“நரேந்திரமோடியின் இந்த நான்காண்டு ஆட்சியில்  15 – 24 வயதுடைய 72 லட்சம் இளைஞர்கள்  வேலை இழப்பு”

– டாக்டர் மன்மோகன் சிங்.

பிரச்சாரத்திற்காக எதையும் பேசும்
இழிவான மனிதரல்ல மன்மோகன் என்பதை
நினைவிற்கொண்டு மேலும் வாசியுங்கள்.

“காங்கிரஸ் தலைமையிலான UPA ஆட்சியில்
விவசாய விளைபொருட்களுக்கு அளிக்கப்பட்ட
குறைந்தபட்ச ஆதரவு விலை 193 சதம்.

பா.ஜ.க ஆட்சியில் அது வெறும்
36 சதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் ஆட்சியைக் காட்டிலும்
மோடி ஆட்சியில்
விவசாயப் பொருட்களின் ஏற்றுமதி
21% குறைந்துள்ளது;
இறக்குமதியோ 60% ஆக அதிகரித்துள்ளது.

2022 இல் விவசாயிகளின் வருவாய்
இரட்டிப்பாகும் என மோடி சொல்லியுள்ளது
சாத்தியமே இல்லை”

எனவும் மன்மோகன் கூறியுள்ளார்.

(அ.மார்க்ஸ்)