ஒன்றுபட்டுக் குரல் கொடுத்தால் நீதி கிட்டும்

(சமீஹா சபீர்)

இனங்களுக்கிடையில் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதில் ஊடகங்களின் பங்களிப்பு அளப்பெரியது. இன, மத, மொழியினூடாக ஏற்படும் கருத்து முரண்பாடுகளால் ஏற்படும் மோதல்களின் நியாயத்தன்மையைக் கண்டு, அவற்றைச் சுமூகமாகத் தீர்த்து வைக்கக் கூடிய விதத்திலேயே சமாதான ஊடகம் செயற்பட்டு, தனது வகிபாகத்தை வகிக்கின்றது.