தமிழினியின் புத்தகத்துக்கு…….?

லூசுப் பயலுகளே.
தமிழினியின் புத்தகத்துக்கு அகரமுதல்வனின் எதிர்வினைதான் அந்தக் கதை. இந்தக் கண்டறியாத கைப் புண்ணுக்கு கண்ணாடி எதுவும் தேவையில்லை. இந்த வகையறா எதிர்வினை எத்தகைய உளவியலில் இருந்து முன்வைக்கப் படுகின்றன என்பதுதான் கேள்வி.

(“தமிழினியின் புத்தகத்துக்கு…….?” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் (பதிவு 4)

வரணி மகாவித்தியாலயம் அவருக்கு ஓரளவு நிம்மதி கொடுத்தது.எமது பெரிய அண்ணன் பத்தாவது ஒருவாறாக சித்தியடைந்தார்.அம்மாவும் திரும்பி வந்துவிட்டார்.வீட்டு நிலைமைகள் ஓரளவு வழமைக்குத் திரும்பின. அம்மா இரண்டரை வருடம் காங்கேசன்துறை வைத்தியசாலையில் இருக்க வேண்டிய பிரதான காரணம் அங்கே கச நோய் பற்றிய விபரமான டாக்ட்ரை இல்லாமல் போனதே.பின்னாளில் லண்டனில் படித்து வந்த டாக்டர் ஒருவரே பல நோயாளிகளைப் பரிசோதனை செய்து வீட்டுக்கு அனுப்பினார்.அதுவரை காலமும் அந்த நோயாளிகள் சீமந்து ஆலையின் புகையை சுவாசித்ததே மிச்சம்.ஆயினும் அம்மாவை பூரண குணப்படுத்தியது தியாகேசர் என்கிற நாட்டு வைத்தியர்தான்.

(“பற்குணம் (பதிவு 4)” தொடர்ந்து வாசிக்க…)

கமிலோ சியன்பியுகோஸ். சரியான் ஆயுத பயிற்சி பெறாததால் தலைவர் பிடல் காஸ்ட்ரோ….

 

12 பேரை மட்டுமே ஏற்றிச்செல்ல வடிவமைக்கப்பட்ட படகு அது , அளவுக்கு அதிகமான பாரங்களுடன் 81 பேர் பயணம் செய்தாக வேண்டும். படகில் ஆட்களை ஏற்றும் பொறுப்பில் இருந்தவர் தலைவரிடம் வந்து அனுமதிகேட்டார் “இன்னுமொரு நண்பர் நம்மோடு பயணம் செய்ய விரும்புகிறார்”. தலைவர் அந்த புதிய நபரை பார்த்தார் ஏற்கனவே அவருக்கு அறிமுகமான மனிதர்தான். மெலிந்த தோற்றம், சற்று குட்டையான உருவம், ஆள் கணக்கிற்கு வரட்டும் என்று நினைத்திருப்பார் போல, அந்த தலைவர் ஒப்புக்கொண்டார்.

(“கமிலோ சியன்பியுகோஸ். சரியான் ஆயுத பயிற்சி பெறாததால் தலைவர் பிடல் காஸ்ட்ரோ….” தொடர்ந்து வாசிக்க…)

சிலோன் விஜயேந்திரன்

திருவல்லிகேணியில் கெல்லட் ஸ்கூல் எதிரில் என் அறைக் கதவு தட்டிவிட்டு அமைதியாக நின்றிருந்த அந்த மனிதரை பார்த்ததும் துக்கி்வாரிப் போட்டது எனக்கு. தோள்பட்டையில் புரளும் ப்ரவுன் கலர் முடி, ஆஜானுபாகு தோற்றம், முரட்டு ஷூக்கள் என்று திகில் கிளப்பினார். அவர் நடிகர் சிலோன் விஜயேந்திரன்.
’வணக்கம் தோழரே .உள்ள வரலாமா’ கனிவான அவரது குரல் அவரை பற்றிய என் எண்ணத்தை மாற வைத்தது. ‘வாங்க தோழர்’ நிங்க மு.மேத்தாகிட்ட இருகறதா நண்பர்கள் சொன்னாங்க அதான் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்.’ என்று எனக்கு அறிமுகமானார். பேச்சில் ஈழத்தின் வாசம் அதிகமிருக்கும். அப்போதிருந்து நல்ல நண்பரானார்.

