உண்மை உறங்குகிறது!

(Maniam Shanmugam)

இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அனைவரும் அறிந்த ஒன்று. அதே நேரத்தில் காலத்துக்காலம் உருவான தமிழ் தலைமைகள் தமிழ் மக்களின் விடிவுக்காகப் போராடுவதாகச் சொல்லிக் கொண்டு முதலில் ‘அகிம்சை’ வழியிலும் பின்னர் ஆயுதப் போராட்ட வழியிலும் போராடியும் எவ்வித விடிவும் தமிழ் மக்களுக்குக் கிடைக்கவில்லை. அழிவைத்தான் கொண்டு வந்தார்கள்.