கருணாவினால் அல்ல !

 

“அமைதியான புரட்சியை சாத்தியமற்றதாக ஆக்குபவர்கள், வன்முறையான புரட்சியை தவிர்க்கமுடியாததாக ஆக்குகிறார்கள் ” ( ஜான். எப் .கென்னடி )

இலங்கை தமிழ் அரசியலில் தமிழ் மக்கள் பேரவை எனும் அமைப்பின் உருவாக்கம்,அதன் அங்கத்தவர்கள்,நோக்கம் குறித்த சர்ச்சைகள் சூடு பிடித்துள்ளன. அதுவும் இலங்கை அரசும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அதிகாரப் பரவலாக்கம் குறித்து சமிக்ஞைகளை காட்டியுள்ள நேரத்தில், தமிழ் மக்களின்“ஏகபோக “ பிரதிநிதிகள் எனப்படும் தமிழர் கூட்டமைப்பு ஒரு புதிய சவாலை எதிர்கொண்டுள்ளது என்று சொல்லப்படுகிறது.

(“கருணாவினால் அல்ல !” தொடர்ந்து வாசிக்க…)

பிரௌன்ஸ்வீக் தோட்ட லயனில் பாரிய தீ

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஸ்கெலியா பிரவுண்ஸ்வீக் தோட்டத்தில், இன்று சனிக்கிழமை(09) பகல் 12.00 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்தினால் லயன் தொகுதியில் அமைந்திருந்த 16 வீடுகள் சேதமடைந்ததுடன் இந்த வீடுகளில் குடியிருந்த 16 குடும்பங்களை சேர்ந்த 80க்கும் மேற்பட்டவர்கள் தற்காலிகமாக ஆலய மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தீ ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கும் மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் – ஜனாதிபதி

அரசியலமைப்பில் கடந்த காலங்களில் திருத்தங்கள் மற்றும் மாற்றங்களை கொண்டுவந்தபோது, நாட்டில் ஏற்பட்ட நிலைமையை நான் நன்கறிவேன். கலாசார, தொழில்நுட்ப மற்றும் இதர மாற்றங்களுக்கு ஏற்ப அரசியலமைப்பை மாற்றுவதில் எவ்விதமான தவறும் இல்லை என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசியலமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தும் போது குழப்பங்களை ஏற்படுத்தவேண்டாம் என்றும் இனவாதக்குழுகளிடம் கேட்டுக்கொண்டார். நாடாளுமன்றத்தில், இன்று சனிக்கிழமை உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

(“குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் – ஜனாதிபதி” தொடர்ந்து வாசிக்க…)

நாதியற்றவர் நன்றிசொல்வர்! போக்கற்றவர் புண்ணியமாய் போகட்டும் என்பர்!

அப்பப்பா முதல் அப்பா வரை தேடிவைத்தவை எல்லாம் தன் வசம் பத்திரமாய் இருக்கையில், தாம் தேடியதை எல்லாம் முள்ளிவாய்க்காலில் வரை தொலைத்து உடுத்த உடையுடன் நந்திக்கடல் தாண்டி, முள்வேலி முகாமில் முடங்கி, அகதிமுகாம்களில் கடும் வெயிலில் வெந்து, அடை மழையில் சீரழிந்து வாழ்பவர் தமக்கு சொந்தமான நிலம் விடுவிக்கப்படுகிறது என்ற செய்தியை சுமந்து வருபவரை (சுமந்திரனை அல்ல) கைகூப்பி நன்றி சொல்வார். உங்களுக்கு புண்ணியமாய் போகட்டும் எங்கள் நிலங்களை மீட்டு தாருங்கள் என, வந்தவர் போனவர் எல்லோரிடமும் கையேந்தி கதறியவர் அது கிடைக்கும்போது தம் நிலத்தை இதுவரை வைத்திருந்த எவருக்கு எதிராகவும் வாய் சவடால் விடமாட்டார்.

(“நாதியற்றவர் நன்றிசொல்வர்! போக்கற்றவர் புண்ணியமாய் போகட்டும் என்பர்!” தொடர்ந்து வாசிக்க…)

சிங்க லே இயக்கம் வெளிப்பட்டது

ஸ்டிக்கர் இயக்கமாக அண்மையில் தொடங்கப்பட்ட ‘சிங்க லே’ இயக்கத்தினர், புதன்கிழமை (06) மாலை, ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தி, தங்களது இயக்கத்தை வெளிப்படுத்திக்கொண்டனர். யக்கலமுல்லே பாவர தேரரே இந்த சிங்களே இயக்கத்தின் தலைவர் ஆவார். அவர், ஊடகங்களுக்கு பகிரங்கமாக பேசியது இதுவே முதல் தடவையாகும். தமது இயக்கம் ‘சிங்கள ஜாதிக பலமுலுவ’ என அழைக்கப்படும் என்றும் இது, புத்தரின் போதனையான ‘சகல உயிர்களும் மகிழ்ச்சியோடு இருக்கட்டும்’ என்பதை அடிப்படையாகக் கொண்டது எனவும் அவர் இதன்போது கூறினார்.

