ஐவர் கொண்ட இளைஞர் குழுவை யாழ்ப்பாணம் குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் முன்னாள்,தற்போதைய யாழ் இந்துக்கல்லூரி மாணவர்களாவர். யாழப்பாணம் நகரப்பகுதி புறநகரங்களில் அண்மைக்காலமாக கொள்ளையடித்தல்இவாள்வெட்டு சம்பவங்கள் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்ட ஐவர் கொண்ட இளைஞர் குழுவை யாழ்ப்பாணம் குற்றப்புலனாய்வு பிரிவினர் நேற்றைய தினம்(8) மாலை கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து உள்ளுர் கைக்குண்டுகள்,வாள்,கத்தி,கைக்கோடாரி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

(“ஐவர் கொண்ட இளைஞர் குழுவை யாழ்ப்பாணம் குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.” தொடர்ந்து வாசிக்க…)

ரிஎன்ஏ புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் – கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரட்னே

ரிஎன்ஏ புதிய அரசியல் யாப்பு அம்சங்களை தமிழ் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரட்னே நேற்று மே 8இல் றெய்னர்ஸ்லேனில் இடம்பெற்ற சந்திப்பில் தெரிவித்தார். இச்சந்திப்பினை Non Residential Tamils of Sri Lanka – NRTSL ஏற்பாடு செய்திருந்தது.பாராளுமன்ற உறுப்பினரும் புதிய அரசியல் யாப்பு தயாரிப்புக்கு நிபுணத்துவ உதவியை வழங்கும் குழுவிற்கு பிரதம மந்திரியால் தலைவராக நியமிக்கப்பட்டவருமான கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரட்ண இலங்கைக்கான புதிய அரசியல் யாப்பும் தேவையும் சவால்களும் என்ற தலைப்பில் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து கேள்வி நேரமும் கலந்துரையாடலும் இடம்பெற்றது.

(“ரிஎன்ஏ புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் – கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரட்னே” தொடர்ந்து வாசிக்க…)

தமிழகத் தேர்தலும் இலங்கை தமிழரும்

(ருணாகரன்)

‘தமிழ்நாட்டுத் தேர்தல் களம் எப்பிடியிருக்கு? யார் அங்கே ஆட்சியைப் பிடிக்கப்போகிறார்கள்? யாருக்குச் சான்ஸ் இருக்கு? எந்தத்தரப்பினர் அதிகாரத்துக்கு வந்தால் நல்லது? அதாவது யார் பதவிக்கு வந்தால் ஈழத்தமிழருக்கு வாய்ப்பாக இருக்கும்?….’ என்ற விதமாக பேஸ்புக்கிலும் இணையத்தளங்களிலும் பத்திரிகைகளிலும் ஏராளமாக எழுதப்படுகின்றன. தினமும் ஆய்வுகள் வேறு நடந்து கொண்டிருக்கின்றன. எந்தத் தரப்பு அதிகாரத்தைக் கைப்பற்றும் என்ற ஊகங்கள், கருத்துக் கணிப்புகள் கூட நடக்கின்றன. பலர் இதில் முழுநேரக் கவனத்தை வேறு கொண்டிருக்கின்றனர். இதெல்லாம் தமிழ்நாட்டில் நடப்பது வேறு. அதற்கப்பால், ஈழத்தமிழர்கள், புலம்பெயர் தமிழர்கள் என்று இலங்கைத் தமிழர்கள் மத்தியில் நடக்கிறது. இதுவே நம் கவனத்துக்குரியது.

(“தமிழகத் தேர்தலும் இலங்கை தமிழரும்” தொடர்ந்து வாசிக்க…)

Engaging Caste in South Asian Diasporas

Commemorating the 125th birth anniversary of Dr. B.R. Ambedkar, the South Asia Research Group at York University is hosting a first of its kind oral history project, led by Dalit activists Thenmozhi Soundararajan and Sinthujan Varatharajah, that documents experiences of caste within South Asian diasporas in the GTA. As part of the commemoration, we will also be hosting the following public event:

Roundtable: Anti/Caste in South Asia and the Diasporas
(in collaboration with Centre for South Asian Studies, University of Toronto)

May 13 | 6:30-8:30 pm
Jackman Humanities Institute | University of Toronto St. George Campus

170 St. George Street, Tenth Floor
Toronto, ON M5R 2M8

Speakers: Thenmozhi Soundararajan (New York/San Francisco), Chinnaiah Jangam (Ottawa), Sinthujan Varatharajah (London/Berlin), Dharsan Siva (Toronto) and others.

வானவில் இதழ் 64

மீண்டும் ஆட்சி மாற்றத்துக்கான தேவை எழுந்துள்ளது!

இலங்கையின் பொருளாதார நெருக்கடி அபாயகரமான ஒரு நிலையை எட்டியுள்ளதாக சகல பொருளாதார நிபுணர்களும் சுட்டிக் காட்டியுள்ளனர். இதன் காரணமாக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்னொரு பக்கத்தில் ‘வற்’ வரி எனப்படும் பெறுமதி சேர் வரியை (Value Added Tax) அரசாங்கம் அதிகரித்துள்ளது. இவற்றின்; விளைவாக அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்கப் போவதாக உணவு நிலையங்களின் உரிமையாளர்களும், பேக்கரி உரிமையாளர்களும் அறிவித்துள்ளனர். போக்குவரத்துக் கட்டணங்களும் அதிகரிக்கவுள்ளன.

