வியட்நாமும் நம்ப மலையகமும்

சுமார் இருபது வருடங்கள் அமெரிக்காவுடன் நடந்த உக்கிரமான போரில் சுமார் 51 லட்சம் மக்களை வியட்நாம் இழந்தது மட்டுமன்றி அந்த கொடூர போரில் போராளிகள் மற்றும் அமெரிக்க படையினர் என 14 லட்சம் பேர் பலியாகினர் இதில் பலியான அமெரிக்க படையினரின் தொகை ஐந்து லட்சத்தை கடந்துள்ளது, ஹோ சி முங் என்ற புரட்சி தலைவனால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் வியட்நாமிய மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் அரங்கேறியது . இப்படி பல இழப்புகளை சந்தித்த இந்த நாடு இன்று சீனாவுக்கு அடுத்த இடத்தில் பொருளாதாரத்தை தன்னகத்தே கொண்டு உலகில் முன்னணி வகிக்கிறது, எமது நாட்டை போன்றே அரிசி, தேயிலை, கோப்பி, ரப்பர் மற்றும் மீன்பிடி என்ற உற்பத்திகளுடன் முன்னேறியுள்ளது. மலை முகடுகளை செதுக்கி சிற்பமாக்கி அங்கே விவசாயம் மேற்கொள்கிறார்கள் அங்கு பாவிக்கப்படும் உரம் இயற்கையாக எடுக்கப்படுவது ரசாயனம் இல்லை, இதை ஏன் சொல்ல வருகிறேன் என்றால் இதே போன்ற வளம் கொண்ட மலையக பகுதிகளில்தான் நாமும் வாழ்கிறோம், நீர்விழ்ச்சிகளை விவசாய நிலம் நோக்கி திசை திருப்பினாலே போதும் தரிசு நிலங்களை விளை நிலமாக்கலாம்.

(வரதன் கிருஸ்ணா)