அக்கறைப்பற்றுக்கான இரவு நேர பஸ் சேவை ஆரம்பம்

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து மாலை 3.00 மணிக்கு மட்டக்களப்பு நோக்கிப் புறப்படும் புளத்திசி கடுகதி புகையிரத்தில் பயணிக்கும் பயணிகளின் நன்மை கருதி மட்டக்களப்பு புகையிரத நிலையத்திலிருந்து அக்கரைப்பற்றுக்கான இரவு நேர பஸ் சேவை (24) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திகாந்தன் போக்குவரத்து அமைச்சரிடம் விடுத்த வேண்டுகோளையடுத்து இலங்கை போக்குவரத்துச் சபையின் மட்டக்களப்பு டிப்போவினால் இச்சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.