தவறான முடிவுகளால் தள்ளாடும் மக்களும் திவாலாகும் நாடும்

கடந்த காலங்களில் ஆட்சியிலிருந்தவர்களினால் தொடர்ச்சியான மேற்கொள்ளப்பட்ட தவறான முடிவுகளால் நாடு திவாலான நிலைக்கு தள்ளப்பட்டது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளால் இவ்வாறான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தமையினால், அவ்வாறான திறமை மற்றும் போதியளவு அனுபவமற்றவர்களை தெரிவு செய்த மக்களுக்கு நல்ல படிப்பினையை ஏற்படுத்தியிருந்தது.