பற்குணம் டி.ஆர்.ஓ(பதிவு 27)

குச்சவெளியில் கட்டப்பட்ட சைவகோவிலை நிறுத்த சொன்னதை பற்குணத்தால் ஏற்க முடியவில்லை.அதே நேரம் அரசாங்க நிலத்தில் கட்டியிருந்தார்கள்.இந்த தடை உத்தரவு பற்றிய தகவலை மட்டும் வெளியிட்டு சம்பந்தப்பட்டவரகளுடம் சொன்னார்.
இதை அடுத்து குச்சவெளி-கோமரங்கடவல காட்டுப்பாதையில் திரியாயை இணைக்கும் கள்ளம்பத்தை என்னும் இடத்தில் குடியேற்றம் ஒன்றை ஆரம்பிக்க அன்றைய ஹொரவ்வப்பொத்தான எம்.பி அரச அதிபர் மூலம் ஒப்புதல் கேட்டார்.இது திட்டமிட்டலால் இன குடியேற்றத்துக்கு வழிவகுக்கும் என உணர்ந்த பற்குணம் அன்றைய கோமரங்கடவல டி.ஆர. ஓ விடம் கதைத்து அங்கே விலை உயர்ந்த மரங்கள் இருப்பதால் அந்த காடுகளை அழிக்க முடியாது என அறிக்கை கொடுத்தார்.இதனால் இங்கே சிங்கள குடியேற்றம் தடுக்கப்பட்டது.

(“பற்குணம் டி.ஆர்.ஓ(பதிவு 27)” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் டி.ஆர்.ஓ (பகுதி 26)

குச்சவெளியில் நாங்கள் இருந்த பங்களாவின் பின்னால் ஒரு அரசாங்க நெற் களஞ்சியம் ஒன்று கட்டப்பட்டு வந்தது.இந்த நெற் களஞ்சியத்தை அண்மித்த பகுதியில் கரடிமலை பக்கமாக ஒரு சைவ கோவிலை மீனவர்கள் கட்டியிருந்தார்கள்.அந்த கோவிலுக்கான சிலை மட்டும் வர தாமதமானதால்அது உடனடியாக இயங்கவில்லை .அந்த கோவில் அமைந்த இடம் அரசாங்கத்துக்கு உரியது.
(இந்த இடத்தில் உள்ள மலையில் இப்போது விகாரை அமைக்கப்பட்டுள்ளது.சிறுவனாக இருந்த காலத்தில் நாங்கள் இந்த மலைமேல் விளையாடினோம்)

(“பற்குணம் டி.ஆர்.ஓ (பகுதி 26)” தொடர்ந்து வாசிக்க…)

பனாமா ஆவணங்களில் 53 பேர் இலங்கையர்

பனாமாவில் மொசெக் பொன்சேகா நிறுவனத்தில், வரி ஏய்ப்புச் செய்வதற்காக பணத்தை வைப்பிலிட்டுள்ளதாக கூறப்படும் 200க்கும் மேற்பட்ட உலக நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பிரிவினர்களில், இலங்கையைச் சேர்ந்த 53 பேரும் இருப்பதாக துப்பறியும் பத்திரிக்கையாளர்களின் அனைத்துலக பேரவை அறிவித்துள்ளது.

(“பனாமா ஆவணங்களில் 53 பேர் இலங்கையர்” தொடர்ந்து வாசிக்க…)

யாழில் வாள், கத்தி உற்பத்தி செய்ய தடை

வாள்கள், ஆபத்தான கத்திகள் என்பவற்றை தொழிற்சாலைகள் உற்பத்தி செய்வதற்குத் தடையுத்தரவு பிறப்பித்துள்ள யாழ். மேல் நீதிமன்றம், அவற்றை வைத்திருப்பவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் உடனடியாகக் கையளிக்க வேண்டும் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் வாள் வெட்டுச் சம்பங்கள் அதிகரித்துள்ளதுடன் ஆபத்தான கத்திகளைக் காட்டி, அச்சுறுத்தி கொள்ளைகள் இடம்பெறுவதையடுத்தே இந்த உத்தரவை யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், திங்கட்கிழமை பிறப்பித்துள்ளார்.

(“யாழில் வாள், கத்தி உற்பத்தி செய்ய தடை” தொடர்ந்து வாசிக்க…)

புலம்பெயர்ந்த புலிகளே ஜாக்கிரதை

 

தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளுக்கு பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸ் உயர் மட்டக்குழு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் முக்கிய விசாரணையாளர்கள் 7 பேர் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை மீள உருவாக்கும் நோக்குடன் புலம்பெயர் நாடுகளிலிருந்து செயற்படுபவர்களை இலக்கு வைத்து குறித்த குழு தேடுதலில் ஈடுபட்டு வருவதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்தக்குழுவினர் இரண்டு பிரிவாக விசாரணைகள தீவிரமாக முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சர்வதேச பொலிஸாருடன் இணைந்து குறித்த குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது. யாழ்ப்பாணம் சாவகச்சேரி, மறவன் புலோ பகுதியில் தற்கொலை அங்கி மற்றும் கிளைமோர்கள் மீட்கப்பட்டதை தொடர்ந்து புலம்பெயர் நாடுகளில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.