பதவியை துறக்கிறார் பசில்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமுன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ, தனது எம்.பி பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்னரே, அவர் தனது தேசியப் பட்டியல் எம்.பி பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் என அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.