(“சிலோன் விஜயேந்திரன்” தொடர்ந்து வாசிக்க…)

மஹிந்தவும் வந்தார்

கூட்டு எதிரணியினரால் நடத்தப்படும் மக்கள் பொதுக் கூட்டமொன்று கொழும்பு ஹைட் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது. இதில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் தற்போது கலந்துகொண்டுள்ளார். கூட்டம் ஆரம்பிக்கப்பட்டு சுமார் ஒன்றரை மணித்தியாலங்களின் பின்னர், அவர் அக்கூட்டத்திற்கு வந்து கலந்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈழத் தமிழருக்கு தொடரும் துயரம்….

சென்னை கும்மிடிப்பூண்டி ஈழ அகதிகள் முகாமைச் சேர்ந்த சுபேந்திரன் வயது 38 -ஐ ,கடந்த 23/02/16 அன்று கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையம் கூட்டிச்சென்ற , ஆய்வாளர் டில்லி பாபு அவரை அடித்து, உதைத்து கால்களை முறித்து விரட்டிவிட்டார். இந்த ஆய்வாளர் ஏற்கனவே ஒழுங்கற்ற நடவடிக்கை காரணமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டவராம்..

(“ஈழத் தமிழருக்கு தொடரும் துயரம்….” தொடர்ந்து வாசிக்க…)

ரவிராஜ், லசந்த விக்ரமதுங்க படுகொலை பின்னணியில் மஹிந்த, கோத்தாபய – சரத் பொன்சேகா

லசந்த விக்ரமதுங்க, ரவிராஜ் உட்பட அப்போது இடம்பெற்ற படுகொலைகளை ஒரு கும்பலே மேற்கொண்டன. அதன் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோதாபய ராஜபக்ஷ போன்றோரே செயற்பட்டனர் என அமைச்சர் பீல்ட் மாஸ்டர் சரத் பொன்சேகா தெரிவித்தார். அத்தகைய சம்பவங்கள் மறைக்கப்பட்டமைக்கும் அதுவே காரணம் என குறிப்பிட்ட அவர், லசந்த விக்ரமதுங்கவின் சகோதரர் மஹிந்த ராஜபக்‌ஷவின் அடிவருடியாகச் செயற்பட்டதே லசந்தவின் படுகொலை விவகாரம் மறைக்கப்பட்டமைக்கு மற்றொரு காரணம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

(“ரவிராஜ், லசந்த விக்ரமதுங்க படுகொலை பின்னணியில் மஹிந்த, கோத்தாபய – சரத் பொன்சேகா” தொடர்ந்து வாசிக்க…)

சிரியாவில் குர்திஷ்கள் சமஷ்டி பிரகடனம்

வடக்கு சிரியாவில் குர்திஷ் கட்டுப்பாட்டு பகுதியில் சமஷ்டி அரசொன்றை பிரகடனம் செய்ய குர்திஷ் தரப்பினர் திட்டமிட்டுள்ளனர். சிரிய உள்நாட்டு யுத்தத்திற்கு தீர்வு காணும் முயற்சியாக ஜெனீவாவில் அமைதிப் பேச்சுவார்த்தை இடம்பெற்று வரும் நிலையிலேயே குர்திஷ் நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே சிரியாவின் துருக்கி எல்லையை ஒட்டிய அலப்போ மாகாணத்தின் அப்ரின் மற்றும் கொபானி, ஹஸகாவில் ஜெஸீரா பகுதிகளில் குர்திஷ்கள் ஒரு சுயாட்சி நிர்வாகத்தை நடத்தி வருகின்றனர்.

(“சிரியாவில் குர்திஷ்கள் சமஷ்டி பிரகடனம்” தொடர்ந்து வாசிக்க…)

கொல்லவே நினைத்தேன்

மாவிலாறு அணையின் வான்கதவுகளை மூடியபோது, பயங்கரவாதிகளுக்கு எதிராக யுத்தம் செய்யவேண்டும் என்ற குரல் ஓங்கியிருந்தது. எனினும், எதில் அடிப்பது என்று மஹிந்த ராஜபக்ஷ கேட்டார்’ என்று கூறிய பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ‘எந்தவொரு ஜனாதிபதியும் யுத்தம் செய்யவேண்டாம் என்று கூறவில்லை’ என்றார்.

(“கொல்லவே நினைத்தேன்” தொடர்ந்து வாசிக்க…)

சந்திரிக்கா குமாரதுங்க.

“வடக்கு மாகாணத்தில் கணவனை இழந்த பெண்களிடம் இராணுவத்தினர் மட்டுமன்றி தமிழ் அரச ஊழியர்களும் பாலியல் இலஞ்சம் கோரும் ஈனச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.”
-முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க.