic.
There are scientists in the cabinet, and it is made up of 50% women.

மழைப் பேரிடரில் இப்படியும் நடக்கின்றது

’உதவும் நண்பர்களே,
உங்கள் மீது எனக்குள்ள அக்கறையினால் கூறுகிறேன்!’

(ம.செந்தமிழன்)

சென்னைக்குப் பொருட்கள் அனுப்புவோர், புதிதாக எழுந்துள்ள ஒரு சிக்கலை அறிந்துகொள்வதற்காக இதை எழுதுகிறேன். கடலூர் மற்றும் அதன் சுற்றுப் புறச் சாலைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று கொண்டு வாகனங்களை மறித்து, பொருட்களைப் பறிக்கும் சம்பவங்கள் ஏராளமாக நடக்கின்றன. நாங்கள் நேற்று இச்சம்பவங்களை நேரில் கண்டோம். இந்த மக்கள் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல, சாலையோரங்களில் வாழ்பவர்கள்.

(“மழைப் பேரிடரில் இப்படியும் நடக்கின்றது” தொடர்ந்து வாசிக்க…)

பாதுகாப்பாக இருப்பதற்காக வெட்கப்படுகிறேன் – கமலஹாசன்

“ஒரு பாதுகாப்பான அறையில் அமர்ந்து கொண்டு என் சக சென்னை மக்கள் மழையிலும் வெள்ளத்திலும் அவதிப்படுவதை ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
உண்மையில் எனக்கு இப்படி இருப்பது வெட்கமாக இருக்கிறது. தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கே இந்த நிலைமை என்றால் பிற பகுதிகளைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. ஏழைகளுக்கும், நடுத்தர வகுப்பினருக்கும் இது ஒரு கெட்ட கனவு.
பணக்காரர்கள் பிறர் படும் துன்பம் கண்டு வெட்கப்படவேண்டும் . நான் பெரிய பணக்காரன் இல்லையென்றாலும் ஒன்றும் செய்யமுடியாமல் வேடிக்கை பார்ப்பது எனக்கே வெட்கத்தை உண்டாக்கிறது.

(“பாதுகாப்பாக இருப்பதற்காக வெட்கப்படுகிறேன் – கமலஹாசன்” தொடர்ந்து வாசிக்க…)