(“சிங்க லே இயக்கம் வெளிப்பட்டது” தொடர்ந்து வாசிக்க…)

பத்தும் பலதும் முற்றும் உண்மை!

(மாதவன் சஞ்சயன்)

கார்த்திகை மாதம் புண்ணியம் தேடி காசிவரை போனேன். செய்த பாவங்கள் கங்கையில் கரைந்திருக்கும் என்ற நிம்மதியில் திரும்பும் வேளை, காலமாற்றம் குளிர் காய்ச்சலை தந்து கை, கால் விரல்களை முடக்கிப் போட்டது. கூட வந்தவர் நாடு திரும்ப, நான் பயணிக்க இயலாமல் வைத்தியம் பார்த்து சில தினங்களின் முன்பே நாடு திரும்பினேன். வகுப்பறைக்கு ஆசான் வரும் வரை பாடம் நடத்தும் மாணவர் போல, என் மாணவனும் நான் நாடு திரும்பாத நிலை அறிந்து குருவை மிஞ்சிய சீடனை போல, பத்திரிகைகளில் தானும் தொடர் கட்டுரைகள் எழுத தொடங்கி விட்டான்.

(“பத்தும் பலதும் முற்றும் உண்மை!” தொடர்ந்து வாசிக்க…)

ஜனாதிபதியை கொல்ல முயற்சி: குற்றவாளியை மன்னிக்க ஜனாதிபதி இணங்கினார்

ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவை, படுகொலை செய்வதற்கு முயன்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட வழக்கின் பிரதிவாதிக்கு மன்னிப்பு வழங்குவதற்கு ஜனாதிபதி தயாராக இருப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் கவனத்துக்கு நேற்று வியாழக்கிழமை கொண்டுவந்துள்ளது.

(“ஜனாதிபதியை கொல்ல முயற்சி: குற்றவாளியை மன்னிக்க ஜனாதிபதி இணங்கினார்” தொடர்ந்து வாசிக்க…)

முரண்பட்ட செய்திகள்

சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முனைப்புக்கள்; சுரேஷ் பிரேமச்சந்திரன்!!!!!

வடக்கு மாகாண முதலமைருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைக்க சில தரப்புக்கள் முனைவதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ். ஊடக அமையத்தில் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிடும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சுரேஸ் குறிப்பிட்டுள்ளதாவது, முதல்வருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைக்கும் முனைப்புக்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் உள்ள ஒரு கட்சியின் உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

(“முரண்பட்ட செய்திகள்” தொடர்ந்து வாசிக்க…)

மீண்டும் நோர்வே ?????

நோர்வே – இலங்கை இடையே மீண்டும் அரசியல் உறவுகளை மீளப்புதுப்பித்துக்கொள்ளும் நோக்குடன் நோர்வே வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரெண்ட் ஒருநாள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று கொழும்பு வருகின்றார். 2005ஆம் ஆண்டுக்குப் பின்னர் நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு வருகை தருவது இதுவே முதல்தடவையாகும். இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட பல தரப்பினருடன் பேச்சுகளில் ஈடுபடவுள்ளார்.

(“மீண்டும் நோர்வே ?????” தொடர்ந்து வாசிக்க…)

புதிய அரசியலமைப்பைக் குழப்பிவிடுவாரா விக்னேஸ்வரன்?

புதிய அரசியலமைப்பொன்றை நிறைவேற்றிக் கொள்வதையே, புத்தாண்டில் தாம் நிறைவேற்ற வேண்டிய அதி முக்கிய கடமையாக அரசாங்கம் கருதுவதாகத் தெரிகிறது. உண்மையிலேயே, புதிய அரசியலமைப்பென்று கூறப்பட்டாலும், பிரதானமாக மூன்று முக்கிய விடயங்கள் தொடர்பாகவே அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வரப்படப் போகிறது. நிறைவேற்று ஜனாதிபதி முறையை முற்றாக ஒழித்தல், தேர்தல் முறையில் சீர்த்திருத்தம் கொண்டு வருதல் மற்றும் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணுதல் ஆகியனவே அந்த மூன்று விடயங்களாகும்.

(“புதிய அரசியலமைப்பைக் குழப்பிவிடுவாரா விக்னேஸ்வரன்?” தொடர்ந்து வாசிக்க…)